புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்வியை சர்வதேசமயமாக்குவதன் இலக்குகளை அடைவதில் கல்வி அமைச்சகம் ஒரு பெரிய நடவடிக்கையாக மும்பையில் ‘சர்வதேச கல்வி நகரத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவை ஒரு உலகளாவிய கல்வி மையமாக, குறைந்த செலவில் உயர்தரக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். இந்த முயற்சியின் மூலம், இந்தியாவை உலகளாவிய அறிவு மையமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். சிறந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள், இங்கு தங்களது வளாகங்களை நிறுவ இந்தியா ஊக்குவித்து வருகிறது என அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகளவில் விரிவுபடுத்த இது அதிகாரம் அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சி, கருத்துக்கள், திறமை, நம்பிக்கை ஆகியவற்றின் வளர்ந்து வரும் இருவழி இயக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். இந்தியா உலகளாவிய கல்வி சுற்றுச்சூழல் அமைப்பில் பங்கேற்பது மட்டுமல்லாமல் இந்தியா அதை வடிவமைக்கிறது என அவர் கூறினார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மும்பை/நவி மும்பையில் தங்கள் இருப்பை நிலைநிறுத்துவது இதுவே முதல் முறை, மேலும் சில பல்கலைக்கழகங்கள் UGC (S) இன் கீழ் நவி மும்பையில் வரவிருக்கும் கல்வி நகரத்தில் வளாகங்களை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளின் 5 பல்கலைக்கழகங்கள் மும்பையில் வளாகங்களை நிறுவுவதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவில் இந்தப் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவுவது மாணவர்களுக்கு நன்மை பயக்கும். உயர்கல்வித் துறையின் செயலாளர் மற்றும் யுஜிசி-யின் தலைவர் டாக்டர் வினீத் ஜோஷி, தமது உரையில், கல்வியின் சர்வதேசமயமாக்கலை உறுதி செய்வதிலும், இந்தியாவின் பரந்த, ஆற்றல்மிக்க திறமையை வெளிப்படுத்துவதிலும் கல்வி அமைச்சகம் மற்றும் யுஜிசி-யின் பங்கை எடுத்துரைத்தார். மத்திய கல்வி அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகம், மகாராஷ்டிரா அரசு, பல்கலைக்கழக மானிய குழு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும், தூதரகங்களின் பிரமுகர்களும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களை அனுமதிக்கும் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
Read More »புதுச்சேரி பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவின் A+ தர அங்கீகாரம் பெற்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை
கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்பிற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புதுச்சேரி பல்கலைக்கழகம் அதன் ஐந்தாவது மதிப்பீட்டு சுழற்சியில் (2019–2024) தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவால் (NAAC) A+ தர அங்கீகாரம் பெற்றுள்ளது. இது பல்கலைக்கழகம் அதன் 40 ஆண்டுகால வரலாற்றில் பெற்ற மிக உயர்ந்த மதிப்பீடடாக இது உள்ளது. முந்தைய இரண்டு சுழற்சிகளில் வழங்கப்பட்ட A தரங்களை விஞ்சி, இந்தியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட மத்திய பல்கலைக்கழகங்களில் …
Read More »பயிற்சி மையங்களிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் கல்வித் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவர்களுக்கு ரூ 1.56 கோடி நிவாரணத்தை மத்திய அரசு வழங்குகிறது
மத்திய நுகர்வோர் விவகாரத் துறை , கல்வித் துறையில் 600க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்காக ரூ 1.56 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ், இன்ஜினியரிங் படிப்பு மற்றும் பிற திட்டங்களுக்கான பயிற்சி மையங்களில் பதிவுசெய்யப்பட்ட இந்த மாணவர்களுக்கு, பயிற்சி நிறுவனங்களால் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றிய போதிலும், முன்னர் பணத்தைத் திரும்பப் பெறுவது மறுக்கப்பட்டது. தேசிய நுகர்வோர் உதவி எண் வழியாக மாணவர்கள் தாக்கல் செய்த குறைகளின் மூலம் இந்த நிவாரணம் சாத்தியமானது, இது …
