Thursday, February 05 2026 | 09:05:44 PM
Breaking News

National

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்ட யோகாவின் நேர்மறையான தாக்கம்: மக்களவைத் தலைவர்

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மக்களவை செயலகம் மற்றும் மாநிலங்களவை செயலக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள்  யோகா நெறிமுறையில் பங்கேற்க கூடினர். கூட்டத்தில் உரையாற்றிய திரு பிர்லா, யோகா உடல், மனம் மற்றும் ஆன்மா இடையே நல்லிணக்கத்தை அடைவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும், தனிநபர்களின் …

Read More »

யோகா உலகம் முழுவதையும் ஒன்றிணைத்துள்ளது: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின நிகழ்வில் உரையாற்றினார். சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கி யோகா அமர்வில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு சர்வதேச யோகா தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் கூட்டாக யோகா பயிற்சி செய்ய ஒன்றுகூடும் …

Read More »

பாரம்பரியத்தை சந்திக்கும் யோகா: தொல்லியல் நினைவுச்சின்னங்களில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பிரமாண்டமான கொண்டாட்டத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின்  கீழ் உள்ள 81 பாரம்பரிய தளங்கள் சனிக்கிழமை ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட துடிப்பான யோகா அமர்வுகளை நடத்தின. பிரதமர் திரு நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து 11வது சர்வதேச யோகா தினத்தை வழிநடத்தினார். யோகாவின் உள்ளடக்கிய தன்மையை வலியுறுத்தி, “எல்லைகள், பின்னணிகள், வயது அல்லது …

Read More »

பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் யோகா தின கொண்டாட்டங்கள் – ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு

ஜம்மு & காஷ்மீர், உதம்பூரில் உள்ள வடக்கு கட்டளையில் சுமார் 2,500 வீரர்களுடன் பல்வேறு ஆசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகளைச் செய்து 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு  ராஜ்நாத் சிங் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அவர் தமது உரையில், யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.  மக்களுக்கு யோகா தெளிவை அளிக்கிறது என அவர் …

Read More »

மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ஃபரிதாபாத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்ட அமர்வில் பங்கேற்றார். 11-வது சர்வதேச யோகா தின தேசிய கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர், விசாகப்பட்டினம் கடற்கரையில் நடந்த  யோகா நெறிமுறை  அமர்வில் கிட்டத்தட்ட 5 லட்சம் பங்கேற்பாளர்களுடன் பங்கேற்றார், அதே நேரத்தில் தேசத்தை ஒரு இணக்கமான யோகா செயல்முறை விளக்கத்தில் வழிநடத்தினார். இந்தியா முழுவதும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் …

Read More »

நாடு முழுவதும் மே மாதத்தில் 8,835 அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன

பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்பு துறை, 2025 மே மாதத்திற்கான மாதாந்திர ‘செயலக சீர்திருத்தங்கள்’ அறிக்கையின் 22வது பதிப்பை வெளியிட்டுள்ளது. தூய்மைப் பணி, நிலுவையைக் குறைத்தல், முடிவெடுப்பதில் திறனை அதிகரித்தல், மின்-அலுவலகமயமாக்கல் அமல்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு மூலம் மாற்றத்தக்க ஆளுகை மற்றும் நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு நடைபெற்று வரும் முன்முயற்சிளில் விரிவான பகுப்பாய்வை இந்த அறிக்கை அளிக்கிறது. …

Read More »

தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு சுங்கச் சாவடி செலவைக் குறைக்கும் சிறப்புத் திட்டம் : டாக்டர் எல் முருகன்

மக்கள் பயனடையும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின்  சாதனைப் பட்டியலில் மற்றுமொரு மைல்கல் திட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3000-க்கு பாஸ் வழங்கும் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து துறை …

Read More »

50 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை உதவித்திட்டம்

தொழிலாளர் நல இயக்குநரகம் மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின், குறிப்பாக பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் துறை தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது நேரடி தாக்கத்தை இத்திட்டங்கள் ஏற்படுத்துகின்றன. தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, சுகாதார சேவைகள், கல்விக்கான நிதி உதவி மற்றும் வீட்டுவசதி ஆதரவை வழங்குவதே இதன் முக்கிய இலக்காகும். இந்த நல்வாழ்வு திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று …

Read More »

உலகளாவிய நல்வாழ்வு நடவடிக்கைகளில் யோகாவை முன்னிலைப்படுத்துகிறது இந்தியா: ஆயுஷ் துறைச் செயலாளர்

சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் 2025 ஜூன் 17, அன்று உலகளாவிய திட்டமான யோகா பந்தனின் தொடக்க நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. சர்வதேச யோகா தினம் 2025-ன் கீழ் 10 குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த முயற்சி, யோகா துறையில் நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை மூலம் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது. ‘யோகா பந்தன்’ உலகெங்கிலும் உள்ள உலகளாவிய யோகா தூதர்களை ஒன்றிணைத்து, கலாச்சார பரிமாற்றம், கல்வி உரையாடல் மற்றும் யோகா மூலம் …

Read More »

தேசியவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், அரசியல் கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அப்பாற்பட்டவை – அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் குறித்து குடியரசு துணைத்தலைவர்

“ஆயுஷ்மான் பாரத் என்பது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் போன்ற வடிவங்களில் நமக்கு அதிக மனித வளங்கள் தேவை என்பதைக் குறிக்கிறது. நமக்கு அதிக நோயறிதல் மையங்கள், மருந்துகளுக்கான விற்பனை நிலையங்கள், அதிக ஆராய்ச்சி தேவை. பொது மற்றும் தனியார் துறைகளில் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உருவாக வேண்டும்”, என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். புதுச்சேரி ஜிப்மரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் போது, ​​ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “நாட்டின் ஆரோக்கியம், வளர்ச்சிக்கு …

Read More »