ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20-வது நிறுவன தின விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, திரு அமித் ஷா, சுமார் ரூ. 220 கோடி மதிப்புள்ள பல திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குநர் திரு பியூஷ் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, மீட்புக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வருகிறது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்) மூலம் பேரிடர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். களத்தில் திறம்பட பேரிடர் மேலாண்மையை உறுதி செய்ய, கிராம பஞ்சாயத்துகள், காவல் நிலையங்கள், தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கத்தினர் தொடங்கி மத்திய அரசு வரை பலரது தடையற்ற ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பேரிடர் மேலாண்மையின் அணுகுமுறை, வழிமுறைகள், நோக்கங்களில் புரட்சிகரமான மாற்றத்தை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு திரு அமித் ஷா நன்றி தெரிவித்தார். இழப்புகளைக் குறைப்பதுடன் பேரிடர்களின் போது பூஜ்ஜிய உயிரிழப்பு என்ற அடைவதற்கான தெளிவான இலக்குடன் அரசு செயல்படுவதாக அவர் கூறினார். தேசிய பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான இணக்கமான ஒத்துழைப்பை திரு அமித் ஷா பாராட்டினார். தேசிய பேரிடர் மீட்புப் படை இந்தியாவிற்குள் மட்டுமின்றி, உலக அளவிலும் குறிப்பிடத்தக்க நம்பகமான அமைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரும்போது, மக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியாக உணர்கிறார்கள் என்று அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு பெரிய புயல்களின் போது பூஜ்ஜிய உயிரிழப்புகள் என்ற இலக்கை தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். நேபாளம், இந்தோனேசியா, துருக்கி, மியான்மர், வியட்நாம் போன்ற பிற நாடுகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் முயற்சிகள் அந்தந்த நாடுகளின் தலைவர்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளன என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். இப்போது பேரிடர் மேலாண்மையில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியில், 14-வது நிதி ஆணையத்தில் பேரிடர் மேலாண்மைக்கான நிதி ரூ .61,000 கோடியாக உயர்த்தப்பட்டதில் இருந்து பேரிடர் மேலாண்மைக்கான மத்திய அரசின் உறுதிப்பாடு தெளிவாகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தனர். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா உலகளவில் முன்னிலை வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா சிடிஆர்ஐ எனப்படும் பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவியது என்றும், இப்போது, சிடிஆர்ஐ-யின் கீழ் 48 நாடுகள் உறுப்பினர்களாக பணியாற்றி வருகின்றன என்றும் அவர் கூறினார். பேரிடர் மேலாண்மையில் அணுகுமுறை, செயல்முறை, குறிக்கோள் ஆகிய மூன்று அம்சங்களிலும் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பேரிடர் மேலாண்மைத் துறையில் மத்திய அரசு பல்வேறு செயலிகள், இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.
Read More »சுரங்க அமைச்சகம் டிஎம்எப் கண்காட்சியை கோனார்க் சூரிய கோவிலில் திறந்துள்ளது
சுரங்க அமைச்சகம், ஒடிசா அரசாங்கத்துடன் இணைந்து, மாவட்ட கனிம அறக்கட்டளை டிஎம்எப் கண்காட்சியை கோனார்க்கில் உள்ள சூரிய கோவிலில் அமைத்துள்ளது. 2025 ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, நிலையான வளர்ச்சியின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சுரங்க அமைச்சகம், நால்கோ மற்றும் ஓஎம்சி அதிகாரிகள் முன்னிலையில், சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலர் திருமதி ஃபரிதா எம்.நாயக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். “நிலையான வளர்ச்சியின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த கண்காட்சியில், டிஎம்எப்-ஆதரவு சுயஉதவி குழுக்கள் , இந்திய புவியியல் ஆய்வு , இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் , நால்கோ ஆகியவற்றின் பணிகளை வெளிப்படுத்தும் 18 துடிப்பான அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த அரங்குகள் , உள்ளூர் கைவினைப்பொருட்கள், புதுமையான வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முன்முயற்சிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகின்றன, சமூகங்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும், நிலையான நடைமுறைகள் மூலம் தன்னம்பிக்கையை வளர்ப்பதிலும் டிஎம்எப் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் அமைச்சகத்தின் வலுவான உறுதிப்பாட்டை திருமதி நாயக் எடுத்துரைத்தார். டிஎம்எப்-ன் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இயக்குவதில் தீவிரமாக பங்கேற்ற ஒடிசா அரசு, பெருநிறுவன பங்குதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பங்களிப்புகளை அவர் பாராட்டினார். வரலாற்று மகத்துவம் கொண்ட சூரியன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, நவீன நிலையான வளர்ச்சியைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இப்பகுதியின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் இணைக்கிறது. இக்கண்காட்சி உள்ளூர் சமூகங்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்கேற்பை ஈர்த்துள்ளது, சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் எதிர்கால ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு மாறும் தளத்தை வழங்குகிறது. நிலையான நடைமுறைகளைச் செயல்படுத்துதல், முழுமையான சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நீண்டகால நேர்மறையான மாற்றத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதற்கு சுரங்க அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்தக் கண்காட்சி முன்னெடுக்கிறது.
