கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்திய பின்பு சில திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வுகளில் திடீர் மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் இடையே நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் திறன் வாய்ந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தடுப்பூசிகள் மிகவும் அரிதான பக்க …
Read More »போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொழில் பிணைப்பை துண்டித்து இளைஞர்களைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
உலகளாவிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் திட்டத்தை முறியடித்ததற்காக, தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, போதைப்பொருள் கடத்தல் கும்பலை, அவர்கள் எங்கிருந்து செயல்பட்டாலும் ஒடுக்கவும் நமது இளைஞர்களைப் பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: …
Read More »புதிய குற்றவியல் சட்டங்களின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் நடைபெற்ற “நீதி அமைப்பில் நம்பிக்கையின் பொற்காலம்” நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா உரையாற்றினார்
புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற “நீதி அமைப்பில் நம்பிக்கையின் பொற்காலம்” நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வி.கே. சக்சேனா, முதல்வர் திருமதி. ரேகா குப்தா, மத்திய உள்துறை செயலாளர் மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் உள்ளிட்ட …
Read More »பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள் 2025 திட்டம் அறிவிப்பு
நடப்பாண்டில் (2025) பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமர் விருது வழங்கும் திட்டத்தை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இன்று (01.07.2025) அறிவித்துள்ளது. பிரதமரின் விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பதிவு செய்வதற்கும், சமர்ப்பிப்பதற்குமான இணையதளம் 2025 அக்டோபர் 2-ம் தேதி முதல் முறையாகத் தொடங்கப்படும், அதன் பிறகு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். இந்த விருதுத் திட்டம் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்டுவதை ஊக்குவிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தரவு, ஆவண …
Read More »மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மண்டவியா, திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனுடன் புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. …
Read More »மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
நாட்டுமக்களே! வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன், நல்வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் யோகக்கலையின் ஆற்றல், சர்வதேச யோகக்கலை தினத்தின் நினைவலைகளால் நிரம்பியிருப்பீர்கள்!! இந்த முறையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாடெங்கிலும், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் சர்வதேச யோகக்கலை தினத்தின் அங்கமாக ஆனார்கள். பத்தாண்டுகள் முன்பாக இந்த தினம் தொடங்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் முந்தையதை விட மேலும் …
Read More »அவசரநிலைக் காலத்தின் போது அரசியல் சாசன முகவுரையில் சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டன – முகவுரை அரசியலமைப்பின் ஆன்மா, அதில் மாற்றம் செய்யாமல் மதிக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினருமான திரு டி.எஸ். வீரய்யா தொகுத்த ‘அம்பேத்கரின் செய்திகள்’ என்ற நூலை புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று (28.06.2025) வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்தவொரு அரசியலமைப்பின் முகவுரையும் அதன் ஆன்மா எனவும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தனித்துவமானது என்றும் கூறினார். பாரதத்தைத் தவிர வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையும் …
