Tuesday, January 27 2026 | 09:13:24 AM
Breaking News

Business

இங்கிலாந்துடனான விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவின் கடல் உணவுத் தொழில், 70% ஏற்றுமதி வளர்ச்சி காணும்

ஜூலை 24, 2025 அன்று விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா-இங்கிலாந்து பொருளாதார உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொழுத்தானது. மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வணிகம் மற்றும் வர்த்தக அமைச்சர்  திரு. ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது. குறிப்பாக, கடல் துறையைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் பல்வேறு வகையான கடல் உணவுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை நீக்குகிறது, இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. இது குறிப்பாக இறால், உறைந்த மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட கடல் பொருட்களின் ஏற்றுமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜவுளி, தோல் மற்றும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர் மிகுந்த துறைகளுடன் அதன் முக்கிய கடல் உணவு இலக்குகளில் ஒன்றான இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும். தற்போது இங்கிலாந்துக்கு இந்தியாவின் முக்கிய கடல் உணவு ஏற்றுமதிகளில் வன்னாமி இறால், உறைந்த கணவாய், நண்டுகள், உறைந்த மீன்கள் மற்றும் கரும்புலி இறால் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஒப்பந்தத்தின்  வரி இல்லாத அணுகலின் கீழ் மேலும் சந்தைப் பங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி 7.38 பில்லியன் டாலரை (ரூ 60,523 கோடி) எட்டியது, ஒப்பந்தம்  இப்போது அமலில் உள்ளதால், வரும் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கான கடல்சார் ஏற்றுமதியில் 70% அதிகரிப்பு இருக்கும் என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மீன்வளத் துறை சுமார் 28 மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது மற்றும் உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்களிக்கிறது. 2014–15 …

Read More »

நிலக்கரி இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் நிலையை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  கடலோரத்தில் இல்லாத மின் உற்பத்தி நிலையங்களின் வருடாந்திர ஒப்பந்த அளவு 90% எனக் குறைக்கப்பட்டால் அல்லது  கடலோர மின் உற்பத்தி நிலையங்களின்  வருடாந்திர ஒப்பந்த அளவு 70% எனக் குறைக்கப்பட்டால்  தற்போதைய நெறிமுறை தேவையின் அடிப்படையில் வருடாந்திர ஒப்பந்த அளவு 100 சதவீதமாக அதிகரிக்கப்படுள்ளன. இது அதிக உள்நாட்டு நிலக்கரி வினியோகத்திற்கு வழிவகுக்கிறது. இதன்மூலம் …

Read More »

தனியார் கார் / ஜீப் / வேன்களுக்கு வருடாந்திர பயண அட்டை ஆகஸ்ட் 15-ல் அறிமுகம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த 17.06.2025 அன்று வெளியிட்ட தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 அறிவிப்பின் மூலம், தனியார் கார் வேன் / ஜீப்களுக்கு வருடாந்திர பயண அட்டை வசதி 2025 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு மத்திய அரசின் இந்த சலுகை பேருதவியாக இருக்கும் 3,000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண …

Read More »

நாட்டில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை  2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் உள்ளன  என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறை, தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து பாட்னாவில் ஏற்பாடு செய்திருந்த “வளர்ச்சியடைந்த பீகார்: பெண்கள் பங்கேற்பின் மூலம் …

Read More »

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பங்கேற்பு; இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று நொய்டாவில் இந்தியாவின் சர்வதேச ஐக்கிய நாடுகள் இயக்கம் -2025 மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், அமிர்த காலத்திற்கான ஐந்து உறுதிமொழிகளின்படி, 2047 ஆம் ஆண்டுக்குள்  வளர்ச்சியடைந்த  பாரதத்தை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியா ஒரு பெரிய மாற்றத்தின் உச்சத்தில் நிற்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு கோயல், 2022 …

Read More »

நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தின விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.  இதில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில், முக்கிய உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் கணினி மையமாக நபார்டு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். …

Read More »

நாட்டில் கூட்டுறவுத்துறை 61 சிறப்பு முன்முயற்சிகள் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்ட 4 ஆண்டுகளுக்குள் 61 சிறப்பு முன்முயற்சிகள் மூலம் கூட்டுறவு இயக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத் திருவிழாவில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாநில அரசுப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்டப்ட 8,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டுறவுத்துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன்களை …

Read More »

வேளாண் விளை பொருள் ஏற்றுமதி முதல் ஊடக விழிப்புணர்வு வரை – கிருஷ்ணகிரியில் ஊடகப் பயிலரங்கு

  மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர் பயிலரங்கு இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. மத்திய அரசின் முக்கியமான முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு எடுத்துரைப்பதும் பல்வேறு வளர்ச்சி முன் முயற்சிகளை ஆழமாக புரிந்து கொள்ள உதவுவதும் இந்த பயிலரங்கின் நோக்கமாகும். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் பொறுப்பு …

Read More »

2025 ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)

அகில இந்திய மொத்த விலை குறியீட்டு  எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டு பணவீக்க விகிதம் 2025-ம் ஆண்டு ஜூன்  மாதத்திற்கு (2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது) (-) 0.13%-ஆக (தற்காலிகமானது) உள்ளது. 2025 ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பணவீக்க விகிதம் எதிர்மறையாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம்  முதன்மையாக உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் உற்பத்தி, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக …

Read More »

பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு  துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு …

Read More »