தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின், 28.11.2024 நிலவரப்படி, நாட்டில் 25,385 மகளிர் நல கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் 1,44,396 பால் கூட்டுறவுச் சங்கங்களில் கிராமப்புற மகளிர் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு: (i) பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002, திருத்தச் சட்டம், 2023 ஆகியவற்றின்படி பெண்களுக்கு இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கூட்டுறவுத் துறையில் …
Read More »தேசிய சட்டமுறை எடையியல் இணையதளம்
மாநில சட்டமுறை எடையளவு துறைகள் மற்றும் அதன் இணைய தளங்களை ஒருங்கிணைத்து தேசிய சட்டமுறை எடையியல் இணையதளத்தை மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உருவாக்கி வருகிறது. இந்த இணையதளத்தில் வர்த்தக உரிமங்கள் வழங்குதல், சரிபார்ப்பு, அதன் அமலாக்கம் மற்றும் இணக்க நடைமுறைகள் ஆகியவற்றை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், தேசிய சட்டமுறை எடையியல் இணையதள பங்குதாரர்கள் பல மாநில இணையதளங்களில் பதிவு செய்வதற்கான தேவையை …
Read More »நடப்பாண்டு காரீப் சந்தைப் பருவத்தில், பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து சுமார் 172 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
பஞ்சாபில், நெல் மாநில அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதாய விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சீரான தரவுகளின்படி குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும், ஏதேனும் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உணவு தானியங்களுக்கு தரநிலையில் தளர்வு அளிக்கப்பட்டு சுமூகமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. 2024-25 காரீப் பருவ காலத்தில், பஞ்சாபில் உள்ள விவசாயிகளிடமிருந்து சுமார் 172 லட்சம் …
Read More »முன்னேறும் மாவட்டங்களில் 4ஜி மொபைல் சேவைகள்
ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள முன்னேறும் ஆர்வ மாவட்டங்களில் சேவை இல்லாத 7,287 கிராமங்களில் 4,779 செல்பேசி கோபுரங்களை நிறுவுவதன் மூலம் 4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்தகைய கிராமங்கள் அனைத்துக்கும் மொபைல் சேவையை படிப்படியாக வழங்குவதற்கு இத்திட்டம் வகைசெய்கிறது. 31.10.2024 நிலவரப்படி, 3,352 கிராமங்களில் சேவை கிடைக்கும் வகையில் 2,177 மொபைல் கோபுரங்கள் அமைக்ககப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் மொபைல் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்ட கிராமங்களின் பட்டியல் https://dot.gov.in/circular-and-notifications/3294 என்ற இணையதள இணைப்பில் உள்ளது. மக்களவையில் இன்று கேள்வி …
Read More »போலி அழைப்புகள், மோசடி அழைப்புகளைக் கையாள்வது
தொலைத் தொடர்புத் துறை (DoT) மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக சஞ்சார் சாத்தி இணையதளத்தை (www.sancharsaathi.gov.in) உருவாக்கியுள்ளது, இது சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகள், தேவையற்ற வணிக தகவல்தொடர்புகள் (UCC) குறித்து புகாரளிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து வருவதாகத் தோன்றும் சர்வதேச ஏமாற்று அழைப்புகளை அடையாளம் காணவும் தடுக்கவும் தொலைத் தொடர்புத் துறையும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் (டி.எஸ்.பி) ஸ்பூஃப்ட் இன்கம்மிங் சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளனர். போலி டிஜிட்டல் கைதுகள், ஃபெடெக்ஸ் மோசடிகள், அரசு, காவல்துறை அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற மோசடிகளை தடுக்க நடவடிக்கைகள் …
Read More »தொலைத் தொடர்பு சாதனங்களின் இறக்குமதியைக் குறைக்க வேண்டும்
நாட்டில் தொலைத் தொடர்பு சதனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் தொலைத் தொடர்புத் துறையில் இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இறக்குமதியைக் குறைப்பதற்காக, தொலைத்தொடர்பு மற்றும் கட்டமைப்பு தயாரிப்புகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் 2021 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.12,195 கோடி. மொத்தம் 33 தொலைத்தொடர்பு மற்றும் கட்டமைப்பு சாதனங்களின் உற்பத்தி. 4 முதல் 7% வரை ஊக்கத்தொகை. …
Read More »அதிவேக கண்ணாடி இழை நார் இணைய இணைப்பு
பாரத் நெட் திட்டம் படிப்படியாக நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குகிறது. டிஜிட்டல் பாரத் நிதியத்திலிருந்து நிதியளிக்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டத்தின் மூலம், பிஎஸ்என்எல் பாரத் நெட் உத்யாமிஸ் எனப்படும் உள்ளூர் கூட்டாளர்கள் / தொழில்முனைவோர் மூலம் பாரத்நெட் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி கிராம பஞ்சாயத்துகள் / கிராமங்களில் அதிவேக கண்ணாடி இழை நார் இணைய இணைப்புகளை வழங்கியுள்ளது. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் …
Read More »நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக தொலைத்தொடர்புத் துறை கடந்த 5 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது
நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்கும் அதன் தரத்தை உயர்த்துவதற்கும் தொலைத்தொடர்புத்துறை கடந்த 5 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு – நாட்டின் தொலைதூர, கிராமப்புற பகுதிகளில் அதிவேக இணையம் / தரவுமொபைல் சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், எல்லைப் பகுதிகள், பிற முன்னுரிமைப் பகுதிகளில் மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பிராந்தியம், அந்தமான் – நிக்கோபார், லட்சத்தீவு தீவுகளில் மொபைல் …
Read More »அஞ்சல் ஏற்றுமதி மையங்கள்
மாவட்டந் தோறும் தலா ஒரு அஞ்சலக ஏற்றுமதி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அஞ்சலகங்கள் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக இதுவரை நாடு முழுவதும் 1013 அஞ்சலக ஏற்றுமதி மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த மையங்கள் எல்லை தாண்டிய மின்னணு வர்த்தகத்திற்கு உதவுவதுடன், கைவினைஞர்கள், நெசவாளர்கள், உள்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளை அடைய உதவுகின்றன. ரத்தினக் கற்கள், செயற்கை கற்களுடன் கூடிய நகைகள், துணி, ஆடைகள், தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஆயுர்வேத மற்றும் மூலிகை பொருட்கள், மசாலாப் பொருட்கள், இசைக்கருவிகள், கைக்கடிகாரங்கள், வீட்டு உபகரணங்கள், தேயிலை, காபி, பிற …
Read More »நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களில் பசுமை முன்முயற்சிகள்
நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா லிமிடெட், என்எல்சி இந்தியா லிமிடெட், சிங்கரேனி நிலக்கரி கம்பெனி லிமிடெட் ஆகியவை 2023-24-ம் நிதியாண்டு வரை நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 55312 ஹெக்டேர் (ஹெக்டேர்) நிலத்தை உயிரியல் ரீதியாக மீட்டெடுத்து காடுகளை வளர்த்துள்ளன. தோட்ட வகை பரப்பளவு (ஹெக்டேரில்) உயிரியல் மீட்பு 37022 அவென்யூ தோட்டம் 14463 சுரங்க குத்தகைக்கு வெளியே மரம் நடுதல் 3827 மொத்தம் 55312 பசுமையாக்கும் முயற்சிகளின் மதிப்பிடப்பட்ட கார்பன் …
Read More »
Matribhumi Samachar Tamil