Read More »ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (28.06.2025) நடைபெற்ற ஆச்சார்யா வித்யானந்த் மஹாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாடு காண்கிறது என்றும், ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவின் புனிதத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். மதிப்பிற்குரிய ஆச்சார்யாவின் அழியாத உத்வேகத்தால் நிறைந்த இந்த நிகழ்வு, ஒரு அசாதாரணமான மற்றும் எழுச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இன்றைய தினம் மற்றொரு காரணத்திற்காக சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, 1987 ஜூன் 28 அன்று ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜுக்கு முறையாக ‘ஆச்சார்யா’ பட்டம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இது வெறும் பட்டம் மட்டுமல்ல, சமண மரபை சிந்தனை, ஒழுக்கம் மற்றும் இரக்கத்துடன் இணைக்கும் ஒரு புனித நீரோட்டத்தின் தொடக்கமாகும் என்றும் அவர் கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவை நாடு கொண்டாடும் வேளையில், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை நினைவுகூரும் வகையில் இந்த தேதி அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி முனிராஜுக்கு மரியாதை செலுத்துவதாகவும், அனைவருக்கும் ஆச்சார்யாவின் ஆசிகள் கிடைக்க விரும்புவதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார். வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழா ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, இது ஒரு சகாப்தத்தின் நினைவைக் கொண்டுள்ளது என்றும் ஒரு சிறந்த துறவியின் வாழ்க்கையை எதிரொலிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், சிறப்பு நினைவு நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் வெளியிடப்பட்டு உள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். ஆச்சார்யா பிரக்யா சாகரை சிறப்பாக அங்கீகரித்து மரியாதை செலுத்திய திரு நரேந்திர மோடி, அவரது வழிகாட்டுதலின் கீழ், லட்சக்கணக்கான சீடர்கள் மதிப்பிற்குரிய குரு காட்டிய பாதையில் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், தமக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கப்பட்டதாகவும், இந்திய பாரம்பரியம் துறவிகளிடமிருந்து பெறப்படுவதை ஒரு ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொடுக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தப் பட்டத்தை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு, அதை இந்தியத் தாயின் பாதங்களில் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் கூறினார். வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் தெய்வீக ஆன்மாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் ஆழ்ந்த உணர்ச்சித் தொடர்பைப் பற்றிப் பேசிய பிரதமர், அத்தகைய மரியாதைக்குரிய நபரைப் பற்றிப் பேசுவது இயற்கையாகவே ஆழமான உணர்ச்சிகளைத் தூண்டுகிறது என்று குறிப்பிட்டார். ஸ்ரீ வித்யானந்த் ஜி முனிராஜைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அவரது குரலை மீண்டும் ஒருமுறை கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார். இவ்வளவு சிறந்த ஆளுமையின் பயணத்தை வார்த்தைகளில் தொகுப்பது எளிதான காரியம் அல்ல என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆச்சார்ய வித்யானந்த் ஜி முனிராஜ் 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி கர்நாடகாவின் புனித பூமியில் பிறந்தார் எனவும் அவருக்கு ‘வித்யானந்த்’ என்ற ஆன்மீகப் பெயர் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆச்சார்யரின் வாழ்க்கை, அறிவு மற்றும் ஆன்மீகத்தின் தனித்துவமான சங்கமம் என்பதை அவர் எடுத்துரைத்தார். அவரது உரை ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்தது எனவும் ஆனால் அவரது வார்த்தைகள் மிகவும் எளிமையானவை என்றும் அவற்றை எவரும் புரிந்து கொள்ள முடியும் எனவும் பிரதமர் கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் ஜி 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் எனவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வெறுங்காலுடன் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்றும் தனது அயராத முயற்சிகள் மூலம் கோடிக் கணக்கான