Saturday, April 11 2026 | 06:35:02 AM
Breaking News

National

50 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை உதவித்திட்டம்

தொழிலாளர் நல இயக்குநரகம் மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின், குறிப்பாக பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் துறை தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது நேரடி தாக்கத்தை இத்திட்டங்கள் ஏற்படுத்துகின்றன. தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, சுகாதார சேவைகள், கல்விக்கான நிதி உதவி மற்றும் வீட்டுவசதி ஆதரவை வழங்குவதே இதன் முக்கிய இலக்காகும். இந்த நல்வாழ்வு திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று …

Read More »

உலகளாவிய நல்வாழ்வு நடவடிக்கைகளில் யோகாவை முன்னிலைப்படுத்துகிறது இந்தியா: ஆயுஷ் துறைச் செயலாளர்

சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் 2025 ஜூன் 17, அன்று உலகளாவிய திட்டமான யோகா பந்தனின் தொடக்க நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. சர்வதேச யோகா தினம் 2025-ன் கீழ் 10 குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த முயற்சி, யோகா துறையில் நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை மூலம் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது. ‘யோகா பந்தன்’ உலகெங்கிலும் உள்ள உலகளாவிய யோகா தூதர்களை ஒன்றிணைத்து, கலாச்சார பரிமாற்றம், கல்வி உரையாடல் மற்றும் யோகா மூலம் …

Read More »

தேசியவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், அரசியல் கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அப்பாற்பட்டவை – அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் குறித்து குடியரசு துணைத்தலைவர்

“ஆயுஷ்மான் பாரத் என்பது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் போன்ற வடிவங்களில் நமக்கு அதிக மனித வளங்கள் தேவை என்பதைக் குறிக்கிறது. நமக்கு அதிக நோயறிதல் மையங்கள், மருந்துகளுக்கான விற்பனை நிலையங்கள், அதிக ஆராய்ச்சி தேவை. பொது மற்றும் தனியார் துறைகளில் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உருவாக வேண்டும்”, என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். புதுச்சேரி ஜிப்மரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் போது, ​​ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “நாட்டின் ஆரோக்கியம், வளர்ச்சிக்கு …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது – திரு அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று (15.06.2025) உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தரபிரதேச காவல்துறையில் பணிக்குத் தேர்வான 60,244 சிவில் காவலர்களுக்கு (கான்ஸ்டபிள்கள்) பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா,  உத்தரப்பிரதேச காவல்துறை நாட்டில் மிகப்பெரிய காவல் படை என்றும், ஆனால் …

Read More »

இந்தியா இணக்கத் தீர்வுக்கான நடுவர்மன்ற மையமாக மாறும் -மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்

உலகளாவிய இணக்கத் தீர்வுக்கான நடுவர்மன்ற மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், சட்ட அமைச்சகமானது ஓஎன்ஜிசி, இந்திய சர்வதேச நடுவர் மையம் ஆகியவற்றுடன் இணைந்து, நேற்று (ஜூன் 14, 2025) புது தில்லியின் பாரத் மண்டபத்தில் நிறுவன நடுவர் மன்றம் குறித்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த மாநாட்டில் சட்டம், நீதித் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், …

Read More »

நாட்டின் தற்சார்பை வலுப்படுத்துவதாகஇளையோர் தலைமையிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன – பிரதமர் பாராட்டு

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் தற்சார்பு நிலையை அடைவதற்கு நாட்டில் உள்ள  இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில், டிஜிட்டல் இந்தியா திட்டமானது இளைஞர்கள் புதுமைகளைப் படைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ள தாகவும் அவர் கூறினார். இது உலக அளவில் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், தொழில்நுட்பப் பயன்பாடு நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை …

Read More »

சர்வதேச யோகா தினம் ஒரு சாதனை மட்டுமல்ல – இது ஒரு உலகளாவிய நல்வாழ்வு இயக்கம்: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்

11-வது சர்வதேச யோகா தின விழாவிற்கான அறிமுக நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் இன்று நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தையொட்டி முக்கிய நிகழ்ச்சி ஜூன் 21-ம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான கொண்டாட்டம் குறித்து ஆயுஷ்  இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோடேச்சா ஆகியோர் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் …

Read More »

2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கோடைகால பாசிப்பயறும் உத்திரப்பிரதேசத்தில் நிலக்கடலையும் கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல்

2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2025–26 கோடை பயிர் பருவத்திற்காக உத்தரப் பிரதேசத்தில் 50,750 மெட்ரிக் டன் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்கும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, மாநில விவசாயிகளின் நலனைக் கருத்தில் …

Read More »

15 நாட்கள் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் நிறைவு

மத்திய வேளாண்  அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று குஜராத் மாநிலம் பர்தோலியில் நடைபெற்ற வேளாண் சம்மேளனத்தில் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப  இயக்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 15 நாட்களாக நடைபெற்ற இந்த  பிரச்சார இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் வேளாண் மேம்பாடு, விதைப்பு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. 1928-ம் ஆண்டு ஜூன் 12 அன்று, சர்தார் …

Read More »

கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது: பிரதமர்

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் பெண்கள் ஆற்றிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான பங்களிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று பிரதமர் கூறினார். ஆனால் இன்று அவர்கள் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தில் தீவிரமாகப் பங்கேற்பது மட்டுமல்லாமல், கல்வி முதல் …

Read More »