திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை, செயல் மாதிரியாக்கம், உருவகப்படுத்துதல் மற்றும் செயலாக்கக் கட்டுப்பாட்டில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஆறு நாள் ஏ.ஐ.சி.டி.இ. அடல் ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் இத்துறைகளில் பேராசிரியர்கள் தங்களின் அறிவுத் திறன்களை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இந்தத் திட்டமானது, இந்தியா முழுவதிலுமிருந்து 14 மாநிலங்களைச் சேர்ந்த 140 பங்கேற்பாளர்களை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பல்வேறு துறைகளின் நிபுணர்கள், தங்கள் அறிவுத்திறனைப் பகிர்ந்துகொள்ள ஒன்று கூடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த எஃப் டி பி -யில் இந்தியாவிலிருந்து 10 சிறந்த பேச்சாளர்கள் மற்றும் கனடா மற்றும் ஸ்பெயினிலிருந்து 2 சர்வதேச நிபுணர்களைக் கொண்ட 13 தொழில்நுட்ப …
Read More »மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் மண்டபம் மண்டல மையத்தில் கடற்பாசிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் 2025 ஜனவரி 9 அன்று, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் – மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டபம் மண்டல மையத்தில் கடற்பாசிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார். நாட்டில் கடற்பாசி வளர்ப்பின் முழுமையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு மையத்தின் பெயர் பலகையையும், கடற்பாசிகளுக்கான ஆலை உற்பத்தி அலகையும் அவர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மையத்தில் உள்ள கடற்பாசி செடிகள் உற்பத்தி அலகு, கடல் குஞ்சு பொரிப்பக வளாகம், தேசிய …
Read More »மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி உதய்பூரில் நாளை தொடங்குகிறது
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் 2025 ஜனவரி 10 முதல் 12 வரை சிந்தனை அரங்கம் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த மூன்று நாள் நிகழ்வு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நலனில் சவால்களை ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், சவால்களைச் சமாளிக்க சிறந்த தீர்வுகளை வெளிக்கொணரவும் உதவும். இந்த நிகழ்ச்சியில் …
Read More »அகில இந்திய வானொலியின் சிறப்பு ‘கும்பவாணி’ அலைவரிசை, ‘கும்ப மங்கல்’ த்வனியை நாளை பிரயாக்ராஜில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார்
மகா கும்பமேளா 2025-க்கு என்று சிறப்பு ஏற்பாடாக அகில இந்திய வானொலியின் சிறப்பு கும்பவாணி அலைவரிசையை (எஃப்எம் 103.5 மெகாஹெர்ட்ஸ்) பிரயாக்ராஜில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியின் போது, கும்ப மங்கள் த்வனியையும் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இந்த …
Read More »ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரைக் கொண்டுவரும் புந்தேல்கண்ட்டின் உருமாற்றத்தை மகா கும்பமேளா 2025 எடுத்துக் காட்டுகிறது
உலகெங்கிலும் இருந்து 40-45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளா 2025-ல் கலந்து கொள்வார்கள். சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீர் கிராமங்கள் என்ற கருத்தாக்கத்தின் மூலம் உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை பக்தர்கள் காண்பார்கள். ‘குடிநீருக்கான தீர்வு: எனது கிராமத்தின் புதிய அடையாளம்’ என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகளால் ஒரு காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் பாதிக்கப்பட்டிருந்த புந்தேல்கண்ட், இப்போது குடிநீர் நெருக்கடியைத் தீர்ப்பதில் வெற்றியின் அடையாளமாக எவ்வாறு …
Read More »ஒடிசா மாநிலம் ஜகத்பூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்திறன் மையத்தை மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே பார்வையிட்டார்
ஒடிசா மாநிலம் ஜகத்பூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்திறன் மையத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே இன்று பார்வையிட்டார். கயாக்கிங், கேனோயிங், படகோட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு உள்ள பர்மிந்தர் சிங், பி.ரோஜி தேவி, எல்.நேஹா தேவி போன்ற நம் நாட்டு வீரர்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களையும் உருவாக்குவதற்கான முக்கிய மையமாக இது உருவெடுத்துள்ளதற்கு இணையமைச்சர் பாராட்டு தெரிவித்தார். …
Read More »மியாவாக்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரயாக்ராஜில் சுமார் 56,000 சதுர மீட்டர் அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன
மஹாகும்பமேளா 2025-க்கு தயாராகும் வகையில், பிரயாக்ராஜ் முழுவதும் பல்வேறு இடங்களில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நகரத்திற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், தூய காற்று மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை உறுதி செய்வதற்காக பிரயாக்ராஜ் மாநகராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜப்பானிய மியாவாக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி, பல பிராண வாயு ஆக்ஸிஜன் வங்கிகளை நிறுவியது. அவை இப்போது பசுமையான காடுகளாக மாறியுள்ளன. இந்த முயற்சிகள் பசுமையை மேம்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், காற்றின் தரத்தை …
Read More »மகா கும்பமேளாவில் ஆயுஷ் சேவைகள் பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்தும்: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா 2025 ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள நிலையில், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். முன் முயற்சிகள் குறித்து தமது திருப்தியை வெளிப்படுத்திய அமைச்சர், இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் அனுபவத்தை வளப்படுத்துவதில் குழுவினரின் உறுதிப்பாட்டை பாராட்டினார். …
Read More »குடியரசுத் தலைவரின் அழைப்பிதழ்களை வழங்குவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் பங்களிப்பு
தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2025 குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘Republic Day at Home-2025’ எனும் பெருமை மிகு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பட்டுவாடா செய்யும் பணியில், அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஜனவரி 26,2025 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த அழைப்பிதழ்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆயுஷ் மருத்துவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்தி பாதுகாப்பு வாகையர்கள், அரசுத் திட்டத்தின் பயனாளர்கள் மற்றும் தத்தமது களங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, துல்லியமாக உரிய நபரிடம் அவற்றை பட்டுவாடா செய்ய தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உறுதிபூண்டுள்ளது. பெருமைமிகு இப்பணியை செய்ய, அர்ப்பணிப்புமிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யும். அர்ப்பணிப்போடு கூடிய சேவை புரிந்த இச்சாதனையாளர்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளின் செயலை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களுக்கு நாட்டின் நன்றியைக் கோடிட்டுக் காட்டும் விதமாகவும், அவர்கள் இந்த பெருமை மிகு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ஒவ்வொரு அழைப்பிதழையும் கையாள்வதில் பெருமிதம் கொள்வது மட்டுமின்றி இவ்வழைப்பிதழ்களை வழங்கிய அலுவலகமும், பெறுநர்களும் முழு திருப்தி அடைவதை உறுதி செய்வதும் நோக்கமாகக் …
Read More »மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் இன்று நடத்தியது
மின்மாற்றிகளின் சோதனை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் தேசிய சோதனை அமைப்புடன் இணைந்து சென்னையில் இன்று நடத்தியது. இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் பிராந்திய ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்தது. நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தேசிய சோதனை அமைப்பின் இயக்குநர் திரு எம் சுரேஷ் பாபு மற்றும் இந்த அமைப்பின் தென் மண்டல குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொழில்நுட்ப அமர்வில் விஞ்ஞானி கே. ஜெயராஜ், டிரான்ஸ்ஃபார்மர்களின் சோதனை பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சியை வழங்கினார். ஐஎஸ் 1180 (பகுதி 1)-ன் படி டிரான்ஸ்ஃபார்மர்களில் …
Read More »
Matribhumi Samachar Tamil