இளைஞர்களை ஒழுக்கம் மற்றும் கலாச்சார விழுமியங்களுடன் இணைத்துள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜை ‘சகாப்தத்தின் தொலைநோக்குப் பார்வையாளர்’ என்று அவர் வர்ணித்தார். ஆச்சார்யாவின் ஆன்மீக ஒளியை நேரில் அனுபவிக்கவும், காலப்போக்கில் அவரது வழிகாட்டுதலையும் ஆசீர்வாதங்களையும் பெறவும் வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறினார். இந்த நூற்றாண்டு விழாவில், மதிப்பிற்குரிய ஆச்சார்யாவிடமிருந்து அதே பாசத்தையும் நெருக்கத்தையும் இன்னும் உணர முடிகிறது என்று அவர் கூறினார். “இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகம் எனவும், அதன் கருத்துக்கள், தத்துவ சிந்தனை மற்றும் உலகக் கண்ணோட்டம் நித்தியமானவை என்பதால் நமது நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருக்கிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். இந்த நீடித்த பார்வை முனிவர்கள், துறவிகள் மற்றும் ஆச்சார்யர்களின் ஞானத்தில் வேரூன்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி முனிராஜ் இந்த காலத்தால் அழியாத மரபின் நவீன கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார் என்பதை அவர் எடுத்துரைத்தார். ஆச்சார்யா ஏராளமான பாடங்களில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார் என்றும் பல துறைகளில் சிறந்து விளங்கினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆச்சார்யாவின் ஆன்மீக தீவிரம், விரிவான அறிவு மற்றும் கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற மொழிகளில் அவரது புலமை ஆகியவற்றை பிரதமர் எடுத்துரைத்தார். இலக்கியம் மற்றும் மதத்திற்கு ஆச்சார்யாவின் பங்களிப்புகள், பாரம்பரிய இசை மீதான அவரது பக்தி, தேசிய சேவைக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துரைத்த பிரதமர், ஆச்சார்யா முன்மாதிரியான நபர் என்று கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் ஒரு சிறந்த இசைக்கலைஞர் மட்டுமல்ல, ஒரு தீவிர தேசபக்தர், சுதந்திரப் போராட்ட வீரர், மற்றும் முழுமையான பற்றின்மையை உள்ளடக்கிய ஒரு உறுதியான முனிவர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அவரை அறிவின் நீர்த்தேக்கம் என்று பிரதமர் வர்ணித்தார். சுரேந்திர உபாத்யாயிடமிருந்து ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜ் வரையிலான பயணம் ஒரு சாதாரண மனிதரிலிருந்து ஒரு உன்னதமான ஆன்மாவாக மாறுவதாகும் என்று திரு நரேந்திர மோடி கூறினார். எதிர்காலம் தற்போதைய வாழ்க்கையின் வரம்புகளால் கட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக ஒருவரின் திசை, நோக்கம் மற்றும் உறுதியால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான உத்வேகம் என்று பிரதமர் தெரிவித்தார். ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜ் தனது வாழ்க்கையை ஆன்மீக பயிற்சியுடன் நிறுத்தவில்லை எனவும், மாறாக சமூக மற்றும் கலாச்சார மறுகட்டமைப்புக்கான ஒரு ஊடகமாக தனது வாழ்க்கையை மாற்றினார் என்றும் குறிப்பிட்ட பிரதமர், பிராகிருத பவன் மற்றும் பல ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவியதன் மூலம், ஆச்சார்யா புதிய தலைமுறையினருக்கு அறிவின் சுடரை எடுத்துச் சென்றார் என்பதை சுட்டிக் காட்டினார். ஆச்சார்யா சமண வரலாற்றுக்கும் சரியான அங்கீகாரத்தை அளித்தார் என்று அவர் கூறினார். ‘ஜெயின் தரிசனம்’ மற்றும் ‘அனேகாந்த்வாத்’ போன்ற முக்கிய நூல்களை எழுதியதன் மூலம், அவர் தத்துவ சிந்தனையை ஆழப்படுத்தினார் எனவும் உள்ளடக்கம் மற்றும் புரிதலின் அகலத்தை ஊக்குவித்தார் என்றும் பிரதமர் தெரிவித்தார். கோயில் மறுசீரமைப்பு முதல் பின்தங்கிய குழந்தைகளின் கல்வி மற்றும் பரந்த சமூக நலன் வரை, ஆச்சார்யாவின் ஒவ்வொரு முயற்சியும் சுய உணர்தல் மற்றும் பொது நன்மை ஆகியவற்றின் தொகுப்பை பிரதிபலித்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். சுயநலமற்ற சேவைக்கான வழிமுறையாக மாறும்போதுதான் வாழ்க்கை உண்மையிலேயே ஆன்மீகமாகிறது என்று ஆச்சார்யா வித்யானந்த் மகாராஜ் ஒருமுறை கூறியதை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, இந்த சிந்தனை சமண