இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னோடித் திட்டமான ‘பருவநிலை மாற்ற தாங்குதிறன் வேளாண்மைக்கான தேசிய கண்டுபிடிப்பு’ மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல் பயிரிடப்படும் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய தன்மையை ஒருங்கிணைந்த உருவகப்படுத்துதல் மாதிரியாக்க ஆய்வுகளை மேற்கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வானது பருவகாலங்களில் பயிரிடப்படும் மானாவாரி நெல் பயிர்களின் விளைச்சல் 2050-ம் ஆண்டில் 20% ஆகவும், 2080-ம் ஆண்டில் 47% ஆகவும் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பாசன நெல் சாகுபடி 2050-ம் ஆண்டில் 3.5% ஆகவும், 2080-ம் ஆண்டில் 5% ஆகவும் குறையக்கூடும். கடந்த 10 ஆண்டுகளில், மொத்தம் 668 நெல் வகைகள் (நெல்) உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 199 வகைகள் தீவிர மற்றும் பிற வகை பருவநிலைகளைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களாகும். 103 நெல் வகைகள் வறட்சி, நீர் அழுத்தங்களை தாங்கி வளரக்கூடியவை, 50 நெல் வகைகள் வெள்ளம், ஆழமான நீர் நிலைகள், நீரில் மூழ்கும் தன்மையுடன் கூடியவை, 34 நெல் வகைகள் உப்புத்தன்மை காரத்தன்மை போன்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. 6 நெல் இரகங்கள் வெப்ப அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. 6 நெல் இரகங்கள் குளிர் அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. இதில் 579 நெல் இரகங்கள் பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரக்கூடியவை. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. பகீரத் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Read More »விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டங்கள்
வேளாண் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், மாற்று சந்தை வழிவகைகளை உருவாக்கவும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை உறுதி செய்யும் வகையில் சந்தை ஏற்றத் தாழ்வுகளை தணிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய வேளாண் சந்தை, 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான நடவடிக்கைகள் இணையதள சேவை மூலம் சந்தைகள், வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டம், பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விலை ஆதரவு ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இத்திட்டத்தின் துணை திட்டமான சந்தைப்படுத்தல், ஆராய்ச்சி மற்றும் தகவல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வேளாண் விளைபொருட்களின் விலைகள் மற்றும் அதன் விநியோகம் குறித்த அன்றாட தகவல்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 3,771 சந்தை வளாகங்களில் 300-க்கும் மேற்பட்ட வேளாண் விளைப் பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விவசாய விளைபொருட்களின் தரநிலைக்கான இணையதளம், இ-நாம் இணையதளம், கிசான் சுவிதா போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Read More »விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்
மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், தகுந்த கொள்கை நடவடிக்கைகள், பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது. உற்பத்தியை அதிகரித்தல், ஆதாயமான வருவாய் மற்றும் விவசாயிகளுக்கு வருமான ஆதரவு ஆகியவற்றுக்கான மத்திய அரசு திட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக உள்ளன. பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்தல், உற்பத்திச் செலவைக் குறைத்தல், பயிர்களை மாற்றி மாற்றி பயிரிடுதல், நீடித்த வேளாண்மைக்காக பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் …
Read More »வேளாண் நிலங்களில் இயற்கை கார்பன்
வேளாண் நிலங்களில் இயற்கை கார்பன் இருப்பது குறித்து மண் வள அட்டை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்வள அட்டையை மாநிலங்கள் புதுப்பிக்க வேண்டும். இதுவரை 24.60 கோடி சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மண்ணில் இயற்கை கார்பன் அளவு குறைவதற்கான முக்கிய காரணிகள் (i) இரசாயன உரங்களின் முறையற்ற அல்லது அதிகப்படியான பயன்பாடு, அடிக்கடி மண்ணை உழவு, செய்தல், பயிர்க்கழிவுகளை எரித்தல், அதிகப்படியான மேய்ச்சல், மண் அரிப்பு போன்ற குறைபாடுள்ள நடைமுறைகள். (ii) நீண்ட கால தாவர வகைகளுக்குப் பதிலாக ஒரே மாதிரியான பயிர்கள், மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துதல், (iii) மண்ணின் மொத்த அடர்த்தி, அதிக சரளை உள்ளடக்கம், மண் அரிப்பு, குறைந்த