Friday, December 05 2025 | 07:18:24 PM
Breaking News

Matribhumi Samachar

பீகார் சிறப்பு தீவிர திருத்தம் 2025; தினசரி செய்திக் குறிப்பு (1 ஆகஸ்ட் மாலை 3மணி முதல் 9 ஆகஸ்ட் காலை 9 மணி வரை)

அ. வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான சேர்க்கை மற்றும் நீக்கம் பற்றிய கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்கள் அட்டவணையில் சேர்க்க வேண்டியவை வரிசை எண்   தேசிய கட்சிகள்   வாக்குச்சாவடி முகவர்கள்   பெறப்பட்டவை   7 நாட்களுக்குப் பின்பு தீர்வு   1. ஆம் ஆத்மி கட்சி   1 0 0 2.             பகுஜன் சமாஜ் கட்சி   74 0 0 3.             பாரதிய ஜனதா கட்சி   53,338 0 0 4.             இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்)   899 0 0 5.             இந்திய தேசிய காங்கிரஸ்   17,549 0 0   6. தேசிய மக்கள் கட்சி   7 0 0 மாநில கட்சிகள் …

Read More »

சஞ்சார் சாத்தி மொபைல் செயலி 21 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது – 6 மாதங்களில் 50 லட்சம் பேர் பதிவிறக்கம்

தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் சாத்தி செயலி, தொலைத்தொடர்பு பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த மொபைல் செயலி ஆறு மாதங்களுக்குள் 50 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. இந்தியாவின் பரந்த மொழியியல், பிராந்திய பன்முகத்தன்மைகளை அங்கீகரித்து, ஆங்கிலம், இந்தி மற்றும் 21 பிராந்திய மொழிகளில் இந்த செயலியின் பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகளையும், ஏமாற்றுத் தகவல் அடங்கிய செய்திகளைப் பற்றி புகாரளிப்பது இதன் மூலம் எளிதாகி உள்ளது.  5.35 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கைபேசிகளை மீட்கவும், மக்களின் புகார்களின் அடிப்படையில் 1 கோடிக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகளைத் துண்டிக்கவும், சக்ஷு அம்சத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட 29 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் எண்களை செயலிழக்கச் செய்யவும் இந்த சஞ்சார் சாத்தி வழிவகுத்துள்ளது. சஞ்சார் சாத்தி தளத்தை 16.7 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர். இது மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தளத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தொலைத்தொடர்புத் துறை, நிதி மோசடி அபாயம் குறித்த தகவல் வழங்கும் நடவடிக்கையையும் செயல்படுத்தியுள்ளது. இது நிதி மோசடி அபாயத்துடனான அவற்றின் தொடர்பின் அடிப்படையில் மொபைல் எண்களை மதிப்பிட்டு வகைப்படுத்துகிறது. இந்தக் கருவி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், யுபிஐ சேவை வழங்குநர்கள் போன்றோர், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது. 2023 மே 16, 2023 அன்று தொடங்கப்பட்ட இணையதளத்தின் வெற்றியை அடுத்து 2025 ஜனவரி 17 அன்று சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொலைத்தொடர்பு பாதுகாப்பு சேவைகளை நேரடியாகவும் வசதியாகவும் அணுக அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் இந்த செயலி, பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு அடையாளத்தைப் பாதுகாக்கவும், மோசடிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் அளிக்கிறது. …

Read More »

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது

பாதுகாப்பு உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மைல்கல் முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.27 லட்சம் கோடியை விட 18% வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்த மதிப்பு ரூ.79,071 கோடியாக இருந்தது என்பதைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது 90% அதிரடியான வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த மைல்கல்லை அடைவதில் பாதுகாப்பு உற்பத்தித் துறை மற்றும் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களான பாதுகாப்பு …

Read More »

குஜராத்தின் பர்தா வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெறும் உலக சிங்க தினம் 2025 கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் மற்றும் குஜராத் முதல்வர் திரு பூபேந்தர் படேல் கலந்து கொள்கின்றனர்