தத்துவத்தின் சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும், இந்தியாவின் உணர்வோடு உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். “இந்தியா சேவையால் வரையறுக்கப்பட்ட மற்றும் மனிதநேயத்தால் வழிநடத்தப்படும் ஒரு நாடு” என்று பிரதமர் தெரிவித்தார். உலகம் பல நூற்றாண்டுகளாக வன்முறையை வன்முறையால் அடக்க முயற்சித்தாலும், இந்தியா உலகிற்கு அகிம்சையின் சக்தியை அறிமுகப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய நெறிமுறைகள் எப்போதும் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் உணர்வை முதன்மைப்படுத்தியுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். “இந்தியாவின் சேவை மனப்பான்மை நிபந்தனையற்றது, சுயநலத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் தன்னலமற்ற தன்மையால் ஈர்க்கப்பட்டது” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார், இந்தக் கொள்கை இன்று நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்துகிறது என்பதை அவர் விளக்கினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், ஆயுஷ்மான் பாரத், மற்றும் பின்தங்கியவர்களுக்கு இலவச உணவு தானிய விநியோகம் போன்ற முயற்சிகள் இந்த நெறிமுறையின் பிரதிபலிப்புகளாகும் என்று அவர் மேற்கோள் காட்டினார். இது சமூகத்தின் கடைசி நிலையில் உள்ளவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது எனவும் அனைத்து திட்டங்களிலும் செறிவூட்டலை அடைவதற்கும், யாரும் பின்தங்கியிருக்காமல் இருப்பதற்கும், முன்னேற்றம் உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த உறுதிப்பாடு ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பகிரப்பட்ட தேசிய உறுதிப்பாடாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். “தீர்த்தங்கரர்கள், துறவிகள் மற்றும் ஆச்சார்யர்களின் போதனைகள், வார்த்தைகள் ஒவ்வொரு சகாப்தத்திலும் காலத்தால் அழியாதவை மற்றும் பொருத்தமானவை. இன்று, ஐந்து மகாவ்ரதங்கள், அனுவ்ரதம், திரிரத்னங்கள் மற்றும் ஆறு அத்தியாவசியங்கள் போன்ற சமண மதக் கொள்கைகள் முன்பை விட மிகவும் முக்கியமானவை” என்று பிரதமர் கூறினார். காலத்தின் தேவைக்கேற்ப சாமானிய மக்களுக்கு நித்திய போதனைகள் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜ் தனது வாழ்க்கையையும் பணியையும் இந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்ததாக திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். “சமண வேதங்களை பேச்சுவழக்கில் வழங்குவதற்காக ஆச்சார்யா ‘வச்சநாமிர்த’ இயக்கத்தைத் தொடங்கினார். மேலும் ஆழமான ஆன்மீகக் கருத்துக்களை மக்களுக்கு எளிமையாகவும் அணுகக்கூடிய வகையிலும் தெரிவிக்க பக்தி இசையையும் பயன்படுத்தினார்” என்று பிரதமர் கூறினார். ஆச்சார்யாவின் பஜனைகளில் ஒன்றை மேற்கோள் காட்டிய பிரதமர், இத்தகைய இசையமைப்புகள் ஞான முத்துக்களால் ஆன ஆன்மீக மாலைகள் என்று குறிப்பிட்டார். அழியாமையின் மீதான இந்த எளிதான நம்பிக்கையும், எல்லையற்றதை நோக்கிப் பார்க்கும் தைரியமும் இந்திய ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் உண்மையிலேயே சிறப்பானதாக ஆக்குகின்றன என்று அவர் மேலும் கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டானது தொடர்ச்சியான உத்வேகத்தை அளிக்கும் ஆண்டு என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, ஆச்சார்யாவின் ஆன்மீக போதனைகளை தனிப்பட்ட வாழ்க்கையில் உள்வாங்குவது மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் தேசத்தின் நலனுக்காக அவரது பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பையும் வலியுறுத்தினார். ஆச்சார்யா வித்யானந்த் தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் பக்திப் படைப்புகள் மூலம் பழங்கால பிராகிருத மொழியை மீண்டும் உயிர்ப்பிப்பதில் வகித்த முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். பிராகிருதம் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றாகும் என்றும், சமண ஆகமங்கள் இயற்றப்பட்ட பகவான் மகாவீரரின் போதனைகளின் அசல் ஊடகம் அது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கலாச்சார புறக்கணிப்பு காரணமாக, மொழி பொதுவான பயன்பாட்டிலிருந்து மறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா வித்யானந்த் போன்ற துறவிகளின் முயற்சிகள் இப்போது தேசிய முயற்சிகளாக மாறிவிட்டன என்றும் பிரதமர் கூறினார். அக்டோபர் 2024-ல், அரசு பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியதை அவர் நினைவு கூர்ந்தார். இந்தியாவின் பழங்கால கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க தொடங்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தை அவர் குறிப்பிட்டார். இதில் கணிசமான எண்ணிக்கையிலான சமண வேதங்கள் மற்றும் ஆச்சார்யர்கள் தொடர்பான நூல்கள் அடங்கும் என பிரதமர் கூறினார். உயர்கல்வியில் தாய்மொழியைப் பயன்படுத்துவதை அரசு ஊக்குவித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். செங்கோட்டையில் இருந்து தமது உரையை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், காலனித்துவ மனநிலையிலிருந்து நாட்டை விடுவித்து, வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் இணைத்து முன்னேறுவதற்கான உறுதியை மீண்டும் எடுத்துரைத்தார். இந்த உறுதிமொழி இந்தியாவின் கலாச்சார மற்றும் புனித யாத்திரைத் தலங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். 2024-ம் ஆண்டில், பகவான் மகாவீரரின் 2,550-வது நிர்வாண மஹோத்சவத்தைக் குறிக்கும் வகையில் அரசு பெரிய அளவிலான கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். இது ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜால் ஈர்க்கப்பட்டு, ஆச்சார்ய பிரக்யா சாகர் போன்ற துறவிகளால் ஆசீர்வதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். வருங்காலங்களில், நாடு அதன் கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்த இதுபோன்ற பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய நிகழ்ச்சியைப் போலவே, இதுபோன்ற அனைத்து முயற்சிகளும் மக்கள் பங்களிப்பு உணர்வால், அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்துடன் வழிநடத்தப்படும் என்று உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வில் தமது பங்கேற்பு இயற்கையாகவே நவ்கர் மந்திர தினத்தின் நினைவை எழுப்பியதாக திரு நரேந்திர மோடி கூறினார். இந்த ஒன்பது தீர்மானங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன எனவும் ஏராளமான மக்கள் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற ஆர்வத்துடன் பாடுபடுகிறார்கள் என்பதிலும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆச்சார்ய வித்யானந்த் ஜி முனிராஜின் போதனைகள் இந்த உறுதிமொழிகளை வலுப்படுத்துகின்றன என்றும் கூறினார். ஒன்பது தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், தண்ணீரைப் பாதுகாப்பதே முதல் தீர்மானம் என்று கூறினார். ஒவ்வொரு துளியின் மதிப்பையும் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்றும், அது தாய் பூமிக்கு நாம் செய்யும் ஒரு பொறுப்பு மற்றும் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார். இரண்டாவது தீர்மானம் தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, தாய்மார்கள் நம்மை வளர்ப்பது போல அதை வளர்ப்பது, ஒவ்வொரு மரத்தையும் தாயிடமிருந்து ஒரு உயிருள்ள ஆசீர்வாதமாக மாற்றுவது. மூன்றாவது தீர்மானம் தூய்மையை வலியுறுத்துகிறது என்றும் ஒவ்வொரு தெரு, சுற்றுப்புறம் மற்றும் நகரமும் கூட்டு பங்கேற்புடன் சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ‘உள்ளூர் மக்களுக்கான குரல்’ என்பது நான்காவது தீர்மானமாக இருப்பதால், நாட்டின் வியர்வை மற்றும் மண்ணால் வளமான சக இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்து ஊக்குவிக்குமாறு திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தினார். ஐந்தாவது தீர்மானம் இந்தியாவை ஆராய்ந்து புரிந்துகொள்வது, உலகைப் பார்ப்பது நல்லது என்றாலும், ஒருவர் இந்தியாவை ஆழமாக அறிந்து, அனுபவித்து, போற்ற வேண்டும் என அவர் கூறினார். இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொள்ளும் ஆறாவது தீர்மானத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். பூமித்தாயை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து விடுவித்து, கிராமங்கள் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல் ஏழாவது