Read More »புதிய சஞ்சார் சாத்தி மொபைல் செயலி உட்பட குடிமக்களை மையமாகக் கொண்ட தொலைத்தொடர்பு வசதிகளை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும் தொலைத் தொடர்பு அணுகல், பாதுகாப்பு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா இன்று (17.01.2025) குடிமக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தினார். சஞ்சார் சாத்தி மொபைல் செயலி, தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் 2.0, டிபிஎன் நிதியுதவி பெறும் 4ஜி மொபைல் தளங்களில் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதியின் தொடக்கம் ஆகியவை இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களாகும். சஞ்சார் சாத்தி மொபைல் செயலி என்பது …
Read More »“மூன்றாவது ஏவுதளம்” அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மூன்றாவது ஏவுதளத் திட்டமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைமுறை செலுத்து வாகனங்களுக்கான ஏவுதள கட்டமைப்பை உருவாக்குவதோடு ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டாவது ஏவுதளத்திற்கான ஆயத்த ஆதரவு ஏவுதளமாக செயல்படவும் செய்யும். இது எதிர்கால …
Read More »செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய நமது பயணத்தில் க்யூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் நுண்ணறிவுகள் மதிப்புமிக்கவை: பிரதமர்
கியூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் தரவரிசையில், டிஜிட்டல் திறன்களில் கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தாண்டி இந்தியா 2-வது இடத்தைப் பிடித்திருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக, நமது இளைஞர்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும், செல்வ வளத்தை உருவாக்குவத்றகும் திறன்களை மேம்படுத்தவும் எங்களது அரசு பணியாற்றி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை …
Read More »ராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்கிறது என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். “ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. பல ஆண்டுகளாக, நாங்கள் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் மற்றும் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தியுள்ளோம்” என்று திரு மோடி கூறினார். …
Read More »பிரதமரின் கிராமப் புற வீட்டுவசதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
2016 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் “அனைவருக்கும் வீடு” என்ற இலக்கை அடைய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. மார்ச் 2029-க்குள் 4.95 கோடி வீடுகளைக் கட்டுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள்: *பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் புதிய கட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024-25ம் நிதியாண்டு முதல் 2028-29ம் நிதியாண்டு வரை ரூ. …
Read More »150 ஆண்டுகள் உயர் தனிச் சிறப்பைக் கொண்டாடும் இந்திய வானிலை ஆய்வு மையம்
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி),தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 150 ஆண்டுகளைக் கொண்டாடி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 1875-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஐஎம்டி, முக்கியமான வானிலை, பருவநிலை சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பேரிடர் மேலாண்மை, விவசாயம், விமானப் போக்குவரத்து, பொது பாதுகாப்பு ஆகியவற்றில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் தேசிய வானிலை சேவை என்ற வகையில், வானிலை ஆய்வு, நில அதிர்வு அதனுடன் தொடர்புடைய …
Read More »மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தேசிய மஞ்சள் வாரியத்தை தொடங்கி வைத்தார் – நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டுள்ளது
தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். திரு பியூஷ் கோயல் அதன் முதல் தலைவராக திரு பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். வாரியத்தின் தலைமையகம் நிஜாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மஞ்சள் வாரியத்தின் தொடக்கம் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைக் கொண்டாட்டங்களின் புனித நாளில் அமைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் தேசிய மஞ்சள் வாரியத்தின் …
Read More »இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று (14.01.2024) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல என்றும் இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக …
Read More »
Matribhumi Samachar Tamil