நிலத்தடி நீர், குறைந்த ஈரப்பதம் போன்ற மண்ணின் இயற்பியல் வேதியியல் பண்புகள். இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகளுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் மண்வளத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மண்ணில் உள்ள இயற்கை கார்பனின் அளவு தொடர்பான விவரங்களை மாநில சுய உதவிக் குழுவிற்கு அளித்து, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்ட உரங்களுடன் இரசாயன உரங்களையும், இயற்கை உரங்கள், உயிர் உரங்களையும் சரியான முறையில் பயன்படுத்தி, மண்ணின் அங்கக இயற்கை கார்பன் மற்றும் வளத்தை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Read More »ஆயுர்வேத பொருட்களின் சந்தை வளர்ச்சிக்கு அரசு ஆதரவளிக்கிறது
ஆயுர்வேத பொருட்களின் சந்தை வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் ஆதரவளிக்கிறது. ஆயுஷ் அமைச்சகம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஆயுஷ் பொருட்களுக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. மத்திய அரசின் திட்டத்தை பல்வேறு அம்சங்களின் கீழ் செயல்படுத்தி வருகிறது. ஆயுஷ் பிரச்சாரத்திற்காக சர்வதேச கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், சாலை கண்காட்சிகள் போன்றவற்றில் பங்கேற்பதற்காக ஆயுஷ் மருந்து உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர், ஆயுஷ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சர்வதேச ஆயுஷ் சந்தை மேம்பாடு மற்றும் ஆயுஷ் மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தல். மேலும், ஆயுஷ் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு ஆயுஷ் அமைச்சகமானது ஆயுஷ் தயாரிப்புகளுக்கு சான்றிதழ்களை வழங்க ஊக்குவித்தல். மூலிகைப் பொருட்களை உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களின்படி மருந்து தயாரிப்புகளுக்கு பயன்படுத்துவதற்கு சான்றிதழ் வழங்குதல். ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி தயாரிப்புகளுக்கு சர்வதேச தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இணங்குவதற்கான மூன்றாம் தரப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் ஆயுஷ் பிரீமியம் வழங்குதல். இந்திய தர கவுன்சிலால் செயல்படுத்தப்பட்ட தர சான்றிதழ் திட்டம். இவ்வாறான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Read More »திருமதி துளசி கௌடா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: “கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடாவின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இயற்கையை பேணி வளர்ப்பதற்கும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். …
Read More »ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘ஓராண்டு முடிவில் முன்னேற்றம்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட “ஓராண்டு முடிவில் முன்னேற்றம்” நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் …
Read More »பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து கவலை தெரிவித்துள்ளார் பிரதமர்
பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவிற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்சுடன் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்றும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் தலைமையின் கீழ், பிரான்ஸ் இந்த துயரத்தை உறுதியுடன் சமாளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: “மயோட்டேவில் சிடோ புயலால் ஏற்பட்ட …
Read More »மங்களகிரியில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
ஆந்திரப் பிரதேச மாநிலம் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 17, 2024) கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் முதல் பேட்ச் மாணவர்கள்தான் அந்த நிறுவனத்தின் அடையாளத்தை உருவாக்குகின்றனர்என்று கூறினார். முதல் பேட்ச் எம்.பி.பி.எஸ் பட்டதாரிகளிடம் பேசிய அவர், சமூகம், நாடு மற்றும் வெளிநாடுகளில் எய்ம்ஸ் மங்களகிரியின் முதல் …
Read More »உலக செஸ் சாம்பியன் திரு குகேஷ் தொம்மராஜூக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று பட்டம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் திரு குகேஷ் தொம்மராஜூக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்வியியல் கல்லூரியின் கேரள பிராந்திய முதல்வரும், மண்டல இயக்குநருமான டாக்டர் ஜி கிஷோர், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு அதுல்ய …
Read More »
Matribhumi Samachar Tamil