Wednesday, April 08 2026 | 06:40:04 PM
Breaking News

Miscellaneous

எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

மலையாள திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் மிகவும் மதிப்புமிக்க நபர்களில் ஒருவரான திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் அவர்களின் படைப்புகள், மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்தவை.  அவரது படைப்புகள் பல தலைமுறைகளை வடிவமைத்துள்ளன என்றும், மேலும் பலருக்கு அவை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் …

Read More »

நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் விநியோகிக்க உள்ளார்

10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 200 மாவட்டங்களில் 46,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு (ஸ்வாமித்வா) திட்டத்தின் கீழ், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 27 அன்று நண்பகல் 12:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் வழங்குகிறார். சமீபத்திய ட்ரோன் தொழில்நுட்ப கணக்கெடுப்பு மூலம் கிராமங்களில் வசிக்கும் பகுதிகளில் வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ‘உரிமைகளின் பதிவு’ வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை …

Read More »

பிரதமரின் தேசிய பாலகர் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று (டிசம்பர் 26, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர்  திருமதி திரௌபதி முர்மு, ஏழு பிரிவுகளில் 17 குழந்தைகளுக்கு அவர்களின் மகத்தான சாதனைகளுக்காக பிரதமரின் தேசிய பாலகர் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும், ஒட்டுமொத்த நாடும்,  சமுதாயமும்  அவர்களால் பெருமை அடைவதாகவும்  கூறினார். குழந்தைகள் அசாதாரணமான பணிகளைச் செய்துள்ளனர், அற்புதமான சாதனைகளை அடைந்துள்ளனர். எல்லையற்ற திறன்களைக் கொண்டுள்ளனர். ஒப்பிடமுடியாத பண்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டின் குழந்தைகளுக்கு  …

Read More »

அடித்தள அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக ‘விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி’ முன்முயற்சியை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

அடிமட்ட அளவில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100 வது பிறந்த நாளைக் குறிக்கும் நல்லாட்சி தினத்தன்று ‘விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி’ முன்முயற்சியை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். பரந்த ‘பிரஷசன் கான் கி அவுர்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரிகளை பயனுள்ள ஆளுகைக்கும் பங்கேற்பு திட்டமிடலுக்கும் தேவையான அறிவுடன் தயார்படுத்தும். இதன் …

Read More »

நல்லாட்சி தினம் வாழ்க்கையை மேம்படுத்துதல் – தூய குடிநீர் வழங்கும் மகிழ்ச்சி

முஸ்கான் என்ற சிறுமி தனது வீட்டின் புதிய குழாயிலிருந்து சுத்தமான தண்ணீர் வந்தபோது மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள். இது தம்ஹெடி கிராமத்தில் கொண்டாட்டத்தின் தருணம். அங்கு குழாய் நீர் என்பது மக்கள் அதுவரை கற்பனை செய்திராததாக இருந்தது. இந்தச் சூழலில் குழாய் மூலம் தூய குனிநீரைப் பார்த்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அது அவர்களது வாழ்க்கையை மாற்றியது. இது கண்ணியம், ஆரோக்கியம், பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியின் ஆதாரமாக இருந்தது. முஸ்கானைப் பொறுத்தவரை, தண்ணீருக்காக அம்மாவைத் …

Read More »

மலேரியா ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் -மலேரியா இல்லாத நிலையை நோக்கிய பயணத்தில் இந்தியா முன்னேறி வருகிறது

மலேரியா இல்லாத எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் கதையாகும். 1947-ல் சுதந்திரத்தின் போது, மலேரியா மிகவும் முக்கியமான பொது சுகாதார சவால்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டுதோறும் 7.5 கோடி பேர் பாதுக்காப்பட்டு 800,000 இறப்புகள் பதிவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டு, இடைவிடாத முயற்சிகள் இந்த எண்ணிக்கையை 97% க்கும் அதிகமாக வெகுவாகக் குறைத்துள்ளன. பாதிப்பு வெறும் 20 லட்சமாகவும், மலேரியா இறப்புகள் 2203-ம் ஆண்டில் வெறும் 83 ஆகவும் குறைந்துள்ளன. இந்த வரலாற்று சாதனை, மலேரியாவை ஒழிப்பதிலும், மக்களுக்கு …

Read More »

ராஷ்ட்ரபர்வ் இணையதளம், கைபேசி செயலி- பாதுகாப்புத் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்

முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நினைவுகூரும் ‘நல்லாட்சி தினத்தை’ முன்னிட்டு 2024 டிசம்பர் 25 அன்று பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மொபைல் செயலியுடன் ராஷ்டிரபர்வ் (Rashtraparv)/என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். குடியரசு தினம், படைகள் பாசறை திரும்பும் விழா, சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், நேரடி ஒளிபரப்பு, அனுமதிச் சீட்டு வாங்குதல், இருக்கை ஏற்பாடுகள், நிகழ்வுகளின் வழித்தட வரைபடங்கள் தொடர்பான தகவல்களை வழங்க இந்த வலைத்தளம் உதவும். …

Read More »

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, புதிதாக நிறுவப்பட்ட 10,000 கூட்டுறவு சங்கங்களை தொடங்கி வைத்தார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள 10,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மத்திய கூட்டுறவு இணை அமைச்சர்கள் திரு கிரிஷன் பால், திரு முரளிதர் மொஹால், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். …

Read More »

பண்டிட் மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் மக்களவைத் தலைவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

சம்விதான் சதன் மைய மண்டபத்தில் பண்டிட் மதன் மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். மத்திய சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தகம் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு …

Read More »

புதுதில்லியில் டிசம்பர் 26 அன்று நடைபெறும் வீரபாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

இந்தியாவின் எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டமான வீரபாலகர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 26 அன்று நண்பகல் 12 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். ‘சுபோஷித் கிராம பஞ்சாயத்து இயக்கம்” என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். ஊட்டச்சத்து தொடர்பான சேவைகளை வலுப்படுத்துவதன் மூலமும், செயலூக்கம் நிறைந்த சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதன் …

Read More »