Friday, May 01 2026 | 07:09:11 AM
Breaking News

மகளிர் உதவி எண் மூலம் 31.10.2024 வரை 81.64 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவி

Connect us on:

மகளிர் உதவி எண் திட்டம் 2015 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மகளிர் 181 என்ற தொலைபேசி எண் மூலம் காவல்துறை, மருத்துவமனைகள், சட்ட சேவை மையங்கள்  போன்ற உரிய முகமைகளுடன் தொடர்பு கொள்ளலாம். பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்து பெண்கள் இந்த எண்ணுக்கு க்கு தொடர்பு கொள்ளலாம். 24x7x365 அவசரகால மற்றும் அவசரமற்ற காலங்களில் உதவிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது பெண்கள் நலத் திட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. தற்போது, மகளிர் உதவி எண் 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்படுகிறது. (மேற்கு வங்க அரசு மகளிர் உதவி எண் சேவையை செயல்படுத்தவில்லை) இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 31.10.2024 வரை 81.64 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உதவி பெற்றுள்ளனர்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

இந்தியாவில் வீட்டு கூரையில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் மற்றும் நெட் மீட்டர் கருவி

PM சூர்யா கர் திட்டம் 2026: 31 லட்சம் வீடுகளுக்கு இலவச மின்சாரம் – முழு விவரம்

இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும், சாமானிய மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கவும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட PM சூர்யா …