குடியரசுத் துணைத்தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் , தில்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற ‘அரசியல் சாசன தின’ கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். திரு. வித்தல்பாய் படேல் இந்தியாவின் முதல் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் சட்டமன்றப் பயணம் குறித்த சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். குடியரசுத் துணைத்தலைவர் உரையாற்றுகையில், இந்திய அரசியலமைப்பை ஒரு ‘உயிருள்ள ஆவணம்’ என்று கூறினார், இது நாட்டின் ஜனநாயகப் …
Read More »அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் கொடி ஏற்றுதல் உத்சவத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
நாட்டின் சமூக-கலாச்சார மற்றும் ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கொடிக் கம்பத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காவி கொடியை ஏற்றி வைத்தார். கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதையும் இந்த விழா குறிக்கிறது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று அயோத்தி …
Read More »காட்சிகள் வழியாக ஒரு பயணம்: ஒளிப்பதிவு கலைஞர் ரவி வர்மனின் காட்சி உலகம்
கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா 2025-ல், ‘லென்ஸ் வழியாக: ஒவ்வொரு காட்சியிலும் உணர்வை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் ஒளிப்பதிவுக் கலைஞர் ரவி வர்மன் கலந்து கொண்ட அமர்வு நடந்தது. இதில், அவரது உள்ளுணர்வு, நினைவுகள் மற்றும் கலை உத்திகள் நிறைந்த காட்சி உலகம் குறித்து அவர் பேசினார். தன்னுடைய நீண்ட பெயரைக் குறைத்து ‘வர்மன்’ என்ற பெயரைக் கொண்டதற்கும், அவர் தன்னை ஒரு போராளியாகவே உணர்வதற்கும் உள்ள …
Read More »பழங்குடியினர் நல அமைச்சகத்தின் திட்டம் மற்றும் சாதனைகள் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் கேட்டறிந்தார்
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. ஜூவல் ஓரம், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, பழங்குடியின மக்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விரிவாக விளக்கினார். இந்தச் சந்திப்பின்போது, பழங்குடியின உரிமைகளைப் பாதுகாப்பது, கல்வி மற்றும் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவது, பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் மற்றும் கலாச்சாரத்துக்கு புத்துயிர் அளிக்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், …
Read More »எதிர்கால பொருளாதாரத்தை வடிவமைக்கக்கூடிய அரசின் மாற்றத்தக்க தொழிலாளர் சீர்திருத்தங்களை எடுத்துரைக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
எதிர்கால பொருளாதாரத்தை வடிவமைக்கக்கூடிய அரசின் மாற்றத்தக்க தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறித்தும் நம்பிக்கைக்குரிய உலகளாவிய கூட்டாளியாக உருவெடுக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தாம் அண்மையில் எழுதிய கட்டுரையில், இணக்கங்களை எளிமைப்படுத்தியுள்ள, பெண் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தக்கூடிய இந்த சீர்திருத்தங்களின் நீண்டகால தாக்கத்தை பிரதிபலித்துள்ளார். இதுகுறித்து …
Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நவம்பர் 24 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,50,24,723 கணக்கெடுப்பு படிவங்கள் …
Read More »சிந்தி சமூகத்தினரின் அர்ப்பணிப்பு அவர்களை நாட்டின் சமூக, பொருளாதார வலிமையின் தூணாக மாற்றியுள்ளது: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
தொழில்முனைவு, கலாச்சாரம், சேவை உள்ளிட்டவற்றில் சிந்தி சமூகத்தினரின் அர்ப்பணிப்பு அவர்களை நாட்டின் சமூக, பொருளாதார வலிமையின் தூணாக மாற்றியுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். புதுதில்லி விஞ்ஞான் பவனில் விஸ்வ சிந்தி இந்து சங்கங்களின் அறக்கட்டளை இன்று (23.11.2025) ஏற்பாடு செய்திருந்த ” வலுவான சமூகம் – வளமான இந்தியா” (சஷக்த் சமாஜ் – சம்ரித் பாரத்) என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார். சிந்தி சமூகத்தினரின் சேவைக்கான உறுதியான அர்ப்பணிப்பையும், ஆழமான கலாச்சார பாரம்பரியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த குணங்கள் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சமூகத்தின் வலிமையையும், மீட்சித் தன்மையையும் பாராட்டிய திரு ஓம் பிர்லா, வலுவான இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்கும் கொள்கைகளை இந்த சமூகம் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். வணிகம், தொழில், வங்கி, சேவைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்த சமூகம் தொடர்ந்து சிறந்து விளங்கி வருவதாகவும், இதன் மூலம் பல லட்சக் கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார். இந்த சமூகத்தினரின் வெற்றி பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஆழமான மதிப்புகளிலும் வேரூன்றியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மதிப்புகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றன என அவர் கூறினார். தேசப் பிரிவினையின் போது சிந்தி சமூகத்தினர் சந்தித்த சோதனைகள், இந்த சமூகத்தை மேலும் வலுப்படுத்தியதாக மக்களவைத் தலைவர் தெரிவித்தார். பொருள் இழப்பு உள்ளிட்ட பல இழப்புகள் இருந்தபோதிலும், சிந்தி சமூகத்தினர் தங்கள் மதம், மரபுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சார அடையாளத்தை கடுமையாக பின்பற்றுவதாக அவர் கூறினார். அசாதாரண உறுதியுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியதாகவும் துன்பங்களை வாய்ப்பாக மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சமூகத்தினரின் மீட்சித் தன்மைக்கும் கலாச்சார பெருமைக்கும் ஒரு ஆழமான எடுத்துக்காட்டாக உள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Read More »ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்
ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இன்று (நவம்பர் 22, 2025) நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இதில் குடியரசுத் தலைவர் பேசியதாவது: பண்டைக் காலங்களிலிருந்து, நமது துறவிகளும் முனிவர்களும் தங்கள் செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் சமூகத்தை வழிநடத்தி வருகின்றனர். இந்த மாமனிதர்கள் சமூகத்தின் நலனுக்காக ஏராளமான பணிகளைச் செய்துள்ளனர். அத்தகைய சிறந்த …
Read More »ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் தலைமையகம் கூட்டு மின்காந்த வாரியக் கூட்டத்தை நடத்தியது
படைத் தளபதிகளின், துணைக் குழுவான கூட்டு மின்காந்த வாரியத்தின் வருடாந்திரக் கூட்டம் நவம்பர் 20 அன்று புதுதில்லியில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் (செயல்பாடுகள்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ராகேஷ் சின்ஹா தலைமையில் நடைபெற்றது. முப்படைகளின் கூட்டு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு எட்டப்படுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அலைக்கற்றை மேலாண்மை ஆகிய துறைகளில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல …
Read More »நீரை திறம்பட பயன்படுத்த வேண்டும் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
6-வது தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பு – மக்கள் பங்களிப்பு விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது பேசிய அவர், மனித நாகரிகத்தின் கதை என்பது ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், கடற்கரைகளிலும், பல்வேறு நீர் நிலைகளையொட்டி அமையும் குழுக்களின் கதையாகும் என்று தெரிவித்தார். நமது பாரம்பரியத்தில், ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் போற்றப்படுகின்றன என்று அவர் கூறினார். நமது தேசியப் பாடலில், பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய முதல் வார்த்தை சுஜலாம் என்பதாகும். எண்ணற்ற நீர் …
Read More »
Matribhumi Samachar Tamil