Tuesday, December 23 2025 | 02:53:32 AM
Breaking News

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த, ரூ.127 கோடிக்கு மேல் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது

Connect us on:

2025-26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்தத் தொகை, 2025-26-ம் ஆண்டிற்கான 15-வது நிதிக் குழுவின் கீழ் வழங்கப்படும்  மானியங்களின் இரண்டாவது தவணையாகும். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ள மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் 9 மாவட்ட பஞ்சாயத்துகள், 74 வட்டார பஞ்சாயத்துகள் மற்றும் 2,901 கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த மானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின்  பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் மூலம், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கான 15-வது நிதிக் குழு மானியங்களை மாநிலங்களுக்கு விடுவிக்க அரசு பரிந்துரைக்கிறது, பின்னர் அவை நிதி அமைச்சகத்தால் விடுவிக்கப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட மானியங்கள் ஒரு நிதியாண்டில் 2 தவணைகளாகப் பரிந்துரைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றன. இந்த நிபந்தனையில்லாத  மானியங்கள், ஊதியங்கள் மற்றும் பிற செலவுகளைத் தவிர, அரசியலமைப்பின் பதினொன்றாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது துறைகளின் கீழ், அந்தந்தப் பகுதிக்குத் தேவையான தேவைகளுக்காக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும். இந்த நிதியை, சுகாதாரம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல், குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி போன்ற அடிப்படை சேவைகளுக்காகப் பயன்படுத்தலாம்.

About Matribhumi Samachar

Check Also

இந்தூரில் நடைபெற்ற அடல் பிகாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (21.12.2025) பங்கேற்றார். இந்த நிகழ்வை அடல் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. திருக்குறளில் இருந்து ஒரு குறளை நினைவுகூர்ந்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்றாலும், ஒருவரின் செயல்கள் மூலம் தனிச்சிறப்புகள் வெளிப்படுகின்றன என்று கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் சாதாரண மனிதர் அல்ல என்றும், லட்சியம், கொள்கைகள், மதிப்புகளில் உறுதியுடன் இருந்தார் என்றும் அவர் கூறினார். அரசியல்வாதி, நிர்வாகி, நாடாளுமன்றவாதி, கவிஞர், எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த மனிதராக அவர் திகழ்ந்தார் என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் பொது நிர்வாகத்தை திறம்பட மேற்கொண்டார் என்றும் அதனால்தான் வாஜ்பாயின் பிறந்தநாள் நல்லாட்சி தினமாக கடைபிடிப்படுகிறது என்றும் அவர் கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், அது நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தங்க நாற்கர சாலைத் திட்டம் …