Monday, December 08 2025 | 05:39:45 PM
Breaking News

நகர்ப்புற துறைகளுக்கான முதலீடுகள் 16 மடங்கு அதிகரித்து இப்போது ரூ.28,52,527 கோடியாக உள்ளது

Connect us on:

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்சக்தித் துறை அமைச்சர் திரு மனோகர் லால் புதுதில்லியில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் நகர்ப்புறத் துறை முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2004-14-ம் ஆண்டில் சுமார் 1,78,053 கோடி ரூபாயாக இருந்த முதலீடுகள் 2014-ஆம்  ஆண்டு முதல் 16 மடங்கு அதிகரித்து இப்போது 28,52,527 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த அதிகரிப்பு 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைவதற்கான அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுவதாக அவர் கூறினார்.

நகரமயமாதலின் விரைவான விகிதம், நாட்டின் வளர்ச்சி உத்தியின் மைல்கல்லாக நகர்ப்புற வளர்ச்சியை ஆக்கியுள்ளது என்று திரு மனோகர் லால் குறிப்பிட்டார். கடந்த ஆறு மாதங்களில், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, அதிக விரைவுடனும், திறமையுடனும் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அம்ருத் திட்டத்தின் சாதனைகள்

புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் கீழ் உள்ள முக்கிய சாதனைகளையும் மத்திய அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

* 4,649 எம்எல்டி நீர் சுத்திகரிப்பு திறன்.

* 4,429 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு திறன்.

நவீன நகரங்கள் மற்றும் புதிய நகரங்கள் திட்டம்

நவீன நகரங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விரைவான நகரமயமாக்கலின் பிரச்சினைகளை நிர்வகிக்க புதிய நகரங்கள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக திரு மனோகர் லால் அறிவித்தார்.

நகர்ப்புற நகர்வை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதை அமைச்சர் எடுத்துரைத்தார்.

About Matribhumi Samachar

Check Also

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.