குஜராத் அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், ஆகஸ்ட் 10, 2025 அன்று குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள பர்தா வனவிலங்கு சரணாலயத்தில் உலக சிங்க தினம் – 2025 ஐ கொண்டாட உள்ளது. குஜராத் முதல்வர் திரு பூபேந்தர் படேல், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குஜராத் வனத்துறை அமைச்சர் திரு முலுபாய் பெரா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது பிரதிநிதிகள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சிங்க தினம், உலகளவில் சிங்கங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குஜராத்தில், சௌராஷ்டிரா பகுதியில் மட்டுமே காணப்படும் ஆசிய சிங்கம் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார அதிசயமாகும். இந்த இனம் நீடித்திருப்பதையும் அதன் வளர்ச்சியையும் உறுதி செய்வதில் வனத்துறை அமைச்சகமும் குஜராத் மாநிலமும் புராஜெக்ட் லயன் மற்றும் மாநில அரசின் தலைமையின் தொடர்ச்சியான முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன. ‘காட்டின் ராஜா’ என்று அழைக்கப்படும் ஆசிய சிங்கத்தின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ‘உலக சிங்க தினம்’ என்ற பிரமாண்டமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த கம்பீரமான விலங்குகள் சௌராஷ்டிராவின் 11 மாவட்டங்களில் சுமார் 35,000 சதுர கி.மீ பரப்பளவில் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் 32% அதிகரித்துள்ளது, மே 2025 சிங்கங்களின் எண்ணிக்கை மதிப்பீட்டின்படி 891 ஆக உயர்ந்துள்ளது. போர்பந்தர் மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்களில் 192.31 சதுர கி.மீ பரப்பளவில் பர்தா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. ஆசிய …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் உரையாற்றினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை இன்று (07 ஆகஸ்ட், 2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது பங்களிப்பு ஒரே சகாப்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். புகழ்பெற்ற விஞ்ஞானியான எம் எஸ் …

Read More »

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952-ன் பிரிவு 4-ன் துணைப் பிரிவுகள் (4) மற்றும் (1) இன் கீழ், தேர்தல் ஆணையம் 07.08.2025 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், அதன் பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் மற்றும் வாக்களிப்பு தேதி (தேவைப்பட்டால்) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இந்த அறிவிக்கை இன்று இந்திய அரசிதழில் …

Read More »

அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களில் வடகிழக்கு மாநில உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ் உள்ள நெட்வொர்க் தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பிடுகிறது

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), வடகிழக்கு உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான அதன் தனிப்பட்ட தரவு தர முடிவுகளை வெளியிட்டது, இது அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர், நஹர்லகுன் மற்றும் நாகாலாந்தின் திமாபூர், கோஹிமா மற்றும் நெடுஞ்சாலை எண்-13 வழியாக இட்டாநகரில் இருந்து பும்லா பாஸ் (தவாங்) நெடுஞ்சாலை பாதையை உள்ளடக்கியது. கொல்கத்தாவின் ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனைகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன முக்கிய …

Read More »

நாடு முழுவதும் சமையல் எண்ணெய்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்வதற்கும் சில்லறை விலைகளை நிலைப்படுத்துவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை

சமையல் எண்ணெய் தரவு இணக்கத்தை அதிகரிக்க, தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணை, 2011 ஐ மத்திய அரசு திருத்துகிறது. இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணை, 2011 இல் ஒரு திருத்தத்தை அறிவித்துள்ளது. முதலில் 1955 ஆம் …

Read More »

சைபர்ஸ்பேஸ் செயல்பாடுகள் மற்றும் கடல் வழி தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடுகளின் வகைப்படுத்தப்படாத பதிப்புகளை பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி முறையாக வெளியிட்டார்

புதுதில்லியில் ஆகஸ்ட் 07, 2025 அன்று நடந்த தலைமைப் பணியாளர்கள் குழு கூட்டத்தின் போது, பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி (CDS) ஜெனரல் அனில் சவுகான் மற்றும் இராணுவ விவகாரத் துறை செயலாளர் ஆகிய இருவரும் சைபர்ஸ்பேஸ் (இணையவெளி) செயல்பாடுகள் மற்றும் கடற்படை மற்றும் தரையிறங்கும் படைகளால் கடலில் இருந்து தொடங்கப்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கூட்டுக் கோட்பாடுகள் பற்றிய பதிப்புகளை முறையாக வெளிப்படுத்தினர். இந்தக் கோட்பாடுகள் பற்றிய தகவல்களை வெளிப்படையாக …

Read More »

காசியாபாத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையத்தில் மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு பயிலரங்கு தொடங்கியது

ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் (PCIM&H), “மூலிகை மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை” (பணிக்குழு-1) மற்றும் “மூலிகை மருந்துகளின் செயல்திறன் மற்றும் நோக்கம் கொண்ட பயன்பாடு” (பணிக்குழு-3) குறித்த உலக சுகாதார அமைப்பு – மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச ஒழுங்குமுறை ஒத்துழைப்பு அமைப்பின் பயிலரங்கின் தொடக்க அமர்வை இன்று காஜியாபாத்தில் உள்ள அதன் தலைமையகத்தில் நடத்தியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கை ஆயுஷ் …

Read More »