Sunday, April 12 2026 | 12:11:47 AM
Breaking News

Miscellaneous

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச போதைபொருள் ஒழிப்புத் தினத்தை நாளை (ஜூன் 26-ம் தேதி) மத்திய அரசு கடைப்பிடிக்கிறது

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நாளை (ஜூன் 26-ம் தேதி) புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சர்வதேச நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இதில் துறை சார்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் …

Read More »

ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி இருவருக்கிடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

இந்தியாவின் மகத்தான ஆன்மிக மற்றும் அறநெறித் தலைவர்களான ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் குறித்து புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற  நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.  பிரதமர் அனைவருக்கும் தமது மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு இன்று இந்த அரங்கம் முன்னெப்போதும் இல்லாத தேசத்தின் வரலாற்றுத் தருணத்தைக் காண்கிறது என்றார். நமது சுதந்திரப் …

Read More »

‘ஒரே அரசியல் சாசனம், ஒரே அடையாளச் சின்னம், ஒரே தலைவர்’ — டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் அழைப்பை நினைவு கூர்தல்: அவரது தியாக தினத்தன்று குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி “நினைவு தினம்) அவருக்கு மரியாதை செலுத்தினார், “நமது தேசத்தின் வரலாற்றில் இது ஒரு மகத்தான நாள். நமது மண்ணின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான, டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினம்  இன்று. அவர் ஒரு முழக்கத்தை வழங்கினார். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது ஒரே அரசியல் சாசனம், …

Read More »

குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய நூலின் இரண்டாம் தொகுதி – நாளை வெளியிடுகிறார் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் இரண்டாம் பகுதியான விங்ஸ் டூ அவர் ஹோப்ஸ் –  (Wings to Our Hopes – Volume 2) என்ற நூலையும் அதன் இந்தி மொழி பதிப்பான ஆஷான் கி உடான் (Ashaon Ki Udaan – Khand 2) என்ற நூலையும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் நாளை (23.06.2025) வெளியிடுகிறார். இந்த நூல் குடியரசுத் தலைவர் …

Read More »

ஜூன் 25, ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ ஒரு சோகமான நினைவூட்டல்: குடியரசு துணைத் தலைவர்

புது தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் வளாகத்தில்  நடைபெற்ற 7வது தொகுதி மாநிலங்களவை உள்ளகப் பயிற்சி  திட்டத்தின்  பங்கேற்பாளர்களுடன் குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் கலந்துரையாடினார். அவசரநிலை எனப்படும் ஒரு முக்கியமான வரலாற்று அத்தியாயத்தை நினைவுபடுத்திய அவர், “இன்று நான் ஏழு நாட்களுக்குள் ஒரு சோகமான ஆண்டு நிறைவாக வரும் ஒரு சம்பவத்தைப் பற்றி சிந்திக்கிறேன். 1975 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 28 -வது ஆண்டில் …

Read More »

அதிகாரிகளின் முடிவுகளும், செயல்பாடுகளும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியை கொண்டுள்ளன: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

இந்திய நிறுவன சட்ட சேவை, விமானப் படை பாதுகாப்பு, தர உத்தரவாத சேவை, மத்திய தொழிலாளர் சேவை ஆகியவற்றைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளே, வணக்கம்! இந்த மதிப்புமிக்க சேவைகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உங்கள் ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் சாதனையும், உறுதிப்பாடும், விடாமுயற்சியின் பிரதிபலிப்பாகும். பொது சேவையின் சவால்களை நீங்கள் ஏற்கும்போது, ​​உங்கள் முடிவுகளும் செயல்களும் வாழ்க்கையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அந்தந்த களங்களில், நீங்கள் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கான முன்னோடிகளாக செயல்பட வேண்டும். இந்திய நிறுவன சட்ட சேவைப் பயிற்சி …

Read More »

லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் மறுஆய்வுக் கூட்டத்திற்கு டாக்டர் மிஸ்ரா தலைமை தாங்கினார்

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, குஜராத்தில் உள்ள தோலேரா மற்றும் லோதலில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக இன்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். இந்தத் திட்டங்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும், கட்டுமானத்தில் உள்ள அகமதாபாத்-தோலேரா பசுமைவழி விரைவுச் சாலையை டாக்டர் மிஸ்ரா பார்வையிட்டார். அகமதாபாத் – தோலேரா இடையேயான …

Read More »

யோகா இணைப்பு 2025 : ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா என்பது குறித்து மெய்நிகர் முறையில் உலகளாவிய உச்சிமாநாடு புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது

11-வது சர்வதேச யோகா தினத்தின் முன்னோட்டமாக புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜூன் 14) யோகா இணைப்பு என்ற உலகளாவிய மெய்நிகர் உச்சிமாநாட்டை ஆயுஷ் அமைச்சகம் நடத்தவுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த யோகா குருக்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார நிபுணர்கள், வர்த்தக தலைவர்கள், ஆய்வாளர்கள், உலக அளவில் செல்வாக்கு செலுத்துவோரை இந்த உச்சிமாநாடு ஒருங்கிணைக்கும். யோகா துறையில் உயர்நிலை ஆய்வு அமைப்பான யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. சர்வதேச அளவிலான …

Read More »

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமையில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் சிறப்பு இயக்கம் நடைபெற்றது

2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய  சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம், புதுதில்லியில்  சாகேத்தில் உள்ள மத்திய வக்ஃப் பவனில் ‘தாயின்பெயரில் ஒரு மரக்கன்று நடுதல்’ என்ற சிறப்பு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தது. மத்திய சிறுபான்மை விவகாரங்கள்  அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சக செயலாளர் டாக்டர் சந்திர சேகர் …

Read More »

பத்மஸ்ரீ விருது பெற்ற திரு உமாசங்கர் பாண்டே பாதுகாப்புத் துறையின் சொத்து நிர்வாக தலைமை இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் கலந்து கொண்டார்

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான திரு உமாசங்கர் பாண்டே 2025 ஜூன் 05 அன்று புதுதில்லியில் உள்ள பாதுகாப்புத் துறையின் நிலச் சொத்து நிர்வாக தலைமை இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழா மரம் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. இதில் பாதுகாப்பு நிலச் சொத்து நிர்வாக அமைப்பில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அவர்களது குழந்தைகள் துறை சார்ந்த பிற பணியாளர்கள் உள்ளிட்ட …

Read More »