Tuesday, December 30 2025 | 02:13:45 AM
Breaking News

புதிய மின்சார வாகன கொள்கை

Connect us on:

நாட்டில் மின்சார வாகன தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்க 2024-ல் பின்வரும் புதிய திட்டங்களை மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனங்கள் திட்டம்: இந்தத் திட்டம் ரூ.10,900 கோடி செலவில் 2024 செப்டம்பர் 29  மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மின்சார இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், மின்சார டிரக்குகள், மின்சாரப் பேருந்துகள், மின்சார அவசர ஊர்திகள், மின்சார் வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் மற்றும் அதன் பரிசோதனை முகமைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமரின் மின்சார பேருந்து சேவைகளுக்கான கட்டணப் பாதுகாப்பு நடைமுறைகள் திட்டம்:

28.10.2024 அன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ரூ.3,435.33 கோடி செலவில் 38,000-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளின் உற்பத்தியை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டம் 2024 மார்ச் 15 அன்று அறிவிக்கப்பட்டு இதற்கான  விண்ணப்பங்கள் மூலம் குறைந்தபட்சம் ரூ.4150 கோடி முதலீடு செய்யவும் மூன்றாவது  ஆண்டின் இறுதியில் குறைந்தபட்சமாக உள்நாட்டு மதிப்புக் கூட்டுத் தொகையாக 25 சதவீதமும் மற்றும் ஐந்தாவது ஆண்டின் இறுதியில் இது 50 சதவீதமும் ஈட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறைதீர்க்கும் பணிகளை விரைவுபடுத்த பயணிகளுக்கு உதவும் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையிலும், வழித்தட எண்ணிக்கையிலும் பெரிய உயர்வுக்கு வழிவகுத்தது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டு வந்தாலும், விமான தாமதங்கள், பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள், பொருள்கள் தொடர்பான சிக்கல்கள், நெரிசல், நீண்ட வரிசை, நெரிசல் மிகுந்த காலங்களில் போதுமான வசதிகள் இல்லாதது போன்ற தொடர்ச்சியான சவால்களையும் ஏற்படுத்தியது. பயணிகளை மையமாகக் கொண்ட இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த  பதில் செயல்முறை அவசியம். இந்த தேவைகளை உணர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தலைமையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், நிரந்தரமாக 24 மணி நேரமும் செயல்படும் பயணிகளுக்கான உதவி கட்டுப்பாட்டு அறையை நிறுவ முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளது. டிசம்பர் 03, 2025 முதல் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திரு சமீர் குமார் சின்ஹா, இந்த மையத்தை தினமும் நேரில் பார்வையிட்டு, செயல்பாடுகளை ஆய்வு செய்து, பயணிகளின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்கிறார்.  குறைகளைத் தீர்ப்பதில் வேகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.