Read More »கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள்
கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள் என்ற கையடக்க சாதன வடிவமைப்பு சவால் என்பது குழந்தைகளின் கற்றல் அனுபவங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறந்த போட்டியாகும். இது இந்தியாவில் படைப்பாற்றல் சவால் போட்டியின் முதலாவது பகுதியாகும். மேலும் இது வேவ்ஸ் (உலக ஒலி, காட்சி & பொழுதுபோக்கு உச்சி மாநாடு) கீழ் நடத்தப்படுகிறது. ஒளிபரப்பு & தகவல் ஏவிஜிசி-எக்ஸ்ஆர், மின்னணு ஊடகம், கண்டுபிடிப்பு, திரைப்படங்கள் ஆகிய நான்கு பகுதிகளில் இப்போட்டியில் …
Read More »பிட் மெஸ்ராவின் வைர விழா கொண்டாட்டத்தில் குடியரசு தலைவர் பங்கேற்பு
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 15, 2025) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பிட் மெஸ்ராவின் வைர விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நமது காலம் தொழில்நுட்ப யுகம் என்று கூறினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய முன்னேற்றங்கள் நாம் வாழும் முறையை மாற்றியுள்ளன. நேற்று வரை நினைத்துப் பார்க்க முடியாதது இன்று நிஜமாகிவிட்டது. வரும் …
Read More »ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்
ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் திருமதி. நிதி கரே மற்றும் ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர் நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகள் குறித்தும் தவறான வகையில் விளம்பரம் …
Read More »நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்!: பிரதமர்
சரியான உணவை உட்கொள்வதும், நன்றாகத் தூங்குவதும் தேர்வுகளை சிறப்பாக எழுத உதவும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார். தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது: “நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்! தேர்வு குறித்த கலந்துரையாடல் …
Read More »தேர்வு தொடர்பான ஆலோசனை நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல்
தேர்வு குறித்த ஆலோசனை நிகழ்ச்சியின் 8-வது பதிப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரி பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், பல்வேறு தலைப்புகளில் அவர்களுடன் விவாதித்தார். குளிர்காலத்தில் உடலை சூடாகப் பராமரிக்க உதவிடும் வகையில் பாரம்பரிய உணவுகள் (எள்) உட்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். ஊட்டச்சத்து என்ற தலைப்பைச் சுட்டிக் காட்டி பேசியபோது பிரதமர் ஐ.நா. சபை 2023- ஆண்டை ‘சர்வதேச சிறுதானிய ஆண்டாக’ அறிவித்தது. …
Read More »புதுதில்லி உலக புத்தக கண்காட்சியில் 41 புத்தகங்களை திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்
புது தில்லி உலக புத்தகக் கண்காட்சி 2025-ல் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் யுவா 2.0 திட்டத்தின் கீழ் 41 புதிய புத்தகங்களை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். திரிபுரா ஆளுநர் திரு இந்திரசேன ரெட்டி நல்லு, இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய திரு தர்மேந்திர பிரதான், புத்தகங்கள் வெளியிடப்பட்ட 41 இளம் எழுத்தாளர்களை வாழ்த்தினார். அவர்களின் திறனில் நம்பிக்கையை …
Read More »புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில் ‘தேர்வு குறித்த கலந்துரையாடல்’ மீண்டும் வருகிறது: பிரதமர்
தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025-ஐப் பார்க்குமாறு அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது மன அழுத்தமில்லாத தேர்வுகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 8 மிகவும் சுவாரஸ்யமான அத்தியாயங்களைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது: “தேர்வு குறித்த கலந்துரையாடல் மீண்டும் வந்துவிட்டது, அதுவும் புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில்!” ”அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் …
Read More »
Matribhumi Samachar Tamil