சர்தார் வல்லபாய் படேலின் 75-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் இன்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். இது குறித்து சமூக ஊடக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், நாட்டின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை பெருமளவு வலுப்படுத்தியதுடன் அகில இந்திய சேவைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சமஸ்தானங்களை ஒருங்கிணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பெரும் …
Read More »தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு எரிசக்திப் பாதுகாப்பு விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 14, 2025) புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2025-ஐ வழங்கினார். எரிசக்தி பாதுகாப்பு குறித்த தேசிய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எரிசக்தி சேமிப்பு என்பது இன்றைய மிக முக்கியமான தேவை என்று தெரிவித்தார். எரிசக்தி சேமிப்பு என்பது எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அதை புத்திசாலித்தனமாகவும், பொறுப்புடனும், திறமையாகவும் பயன்படுத்துவதாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். தேவையற்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, குறைந்த எரிசக்தி திறன் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவது, சூரிய ஒளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது போன்றவை, மின்சக்தியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், கார்பன் வெளியேற்றத்தையும் குறைப்பதாக அவர் கூறினார். சமநிலையான சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பதற்கும் எரிசக்தி சேமிப்பு முக்கியமானது என அவர் தெரிவித்தார். நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் இயற்கையின் மீதான நமது பொறுப்பின் அடையாளமாகவும், எதிர்கால சந்ததியினர் நலனில் நமது அக்கறையின் அடையாளமாகவும் இருக்கும் என்று அவர் கூறினார். இளைஞர்களும் குழந்தைகளும் எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, அந்த நோக்குடன் முயற்சிகளை மேற்கொண்டால், இந்தத் துறையில் இலக்குகளை அடைய முடியும் என்றும், நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பிரதமரின் மேற்கூரை சூரிய சக்தி வீடுகள் திட்டம், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் போன்ற முன்முயற்சிகள் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அரசு ஊக்குவித்து வருகிறது என அவர் கூறினார். இந்த மாற்றம் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தின் வெற்றிக்கு ஒவ்வொரு துறை, ஒவ்வொரு நபரின் பங்களிப்பும் அவசியம் என்று அவர் கூறினார். அனைத்து துறைகளும் எரிசக்தி திறனை அதிகரிக்க செயல்பாடுகளில் மாற்றம் மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். கூட்டுப் பொறுப்பு, ஒத்துழைப்பு, பொது மக்கள் பங்கேற்பு ஆகியவற்றோடு, இந்தியா எரிசக்தி பாதுகாப்பில் தொடர்ந்து முன்னணிப் பங்காற்றும் என்றும், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இலக்குகளை அடையும் என்றும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
Read More »குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடல்
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (14.12.2025) புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத்தலைவர் இல்லத்தில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வனப் பணி (ஐஎஃப்ஓஎஸ்) பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த அதிகாரிகள் ஹரியானா பொது நிர்வாக நிறுவனத்தில் (எச்ஐபிஏ) சிறப்பு அடித்தள பாடத் திட்டத்தைப் பயின்று வருகின்றனர். “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதிலும், அகில இந்திய சேவைகளை நிறுவுவதிலும் அவரது முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். ஓட்டோ வான் பிஸ்மார்க் ஜெர்மனியை ஒன்றிணைத்தார் என கூறிய அவர், அங்கு மக்கள் ஒரு பொதுவான மொழியைப் பேசினர் எனவும் ஒரே கலாச்சாரம் இருந்தது எனவும் குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். ஆனால் பல மொழிகளுடன், கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒருங்கிணைக்கும் மிகவும் சிக்கலான பணியை சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த அசாதாரண சாதனை உலகின் வேறு எந்த முயற்சிகளையும் விட சிறப்பானது என்று அவர் கூறினார். திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆற்றும் பங்கை அவர் பாராட்டினார். பொது சேவையில் பொறுப்புணர்வு மிக்க நடவடிக்கைகளை வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர், செயல்திறனையும் சேவை வழங்கலையும் மேம்படுத்த தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொது வாழ்வில் பொறுமையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். திறமையான, மனிதாபிமான நிர்வாகத்திற்கு பொறுமையும், கவனத்துடன் பிரச்சனைகளைக் கேட்பதும் அத்தியாவசியம் என்று அவர் எடுத்துரைத்தார். பொதுமக்களின் குறைகளைக் கேட்பது பெரும்பாலும் பிரச்சனையின் பெரும்பகுதியைத் தீர்க்கிறது என்று அவர் கூறினார். இந்த கலந்துரையாடல் இளம் அதிகாரிகளுக்கு தலைமைத்துவம், நிர்வாகம், நெறிமுறை சார்ந்த பொது சேவை ஆகியவை தொடர்பான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது. ‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें : https://matribhumisamachar.com/2025/12/10/86283/ आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं: https://www.amazon.in/dp/B0FTMKHGV6 यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर …
Read More »காசநோய் ஒழிப்பு திட்டத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் காசநோயை முற்றிலும் அகற்றுவதற்கான தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், காசநோய் பாதிப்பு குறித்து கண்டறியப்படாத நபர்களை அடையாளம் காணவும், காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும், நாடு முழுவதும் புதிய தொற்று பரவல் ஏற்படாதவாறு தடுக்கவும், புதிய நடைமுறைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் காசநோயால் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஊகிக்கப்படும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணுதல், மார்பு ஊடுகதிர் பரிசோதனை, நோயாளிகளுக்கு முன்கூட்டியே நியூக்ளிக் அமில …
Read More »கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும் ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – SBIN0001076 3) ஐசிஐசிஐ வங்கி ஐடிஏ ஹவுஸ், செக்டர்-4,ஆர்கே புரம் புது தில்லி-110022. கணக்கு எண் – 182401001380 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – ICIC0001824 affdf@icici என்ற யுபிஐ ஐடி மூலமாகவும் மக்கள் கொடிநாள் நிதிக்கு பங்களிப்புகளை வழங்கலாம்.
