Wednesday, September 16 2026 | 12:44:06 PM
Breaking News

National

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளக பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளகப்பயிற்சித் திட்டத்தை 2025 ஜனவரி 27 அன்று தொடங்கியது. மனித உரிமைகள், அது தொடர்பான சட்டங்கள் மற்றும் இந்தியாவில் அவற்றின் பயன்பாடு பற்றிய விரிவான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கல்வித் துறைகளைச் சேர்ந்த 80 இளங்கலை, முதுகலை மாணவர்கள் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் பேசிய தேசிய மனித …

Read More »

தேர்வு குறித்த விவாதம் 2025

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைப் போக்குவதற்கு கற்றலைத் திருவிழாவாக மாற்றுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துள்ள முன்முயற்சியான தேர்வு குறித்த விவாதம் அதன் 8-வது பதிப்பில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2018-ம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து, தேர்வு குறித்த விவாதம் நாடு தழுவிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. 2025-ம் ஆண்டில்  8-வது பதிப்பில் 3.56 கோடி பதிவுகளைப் பெற்றுள்ளது. இது 7-வது பதிப்பிலிருந்து 1.3 கோடி பதிவுகளின் அதிகரிப்பை காட்டுகிறது. தேர்வு …

Read More »

விஜய் சதுக்கத்தில் 76 வது குடியரசு தின கொண்டாட்டங்கள் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றன

ரைசினா மலைகள் மீது சூரியன் மறையும் கம்பீரமான பின்னணியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் 2025 ஜனவரி 29 அன்று 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு நடைபெற உள்ளது. குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஏனைய மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் …

Read More »

இணையதளம் மூலம் ஒளிப்பதிவு செய்பவர்கள், அனிமேஷன் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கான சிறந்த விருதுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய தகவல் , ஒளிபரப்பு, ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர்  முக்கிய முன் முயற்சிகளை தொடங்கிவைத்தனர். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் அருண் சாவ்லா, இந்திய திரைப்பட தயாரிப்பாளர் திரு சேகர் கபூர் மற்றும் பிரசார் பாரதியின் தலைமை …

Read More »

ராஷ்ட்ரிய கர்மயோகி ஜன் சேவா திட்டம்: தன்னலமற்ற சேவையை வளர்க்கிறது

மத்திய சட்ட விவகாரங்கள் துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், ராஷ்ட்ரிய கர்மயோகி ஜன் சேவா திட்டத்தை புது தில்லி கேஜி மார்க்கில் உள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்தது. இந்த கலந்துரையாடல்  நிகழ்வு, மக்களை மையப்படுத்திய நிர்வாக அணுகுமுறையை வலியுறுத்தும் வகையில், கர்மயோகி வழியைக் கடைப்பிடிக்க, மத்திய அரசு ஊழியர்களை ஊக்குவிக்கவும், அறிவூட்டவும், வழிகாட்டவும் நோக்கமாக கொண்டிருந்தது. . இந்தத் திட்டம் சேவை உணர்வு  மற்றும் …

Read More »

2025-குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த 942 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன

2025-குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 942 பணியாளர்களுக்கு வீரதீர செயல்கள் மற்றும் சேவைப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:- தீரச்செயல் பதக்கங்கள் பதக்கங்களின் பெயர்கள்   வழங்கப்படும் பதக்கங்களின் எண்ணிக்கை தீரச்செயல் பதக்கம் 95* * காவல் துறை-78, தீயணைப்புத் துறை-17 வீரதீர செயல்களுக்கான பதக்கம் முறையே உயிர் மற்றும் சொத்துக்களைக் காப்பாற்றுவதில் அல்லது …

Read More »

76வது குடியரசு தின கொண்டாட்டத்திற்காக தலைநகருக்கு வருகை தந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாடினார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, 76வது குடியரசு தின விழாவிற்கு தலைநகருக்கு வருகை தந்த புது தில்லியில், எழுச்சிமிகு  கிராமம் திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுடன் இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு ஜுவல் ஓரம், மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய், மத்திய …

Read More »

பத்ம விருதுகள் 2025 அறிவிக்கப்பட்டுள்ளன

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப்பணி, பொது நலன், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மக்கள் சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பான சேவைக்காக ‘பத்ம பூஷண்’  விருதும்  எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவைக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் …

Read More »

தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில்  கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது” என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார். …

Read More »

15வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

இன்று (ஜனவரி 25, 2025) புது தில்லியில் நடைபெற்ற 15-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதில் முன்னுதாரணமாக செயல்பட்ட மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். “இந்திய வாக்குகள் 2024: ஜனநாயகத்தின் சகாப்தம்’’ புத்தகத்தின் முதல் பிரதியையும் தலைமைத் தேர்தல் ஆணையர் …

Read More »