Tuesday, March 11 2025 | 11:10:05 AM
Breaking News

நாடாளுமன்றக் கேள்வி: அணு மின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள்

Connect us on:

அணுமின் உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8180 மெகாவாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகாவாட்டாக உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2070 ஆம் ஆண்டு வாக்கில்  நாட்டின் எரிசக்தி கலவையை நிகர பூஜ்ஜியத்திற்கு மாற்றுவதற்காக, நாட்டின் எரிசக்தித் துறையை கார்பன் நீக்கம் செய்வதற்கான உத்தியின் ஒரு பகுதியாக அணுசக்தி விரிவாக்கம் உள்ளது.

இந்திய அணு மின் கழகம் அமலாக்கும் திட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு மின் திட்டம் 3,4,5,6 ஆகியவற்றில் மொத்தம் 2000 மெகா வாட் மின்னுற்பத்தியும் அடங்கும்

தொலைதூரப் பகுதிகளில் சிறிய  அணு உலைகளை நிறுவி, அங்கு மொத்த எரிசக்தித் தேவையை சிறிய அணு உலைகள் மூலம் பூர்த்தி செய்ய இயலும். இந்த ஆலைகளை சுய மின் உற்பத்தி நிலையங்களாக பயன்படுத்த முடியும், எனவே பிரதான மின் கட்டமைப்புடன் இணைப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

கிராமங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பாதையாகும்: குடியரசுத் துணைத் தலைவர்

மொஹாலியில் தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் மேம்பட்ட தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைக் …