Read More »மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை
மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான டாக்டர் அம்பேத்கரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் தேசியப் பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதிலும் டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பிலிருந்து நமது தலைமுறைகள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டியெழுப்ப நாடு பாடுபடும் போது டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்கள் நாட்டின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துள்ளார். ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.”
Read More »பொது கொள்முதல் குறித்து ஐடிஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் அமர்வு – அரசு மின் சந்தை தளம் சார்பில் நடத்தப்பட்டது
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு மின் சந்தை தளம், பாதுகாப்புத் துறை கணக்கு சேவைகள் பிரிவு பயிற்சி அதிகாரிகளுக்கு, அரசு மின் சந்தை தளம் எனப்படும் ஜெம் மூலம் பொது கொள்முதலை அதிகரிப்பது தொடர்பான வழிகாட்டுதல் அமர்வைப் புதுதில்லியில் நடத்தியது. அரசு மின் சந்தை தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு மிஹிர் குமார் தமது உரையில், டிஜிட்டல் முறையிலான கொள்முதல் என்பது வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய …
Read More »சர்வதேச சிறுத்தைகள் தினத்தையொட்டி வனவிலங்கு ஆர்வலர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
சர்வதேச சிறுத்தைகள் தினமான இன்று (04.12.2025), சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வனவிலங்குப் பாதுகாவலர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அற்புதமான விலங்கைப் பாதுகாப்பதற்கும், அது செழித்து வளரக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் மத்திய அரசு சிறுத்தைகள் திட்டத்தைத் தொடங்கியதை அவர் குறிப்பிட்டுள்ளார். இழந்த சுற்றுச்சூழல் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், நமது பல்லுயிர் சூழலை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு …
Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருது 2025-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2025, டிசம்பர் 03) புதுதில்லியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மாற்றுத்திறனாளிகள் சமமான தகுதியுடையவர்கள் என்று கூறினார். சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவர்களுடைய சமமான பங்களிப்பை உறுதி செய்வதை தொண்டு சார்ந்த அம்சமாக இன்றி, சம்பந்தப்பட்டவர்களின் கடமை என்று குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் சமமான பங்கேற்புடன் மட்டுமே ஒரு சமூகம் உண்மையாக வளர்ச்சியடைந்ததாகக் கருத முடியும் என்று அவர் …
Read More »போர்க்கப்பல் தயாரிப்பு மற்றும் கையகப்படுத்தல் கட்டுப்பாட்டு அலுவலராக வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது பொறுப்பேற்பு
வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் கட்டுப்பாட்டு அலுவலராக 2025 நவம்பர் 28 அன்று பொறுப்பேற்றார். பணி ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல் ராஜாராம் சுவாமிநாதனிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார். 1987-ம் ஆண்டு கடற்படையில் இணைந்த திரு சஞ்சய் சாது, இயந்திர பொறியியலில் முதுகலை பட்டமும், பாதுகாப்பு உத்தி தொடர்பாக எம்ஃபில் பட்டமும் பெற்றவர். 38 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படை அனுபவத்தில், கொடி அதிகாரி பல முக்கிய பிரிவுகளின் செயல்பாடு உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டில், போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா, ஐஎன்எஸ் துனகிரி ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். கொடி அதிகாரியாக அவர் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, அவர் மும்பை கடற்படை கப்பல் உற்பத்தி பிரிவில் கூடுதல் பொது மேலாளர், கார்வார் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் பிரிவின் கண்காணிப்பாளர், புதுதில்லி கடற்படை தலைமையகத்தில் கடல்சார் பொறியியல் முதன்மை இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கொடி அதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர், அவர் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவின் கூடுதல் இயக்குநர் தலைவர், கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, விசாகப்பட்டினம் கப்பல்கட்டும் தளத்தின் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மேற்கு, கிழக்கு கடற்படை பிரிவுகளில் உள்ள இரண்டு முக்கிய கப்பல் கட்டும் தளங்களுக்குத் தலைமை வகித்த பெருமையும், மேற்கு, கிழக்கு கடற்படை கட்டளைகளின் தலைமை தொழில்நுட்பப் பணி அதிகாரியாக பணியாற்றிய பெருமையும் கொடி அதிகாரிக்கு உண்டு. இவர் கோவாவின் கடற்படைப் போர் கல்லூரியின் முன்னாள் மாணவர். பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் சேவை செய்ததற்காக, குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், நௌசேனா பதக்கம் ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.
Read More »
Matribhumi Samachar Tamil