தீர்மானமாகும் என்று அவர் கூறினார். கவனத்துடன் சாப்பிடுவது, உணவுகளில் சிறுதானியங்களைச் சேர்ப்பது மற்றும் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவற்றை அவர் அறிவுறுத்தினார். எட்டாவது தீர்மானம் யோகா மற்றும் விளையாட்டுகளை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வது என அவர் கூறினார். ஏழைகளுக்கு உதவுவது ஒன்பதாவது தீர்மானம் என்று திரு நரேந்திர மோடி கூறினார். பின்தங்கியவர்களின் கைகளைப் பிடித்து வறுமையை வெல்ல அவர்களுக்கு உதவுவது உண்மையான சேவை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஒன்பது தீர்மானங்களைப் பின்பற்றுவதன் மூலம், மக்கள் ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் போதனைகளை வலுப்படுத்துவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அமிர்த காலத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை நாட்டின் உணர்வில் ஆழமாக வேரூன்றியுள்ளது மற்றும் அதன் துறவிகளின் ஞானத்தால் வளப்படுத்தப்பட்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். அமிர்த தீர்மானங்களை நனவாக்கி வளர்ந்த இந்தியாவை உருவாக்க 140 கோடி குடிமக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை அவர் எடுத்துரைத்தார். வளர்ந்த இந்தியா என்ற கனவு என்பது ஒவ்வொரு இந்தியரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜிடமிருந்து உத்வேகம் பெறுகிறது என்றும், அவர் காட்டிய பாதையில் நடப்பது, அவரது போதனைகளை உள்வாங்குவது மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதை வாழ்க்கையின் முதன்மையான கடமையாக மாற்றுவது ஒரு கூட்டுப் பொறுப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின் புனிதத்தன்மை இந்த உறுதிமொழிகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து, ஆச்சார்ய வித்யானந்த் ஜி முனிராஜுக்கு மரியாதை செலுத்தி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார். மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் துறவிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர். பின்னணி ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழா, மத்திய அரசால் பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் ஒரு வருட கால தேசிய நிகழ்வின் முறையான தொடக்கத்தைக் குறிக்கிறது. மதிப்பிற்குரிய ஜெயின் ஆன்மீகத் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் இந்த கொண்டாட்டத்தில் நாடு முழுவதும் கலாச்சார, இலக்கிய, கல்வி மற்றும் ஆன்மீக முயற்சிகள் நடைபெறும். இது அவரது வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதையும் அவரது செய்தியைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜ் சமண தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள பழங்கால சமண கோயில்களின் மறுசீரமைப்பு மற்றும் மறுமலர்ச்சியில் அவர் முக்கியப் பங்காற்றினார். மேலும் கல்விக்காகவும், பிராகிருதம், சமண தத்துவம் மற்றும் பாரம்பரிய மொழிகள் வளர்ச்சிக்கும் அவர் பணியாற்றினார்.
Read More »யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழுக் கூட்டம் – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்
யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (26.06.2025) டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன், யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், நாட்டில் யானைகளின் …
Read More »‘ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ₹9 கோடி மதிப்பிலான 1,115 மெட்ரிக் டன் பொருட்களை ஏற்றிச் சென்ற 39 கொள்கலன்களை டிஆர்ஐ பறிமுதல் செய்துள்ளது
நாட்டின் புலனாய்வு துறைகள் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) “ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்” என்ற பெயரில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மூன்றாம் நாடுகள் வழியாக, அதாவது துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் வழியாக அனுப்பப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் இதுவரை ₹9 கோடி மதிப்பிலான 1,115 மெட்ரிக் …
Read More »
Matribhumi Samachar Tamil