Monday, December 29 2025 | 12:15:13 PM
Breaking News

National

உளவுத்துறை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 23, 2025) புதுதில்லியில் நடைபெற்ற ‘மக்களை மையமாகக் கொண்ட தேசியப் பாதுகாப்பு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் சமூகப் பங்கேற்பு’ என்ற தலைப்பில் உளவுத்துறை நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதிலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை உறுதி செய்வதிலும் ஐபி எனப்படும் உளவுத்துறை ஒரு சிறந்த பங்கை வகித்து வருகிறது என்று கூறினார். இந்த சொற்பொழிவுக்கான கருப்பொருள் நமது நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். …

Read More »

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகள் அவசியம்: குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகளின் அவசியத்தை, குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாநில பொதுப்பணி ஆணையகங்கள்  தலைவர்களின் தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார். நாட்டைக் கட்டமைப்பதில் பொதுப்பணி ஆணையங்களின் பங்களிப்பு குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அதிகாரிகளின் தகுதிகள் நிலைநிறுத்தப்படுவது மட்டுமின்றி, அது குறித்து வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நிர்வாக அமைப்புகளின் தரம், நேர்மை, செயல்திறனை வடிவமைப்பதில் பொதுப் பணி ஆணையங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் கூறினார். நாட்டிற்காக சேவையாற்றுவதற்கு திறமையான, பாரபட்சமற்ற மற்றும் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றும் தனிநபர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ள அரசியல் சாசன  நிறுவனங்களாக பொதுப் பணி ஆணையகங்கள் திகழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குடிமைப் பணிகளின் மீதான மாறிவரும் தேவைகளை வலியுறுத்திய அவர், டிஜிட்டல் நிர்வாகம், சமூக உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள், பொருளாதார மாற்றம் போன்ற தேசிய நலன் சார்ந்து நடவடிக்கைகளுக்கு அரசு அளித்து வரும் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது,தேர்ந்தெடுக்கப்படும் குடிமைப் பணி அலுவலர்களின் தரத்தைப் பொறுத்தது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Read More »

பதினெட்டாவது மக்களவையின் ஆறாவது அமர்வு நிறைவடைந்தது

2025 டிசம்பர் 1 அன்று தொடங்கிய பதினெட்டாவது மக்களவையின் ஆறாவது அமர்வு இன்று நிறைவடைந்தது. இது தொடர்பாக, மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா, இந்த அமர்வு 15 நாட்கள் நடைபெற்றதாகத் தெரிவித்தார். இந்த அமர்வின் மொத்தப் பணி நேரம் 92 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும். இந்த அமர்வின் போது அவையின் உற்பத்தித்திறன் 111 சதவீதமாக இருந்தது என்று திரு. பிர்லா தெரிவித்தார். இந்த அமர்வின் போது 10 மசோதாக்கள் …

Read More »

2025-ம் ஆண்டில் அஞ்சல் துறையின் முக்கிய செயல்பாடுகள், ஒரு பார்வை

அஞ்சலக வலையமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், மக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை வழங்கவும் வெளியுறவு அமைச்சகம், அஞ்சல் துறையுடன் இணைந்து, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களை (POPSK) இயக்கி வருகிறது. 30.11.2025 நிலவரப்படி, 452 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஜனவரி 2025 முதல் நவம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் திருப்பூர், பொள்ளாச்சி உட்பட 10 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் 13352 ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டன. அக்டோபரில் தேசிய அஞ்சல் …

Read More »

பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது சர்வதேச உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் 2025, டிசம்பர் 19 அன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறும் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது சர்வதேச உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அத்துடன் இந்த நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்ற உள்ளார். ஆராய்ச்சி, நிலைப்படுத்துதல் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பு மூலம் இந்திய அறிவுசார் முறை, முக்கிய பாரம்பரிய மருத்துவ முறையை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் துறைக்கான …

Read More »

அணுசக்தியின் உள்ளடக்கம்

நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் அணுசக்திக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. நாட்டில் வரையறுக்கப்பட்ட யுரேனிய வளங்களையும், அதிக தோரியம் வளங்களையும் சரியான முறையில் பயன்படுத்தும் நோக்கில், அணுசக்தி உற்பத்தி மற்றும் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை அடைவதற்காக, அணுசக்தித் துறை, செலவழித்த அணு எரிபொருளின் மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்ட மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக செயல்படுத்தப்படவுள்ள மூன்று கட்ட அணுசக்தித் திட்டம், உலைகளில் (முதல் நிலை) இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டில் …

Read More »

இயற்கை வேளாண்முறை கோதுமை மற்றும் பருப்பு வகைகளுக்கான தேவை அதிகரிப்பு

இந்திய சந்தையில் இயற்கை வேளாண்முறை கோதுமை மற்றும் பருப்பு வகைகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க வகையிலும் சீராகவும்  அதிகரித்து வருகிறது. ரசாயனம் இல்லாத முறையில் பயிரிடப்படும் உணவுக்கு நுகர்வோர் விருப்பம் குறிப்பாக நகர்ப்புற மற்றும் பகுதி நகர்ப்புற மையங்களில் மாறி வருகிறது . அதிகரித்து வரும் சுகாதார விழிப்புணர்வு, வீட்டு வருவாய் அதிகரிப்பு, சான்றளிக்கப்பட்ட இயற்கை வேளாண் விநியோகத் தொடர்கள் மீதான நம்பிக்கை ஆகியவை தேவையை மேலும் அதிகரித்துள்ளன. தேசிய கூட்டுறவு …

Read More »

சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் மத்திய அரசின் முன்முயற்சிகள்

பாதுகாப்பான, நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய இணையப்  பயன்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்படும் இணையவழி அச்சுறுத்தல்கள் குறித்து போதிய விழிப்புணர்வுடனும் முழு கவனத்துடனும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்திய கணினி அவசரகால பணிக் குழு மற்றும் தேசிய முக்கியத் தகவல் உள்கட்டமைப்புப் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து முக்கியத் துறைகள் உட்பட டிஜிட்டல் …

Read More »

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமிலான உயர்மட்ட குழு பஞ்சாயத்து அளவில் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ₹507.37 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் இயங்கும் உயர்மட்டக் குழு, 20 மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பேரிடர் அபாயக் குறைப்பு  முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்திற்கு ரூ.507.37 கோடி நிதிக்கு இன்று (டிசம்பர் 16) ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு பேரிடரையும் தாங்கும் வகையில் …

Read More »

ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று (14.12.2025) யூத பண்டிகையான ஹனுக்காவின் முதல் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரமான இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ள பிரதமர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான உலகளாவிய போராட்டத்தை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “யூத பண்டிகையான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடிய மக்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா நிற்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.”

Read More »