“சேவை நீட்டிப்பு, குறிப்பிட்ட பதவிக்கு எந்த வடிவத்திலும் நீட்டிப்பு என்பது வரிசையில் இருப்பவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. இது எதிர்பார்ப்பின் தர்க்கரீதியான கொள்கையை மீறுகிறது. சில தனிநபர்கள் இன்றியமையாதவர்கள் என்பதை நீட்டிப்பு குறிக்கிறது. இன்றியமையாமை என்பது ஒரு கட்டுக்கதை. இந்த நாட்டில் திறமைகள் அதிகம். யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல’’ என்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில …
Read More »சவால்களுக்கு தீர்வு காண கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ‘யோசனை மற்றும் புத்தாக்கம் போட்டியை’ என்.சி.சி தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்
தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் இன்று (ஜனவரி 10) புதுதில்லியின் சஃப்தர்ஜங்கில் உள்ள என்.சி.சி கட்டிடத்தில் ‘யோசனை மற்றும் புதிய கண்டுபிடிப்பு போட்டியை’ தொடங்கி வைத்தார். என்.சி.சி குடியரசு தின முகாமில் (ஆர்.டி.சி) முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தனித்துவமான முயற்சியானது என்.சி.சி. மாணவர்களுக்கு விமர்சன ரீதியாக சிந்திக்கவும் நிஜ உலக சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கவும் உதவக்கூடிய கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை …
Read More »தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு
பல்வேறு நாடுகளிடையே மோதல்கள், சவால்கள் நிறைந்துள்ள தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 10, -ம் தேதி) புதுதில்லியில் நடைபெற்ற வெளிநாட்டு தூதர்களின் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாடுகளிடையே பரஸ்பர வளம் மற்றும் அமைதியை உறுதிசெய்யும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புவி சார் அரசியல் பதற்றங்களை சமாளிக்க …
Read More »உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் 2025-ல் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் 2025-ம் ஆண்டு ஜனவரி 20 முதல் 24 தேதி வரை நடைபெறவுள்ள 55- வது உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திர கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன்களை விரிவுபடுத்துவது, உலக நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து “அறிவார்ந்த யுகத்திற்கான ஒத்துழைப்பு.” என்ற கருப்பொருளில் விவாதிக்ப்படவுள்ளது. இந்த மாநாட்டை மையமாகக் கொண்டு …
Read More »18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விருதுகளை வழங்கினார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று (ஜனவரி 10, 2025) நடைபெற்ற 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது நாட்டின் சிறந்த பிரதிநிதிகள் என்று கூறினார். இந்தப் புனித பூமியில் பெறப்பட்ட அறிவு மற்றும் திறன்களை மட்டும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது …
Read More »அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் 24.01.2025 அன்று நடைபெற உள்ளது
அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்தியக் கோட்டம் தியாகராயநகர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று காலை 11 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பின்வரும் அஞ்சல் அலுவலகங்களின் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 8939646404 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் 20.01.2025-க்குள் அனுப்பலாம். தியாகராய நகர், தலைமை தபால் அலுவலகம்- 600 017, தியாகராய நகர் வடக்கு தபால் அலுவலகம்- 600 017. …
Read More »சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் : 2024-ம்ஆண்டு செயல்பாடுகள்
பாரத்மாலா பரியோஜனா போன்ற முன்னோடித் திட்டங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 60% வளர்ச்சியடைந்துள்ளது. 2014-ல் 91,287 கிமீ ஆக இருந்த நெடுஞ்சாலை தற்போது 146,195 கிமீ ஆக அதிகரித்துள்ளது. தேசிய அதிவேக வழித்தடங்கள் 2014-ல் 93 கிலோமீட்டராக இருந்தது தற்போது 2,474 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் …
Read More »புதுதில்லியில் உள்ள காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்
புதுதில்லியில் உள்ள காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். மத்திய உள்துறை செயலாளர், காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகத்தின் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியகத்தின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட முயற்சிகள் …
Read More »2025 குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
2025 குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ‘மக்கள் பங்கேற்பை’ அதிகரிக்கும் நோக்கத்திற்கு ஏற்ப, 2025 ஜனவரி 26 அன்று புதுதில்லி கடமைப் பாதையில் 76- வது குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ‘ஸ்வர்னிம் பாரத்’ சிற்பிகளான பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களும், அரசின் …
Read More »ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி …
Read More »
Matribhumi Samachar Tamil