Friday, December 05 2025 | 05:26:32 PM
Breaking News

Matribhumi Samachar

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், குருக்ஷேத்திரத்தில் அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் உரையாற்றினார்

ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் இன்று (30 நவம்பர் 2025) நடைபெற்ற சர்வதேச கீதை மஹோத்சவம் 2025-ன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசிய அவர், “வேதங்களின் பூமி” என்று கொண்டாடப்படும் குருக்ஷேத்திரத்தின் புனிதமான மண்ணில் நிற்பதில் மிகுந்த பெருமை அடைவதாகக் கூறினார். பகவத் கீதையின் தெய்வீக ஞானத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கிய இடமாக இந்த புனித இடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். அதர்மம் எவ்வளவு சக்திவாய்ந்ததாகத் தோன்றினாலும், தர்மம் இறுதியில் அதர்மத்தை வெல்லும் என்பதையே குருக்ஷேத்திரம் நினைவூட்டுவதாக அவர் கூறினார். பகவத் கீதை என்பது ஒரு மதத்துக்கான வேதம் அல்ல என்றும் நீதி தவறாத வாழ்க்கை, துணிச்சலான செயல்பாடு, ஞான உணர்வு ஆகியவற்றுக்கான உலகளாவிய வழிகாட்டி நூல் என்றும் தெரிவித்தார்.  செல்வம் அல்லது பிற உலக சாதனைகளை விட நல்ல குணம் மிக முக்கியமானது என்று அவர் கூறினார். மனிதகுலத்தை நல்லொழுக்கத்துடன் வழிநடத்தும் நூல் கீதை என்றும் நீதிக்கான அர்ப்பணிப்பை இது நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.11.2025) மனதின் குரல் நிகழ்ச்சியின் 128-வது அத்தியாயத்தில் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்களைப் படங்களுடன் சமூக வலைதளத்தில் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தனித்தனி பதிவுகளில் கூறியிருப்பதாவது: “நவம்பர் மாதம் பல உத்வேகங்களைக் கொண்டு வந்துள்ளது” “உணவு தானிய உற்பத்தியில் இந்தியா ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.” “புனேவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு, இஸ்ரோ ஏற்பாடு செய்த தனித்துவமான ட்ரோன் போட்டியில் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை பிரதமர் திரு நரேந்திர எடுத்துரைத்தார்.” “இந்தியா முழுவதும் ஒரு இனிமையான புரட்சி!” “ஐரோப்பாவிலிருந்து சவுதி அரேபியா வரை, உலகம் கீதையை எவ்வாறு கொண்டாடுகிறது என்பதைப் பிரதமர் திரு நரேந்திர பகிர்ந்து கொண்டார்.” ” ஜாம் சாஹேப்பின் உலகம் போற்றும் அரிய பங்களிப்புகள்…” “உயர்ந்த கல்வித் தகுதி பெற்ற இளம் நிபுணர்கள் இப்போது இயற்கை விவசாயத்தை ஏற்று செயல்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” “நான்காவது காசி-தமிழ் சங்கமம் டிசம்பர் 2-ம் தேதி காசியில் உள்ள நமோ படித்துறையில் தொடங்குகிறது. காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” “ஐஎன்எஸ் மஹே இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் உள்நாட்டு வடிவமைப்பு பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.” “உத்தராகண்டில் குளிர்கால சுற்றுலா பலரை ஈர்க்கிறது.” “பகவான் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் மீது பல நாடுகளில் உற்சாகம் காணப்படுகிறது. உலகம் முழுவதற்கும், புத்தரின் நினைவுச்சின்னங்களை அனுப்பியதற்காக அந்நாடுகளின் மக்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.” “உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்!” “விளையாட்டுகளில் இந்தியா அதிகம் சாதித்த மாதம்!” “நவம்பர் மாத்ததில் 140 கோடி இந்தியர்களும் பெருமிதம் கொள்ளும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் சில: அயோத்தியில் தர்ம த்வஜாரோஹண விழா. பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழா. வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழா. இந்தியா உலகளாவிய கப்பல் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மையமாக மாறும் நிலையை நெருங்கியது. வலிமை மற்றும் தன்னம்பிக்கையின் துடிப்பான அடையாளமான ஐஎன்எஸ் மாஹே செயல்பாட்டுக்கு வந்தது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் இன்ஃபினிட்டி வளாகத்தின் திறப்பு விழா. உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்தது.” “இந்தியாவின் இளைய தலைமுறையினர் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் அற்புதங்களைச் செய்து வருகின்றனர். ட்ரோன்கள் மீதான நமது இளைஞர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி இது.” “ஜம்மு காஷ்மீர் முதல் கர்நாடகா, நாகாலாந்து வரை, இந்தியாவின் விவசாயிகள் தேன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து வருகின்றனர். இந்தத் துறையில் காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.” …

Read More »

போர்க்கப்பல் தயாரிப்பு மற்றும் கையகப்படுத்தல் கட்டுப்பாட்டு அலுவலராக வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது பொறுப்பேற்பு

வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் கட்டுப்பாட்டு அலுவலராக 2025 நவம்பர் 28 அன்று பொறுப்பேற்றார். பணி ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல் ராஜாராம் சுவாமிநாதனிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.  1987-ம் ஆண்டு கடற்படையில் இணைந்த திரு சஞ்சய் சாது, இயந்திர பொறியியலில் முதுகலை பட்டமும், பாதுகாப்பு உத்தி தொடர்பாக எம்ஃபில் பட்டமும் பெற்றவர். 38 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படை அனுபவத்தில், கொடி அதிகாரி பல முக்கிய பிரிவுகளின் செயல்பாடு உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டில், போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா, ஐஎன்எஸ் துனகிரி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். கொடி அதிகாரியாக அவர் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, அவர் மும்பை கடற்படை கப்பல் உற்பத்தி பிரிவில் கூடுதல் பொது மேலாளர், கார்வார் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் பிரிவின் கண்காணிப்பாளர், புதுதில்லி கடற்படை தலைமையகத்தில் கடல்சார் பொறியியல் முதன்மை இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கொடி அதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர், அவர் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவின் கூடுதல் இயக்குநர் தலைவர், கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, விசாகப்பட்டினம் கப்பல்கட்டும் தளத்தின் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மேற்கு, கிழக்கு கடற்படை பிரிவுகளில் உள்ள இரண்டு முக்கிய கப்பல் கட்டும் தளங்களுக்குத் தலைமை வகித்த பெருமையும், மேற்கு, கிழக்கு கடற்படை கட்டளைகளின் தலைமை தொழில்நுட்பப் பணி அதிகாரியாக பணியாற்றிய பெருமையும் கொடி அதிகாரிக்கு உண்டு. இவர் கோவாவின் கடற்படைப் போர் கல்லூரியின் முன்னாள் மாணவர். பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் சேவை செய்ததற்காக, குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், நௌசேனா பதக்கம் ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.

Read More »

காசி தமிழ் சங்கமத்தின் 4-வது ஆண்டு நிகழ்வு – கலாச்சார தேரை இழுத்துச் செல்லும் இளைய தலைமுறை

டிசம்பர் 2-ம் தேதி தொடங்கும் காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுக்கு காசி தயாராகி வரும் நிலையில், அதில் பங்கேற்க இளைய தலைமுறையினரிடையே அதிக உற்சாகம் காணப்படுகிறது. இந்த நிகழ்வு காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சார, மொழியியல் உறவுகளை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பர் 29 அன்று கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயிலில் பயணத்தைத் தொடங்கிய முதல் குழுவில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். நீண்ட ரயில் பயணம், விளையாட்டுகள், குழு நடவடிக்கைகள், கலகலப்பான உரையாடல்கள், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புகள் ஆகியவை நிறைந்த கலாச்சார மகிழ்ச்சிப் பயணமாக இது மாறியுள்ளது. இந்த அனுபவம் இளைஞர்களுக்கு மறக்க முடியாததாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு ரயிலில் பயணிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ச்சனா கூறுகையில், நான்காவது ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இந்த வாய்ப்பை ஒரு தெய்வீக ஆசீர்வாதமாகக் கருதுவதாகவும் அவர் கூறினார். காசியின் வளமான ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தை முதல் முறையாக அனுபவிக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். திருப்பூரைச் சேர்ந்த மாலதி என்ற மற்றொரு மாணவி கூறுகையில், தமிழ்நாடும் காசியும் ஆழமான ஆன்மீகப் பிணைப்பைக் கொண்டுள்ளதாக கூறினார். காசி தமிழ் சங்கமம், அந்த பிணைப்பை நவீன வடிவத்தில் வலுப்படுத்துகிறது என்றும், காசிக்குச் செல்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், காசியில், இளைய தலைமுறையினரின் உற்சாகமான பங்கேற்புடன், காசி படித்துறைகளிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் …

Read More »

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நடைபெறும் தேசிய அளவிலான நிகழ்ச்சி – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா தலைமை வகிக்கவுள்ளார்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா நாளை (2025 டிசம்பர் 01) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் 2025-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கவுள்ளார். சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் கலந்துகொள்வார்கள். இது ஹெச்ஐவி தடுப்பு, சிகிச்சை, பராமரிப்பு ஆகியவற்றுக்கான தேசிய அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதலில் மத்திய அரசின் அசைக்க …

Read More »

நாட்டில் 250 மில்லியன் பேர் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டுள்ளனர் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

புதுதில்லியில்  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.  இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 2015-ம் ஆண்டு பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட போது  நவம்பர் 26-ம் நாளை அரசியல் சாசன தினமாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். அந்த முடிவு உண்மையில் அர்த்தமுடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்நாளில் நமது அரசியல் …

Read More »

டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின கொண்டாட்டதில் குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்றார்

குடியரசுத் துணைத்தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் , தில்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற ‘அரசியல் சாசன தின’ கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். திரு. வித்தல்பாய் படேல் இந்தியாவின் முதல் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் சட்டமன்றப் பயணம் குறித்த சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். குடியரசுத் துணைத்தலைவர் உரையாற்றுகையில், இந்திய அரசியலமைப்பை ஒரு ‘உயிருள்ள ஆவணம்’ என்று கூறினார், இது நாட்டின் ஜனநாயகப் …

Read More »

ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “இன்று முதல் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை புதிய பாதையில் பயணிக்கிறது. சஃப்ரானின் புதிய நிறுவனம் இந்தியாவை உலகளாவிய …

Read More »

புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (26 நவம்பர் 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தின்கீழ், வழித்தடம் 4 (காரடி–ஹடப்சர்–ஸ்வர்கேட்–கடக்வாஸ்லா) மற்றும் பாதை 4ஏ  (நல் ஸ்டாப்–வர்ஜே–மாணிக் பாவ்) ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 31.636 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு புனே முழுவதும் உள்ள ஐடி மையங்கள், வணிக மண்டலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் …

Read More »

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ரூ.2,781 கோடி மதிப்பிலான ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் அளித்தது. தேவ்பூமி துவாரகா (ஓகா) – கனாலஸ் இரட்டைவழிப்பாதை – 141 கிமீ பத்லபூர் – கர்ஜாத் 3-வது மற்றும் 4-வது வழித்தடம் – 32 கிமீ இதன் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து சேவை மேம்பட்டு அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பும், சுயவேலைவாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்பு …

Read More »