Monday, December 08 2025 | 05:18:55 PM
Breaking News

புதிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு, செயல்பாடுகள் குறித்த பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்

Connect us on:

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2024, டிசம்பர் 17 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. முந்தைய பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலை பெருநிறுவனமயமாக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட புதிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிதி புள்ளிவிவரங்கள், நவீனமயமாக்கல், மூலதன செலவினம், ஏற்றுமதி, உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து குழு உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது.

முக்கியமான பொருட்களை உள்நாட்டுமயமாக்குதல், உற்பத்தி வசதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றில் புதிய பொதுத்துறை நிறுவனங்களின் முயற்சிகளை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். நிறுவனமயமாக்கலுக்குப் பிறகு, புதிய பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் தரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் பாராட்டினார். மிகக் குறுகிய காலத்தில் இந்த பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை மற்றும் லாபத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டுமயமாக்கலை முன்னெடுத்துச் செல்லும் என்றும், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை இணைத்து தரம், விற்றுமுதல், லாபம் மற்றும் பிற நிதி அளவீடுகளில் புதிய பரிமாணங்களை அமைக்கும் என்றும் திரு ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு ஆயுதப்படைகளுக்குப் பிரதமர் நன்றி

ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது  கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”