Tuesday, December 23 2025 | 01:48:58 AM
Breaking News

Miscellaneous

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் : 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்

2024-ம் ஆண்டில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமத்தின்  (சிஎஸ்ஐஆர்) கீழ் செயல்படும் மத்திய சாலை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (சிஆர்ஆர்ஐ) உள்நாட்டு சாலை கட்டுமான தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி உருவாக்கியுள்ள  மிகக் குறைந்த வெப்பநிலைக்கான அதிக உயரத்தில் உள்ள பிட்மினஸ் சாலைகளை  எல்லைப்புறச் சாலைக் கழகம் (பி.ஆர்.ஓ) வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறது. லடாக் டிராஸில் உள்ள டிராஸ்-உம்பாலா-சங்கூ சாலையில் அதிக உயர பிட்டுமினஸ் சாலைகளை …

Read More »

இந்திய தர கவுன்சிலின் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவராக டாக்டர் சந்தீப் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்

புகழ்பெற்ற மருத்துவ நிபுணரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட  தலைவருமான டாக்டர் சந்தீப் ஷா, இந்திய தர கவுன்சிலின் அங்கமான சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.ஏ.பி.எல்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சோதனை மற்றும் அளவுத்திருத்த சேவைகளின் தரத்தை மேம்படுத்த இந்த அமைப்பு செயல்படுகிறது. நுகர்வோர், வணிகங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் நம்பிக்கையை  இது உறுதி செய்கிறது. அகமதாபாதின் பி.ஜே மருத்துவக் கல்லூரியில் எம்.டி …

Read More »

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் தமிழாக்கம்

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் மறைவு எங்கள் இதயங்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அவரது மறைவு ஒரு தேசமாக எமக்கு மிகப்பெரிய இழப்பாகும். பிரிவினையின் போது இவ்வளவு இழந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த பிறகு பாரதத்திற்கு வருவது சாதாரண சாதனை அல்ல. கஷ்டங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி பெரிய உயரங்களை எவ்வாறு அடைவது என்பதற்கு எதிர்கால சந்ததியினருக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது. கனிவான …

Read More »

ஆயுதப்படை கொடி நாள் சிஎஸ்ஆர் மாநாடு பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் புதுதில்லியில் நடைபெறுகிறது

ஆயுதப்படை கொடி நாள், பெருநிறுவன சமூக பொறுப்புடைமை மாநாட்டின் ஆறாவது பதிப்பு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி  புதுதில்லியில் நடைபெறுகிறது. முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் கேந்திரிய சைனிக் வாரியம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்கள், விதவைகள், அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்களின் மறுவாழ்வு, மறுகுடியமர்வு மற்றும் நலன்களுக்காக  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கவும், பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடைமைகளளின்கீழ் உதவிக்கான ஆதரவு திரட்டுவதும் இதன் நோக்கமாகும். ஆயுதப்படை கொடி …

Read More »

வேளாண்மை,தோட்டக்கலை சார்ந்த பல்வேறு திட்டங்கள் மூலம் பாரம்பரிய ரகங்கள் ஊக்குவிப்பு

புதுதில்லியில் நடைபெற்ற “பருவநிலை-தாங்குதிறன் வேளாண் நடவடிக்கைகளுக்கான பாரம்பரிய பயிர் ரகங்கள் மூலம் மானாவாரி பகுதிகளில் வேளாண்-பல்லுயிர் பெருக்கத்திற்கு புத்துயிரூட்டுதல்” என்ற பன்முகப் பயனாளர் மாநாட்டில் உரையாற்றிய மத்திய வேளாண் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, பாரம்பரிய விவசாயமும் தோட்டக்கலை பயிர் வகைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வேளாண், தோட்டக்கலைப் பயிர்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை  மத்திய அரசு  செயல்படுத்தி வருகிறது. தேசிய ஊட்டச்சத்து நிதியம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், விதை மேம்பாட்டுத் திட்டங்கள், தேசிய …

Read More »

வீர பாலகர் தினத்தையொட்டி சாஹிப்ஜாத்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்

வீர பாலகர் தினத்தையொட்டி சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நினைவு கூர்ந்தார். அவர்களின் தியாகம் வீரம், ஒருவரின் மதிப்புகள் மீதான உறுதிப்பாட்டிற்கு பிரகாசமான எடுத்துக்காட்டாகும் என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். மாதா குஜ்ரி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஆகியோரின் துணிச்சலையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இன்று, வீர பாலகர் தினத்தையொட்டி, சாஹிப்ஜாதேக்களின் …

Read More »

எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

மலையாள திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் மிகவும் மதிப்புமிக்க நபர்களில் ஒருவரான திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் அவர்களின் படைப்புகள், மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்தவை.  அவரது படைப்புகள் பல தலைமுறைகளை வடிவமைத்துள்ளன என்றும், மேலும் பலருக்கு அவை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் …

Read More »

நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் விநியோகிக்க உள்ளார்

10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 200 மாவட்டங்களில் 46,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு (ஸ்வாமித்வா) திட்டத்தின் கீழ், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 27 அன்று நண்பகல் 12:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் வழங்குகிறார். சமீபத்திய ட்ரோன் தொழில்நுட்ப கணக்கெடுப்பு மூலம் கிராமங்களில் வசிக்கும் பகுதிகளில் வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ‘உரிமைகளின் பதிவு’ வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை …

Read More »

பிரதமரின் தேசிய பாலகர் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று (டிசம்பர் 26, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு, ஏழு பிரிவுகளில் 17 குழந்தைகளுக்கு அவர்களின் மகத்தான சாதனைகளுக்காக பிரதமரின் தேசிய பாலகர் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும், ஒட்டுமொத்த நாடும்,  சமுதாயமும்  அவர்களால் பெருமை அடைவதாகவும்  கூறினார். குழந்தைகள் அசாதாரணமான பணிகளைச் செய்துள்ளனர், அற்புதமான சாதனைகளை அடைந்துள்ளனர். எல்லையற்ற திறன்களைக் கொண்டுள்ளனர். ஒப்பிடமுடியாத பண்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டின் குழந்தைகளுக்கு  …

Read More »

அடித்தள அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக ‘விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி’ முன்முயற்சியை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

அடிமட்ட அளவில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100 வது பிறந்த நாளைக் குறிக்கும் நல்லாட்சி தினத்தன்று ‘விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி’ முன்முயற்சியை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். பரந்த ‘பிரஷசன் கான் கி அவுர்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரிகளை பயனுள்ள ஆளுகைக்கும் பங்கேற்பு திட்டமிடலுக்கும் தேவையான அறிவுடன் தயார்படுத்தும். இதன் …

Read More »