Monday, December 08 2025 | 09:49:36 AM
Breaking News

புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ஆசிய- பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் 10-வது அமர்வு

Connect us on:

உள்ளடக்கிய பேரிடர் அபாய தரவு நிர்வாகம் குறித்த ஆசிய-பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் 10-வது அமர்வு புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்தியக் குழுவிற்கு உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணையமைச்சர்  நித்யானந்த் ராய் தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினரும் துறைத் தலைவருமான திரு ராஜேந்திர சிங் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் திரு மணீஷ் பரத்வாஜ் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றனர்.

பிராந்திய பேரிடர் மீள்தன்மை மற்றும் ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை திரு நித்யானந்த் ராய் தமது உரையில் வலியுறுத்தினார். இந்தியாவின் தலைமையிலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையிலும், ஆபத்து மதிப்பீடு, புவிசார் பயன்பாடுகள், தாக்க அடிப்படையிலான முன்னறிவிப்பு, முன்கூட்டிய எச்சரிக்கை தகவல்களை மக்களுக்கு பரப்புதல், பருவநிலை-எதிர்ப்பு உள்கட்டமைப்பு திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலை இந்தியா முன்னெடுக்கும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பேரிடர் மற்றும் பருவநிலை அபாயங்களைக் குறைக்க பிராந்திய கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது.   பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பேரிடர் அபாயக் குறைப்புக்கான புதுமையான உத்திகளை செயல்படுத்துவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டுடன் அமர்வு முடிந்தது. விவாதங்களின் போது, முந்தைய ஆண்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 2026 இல் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் 20206-2030 பணித் திட்டம் ஆகியவை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த பத்தாவது அமர்வில், பங்களாதேஷ், ஈரான், மாலத்தீவுகள், கஜகஸ்தான், மங்கோலியா, துருக்கி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதிநிதிகள், தஜிகிஸ்தானின் பார்வையாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த அமர்வில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின்  நிர்வாக இயக்குநர் திரு. ஸ்டீபன் கூப்பர், ஏபிடிஐஎம் இயக்குநர் திருமதி. லெடிசியா ரோசானோ, மூத்த ஒருங்கிணைப்பாளர் திரு. மொஸ்தபா மோகன்கேக் மற்றும் ஈரானில் உள்ள APDIM செயலகம் மற்றும் பார்வையாளர் அமைப்புகளின் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 …