Saturday, April 04 2026 | 12:50:56 PM
Breaking News

சிபிஐசி தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில், வரி செலுத்துவோர் சேவைகளை மேம்படுத்த புதிய முன்முயற்சிகளை தொடங்கி வைத்தார்

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், அனைத்து வாரிய உறுப்பினர்களின் முன்னிலையில், வரி செலுத்துவோரின் அனுபவத்தையும்   வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் முன்முயற்சிகளை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய திரு அகர்வால், “இன்று தொடங்கப்பட்ட முன்முயற்சிகள் வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். வரி செலுத்துவோருக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், அவர்களின் பரிந்துரைகளை …

Read More »

தரமான கல்வியை வழங்கும் வகையில் உயர்கல்வி நிறுவனம் மேம்படுத்தப்பட்டு வருகிறது- திரு தர்மேந்திர பிரதான்

நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக  எளிதான  அணுகுமுறை,  சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். 1.கல்வி நிலையங்கள் அதிகரிப்பு உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-15-ல் 51534 ஆக இருந்தது 2022-23-ல் 58643-ஆக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 760-ல் இருந்து 1213-ஆக அதிகரித்துள்ளது. கல்லூரிகள் எண்ணிக்கை 38498-ல் இருந்து 46624 ஆக அதிகரித்துள்ளது. அதாவது உயர்கல்வி நிறுவனங்கள்13.8%, பல்கலைக்கழகங்கள் 59.6% மற்றும் கல்லூரிகள் 21.1% அதிகரித்து உள்ளன. 2.மாணவர் சேர்க்கை அதிகரிப்பு 2014-15-ம் ஆண்டில் 3.42 கோடியாக இருந்த மொத்த சேர்க்கை 2022-23-ம் ஆண்டில் 4.46 கோடியாக 30.5% அதிகரித்துள்ளது.

Read More »

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம், முன்னேறி வருகிறது – திரு தர்மேந்திர பிரதான்

கடந்த பத்தாண்டுகளில், இந்த அரசின் தலைமையின் கீழ் இந்தியாவின் பள்ளிக் கல்வி முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது. பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் முதல் பெண் சக்திக்கு அதிகாரமளித்தல்,இந்திய மொழிகளை ஊக்குவித்தல் என்பதுவரை, ஒவ்வொரு முயற்சியும் தரம், சமத்துவம் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டால் மேற்கொள்ளப்படுகிறது என்று திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். நமது பள்ளிகள் கற்றல் மையங்களாக மட்டுமின்றி, நாட்டில் உள்ள …

Read More »

வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலீடு செய்யுமாறு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா வேண்டுகோள்

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், மும்பையில் வடகிழக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சாலைப் பேரணியை  நடத்தியது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு வருட கால தொடர் சாலைப் பேரணிகளைத் தொடர்ந்து, மும்பையில் நடந்த இந்த சாலைப் பேரணியானது இந்தியாவின் பொருளாதார மையத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா,  திரிபுரா முதல்வர் பேராசிரியர் …

Read More »

புதிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு, செயல்பாடுகள் குறித்த பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2024, டிசம்பர் 17 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. முந்தைய பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலை பெருநிறுவனமயமாக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட புதிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிதி புள்ளிவிவரங்கள், நவீனமயமாக்கல், மூலதன செலவினம், ஏற்றுமதி, உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து குழு உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது. முக்கியமான பொருட்களை உள்நாட்டுமயமாக்குதல், உற்பத்தி வசதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் …

Read More »

பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண் இயக்குநர்கள்

2024 நவம்பர் 30 அன்றைய நிலவரப்படி பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை பின்வருமாறு; வகை          பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள்                             8,672 பட்டியலிடப்படாத பொதுத் துறை நிறுவனங்கள்                        46,939 ஒரு நபர் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள்        11,11,040 பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம், நிறுவனங்களின் பல்வேறு நிலைகளில் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவனங்கள் சட்டம், 2013-ல் பின்வரும் விதிகளை சேர்த்துள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்) பிரிவு 149 துணைப்பிரிவு (1)-ன் கீழ், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதி) விதிகள், 2024-ன் விதி 3-ன் படி, ரூ.100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மூலதனம் கொண்ட அல்லது ரூ.300 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட விற்றுமுதல் கொண்ட ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் மற்ற ஒவ்வொரு பொது நிறுவனமும் குறைந்தது ஒரு பெண் இயக்குநரை நியமிக்க வேண்டும். இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கும் மற்றும் நிறுவனத்தின் ஒவ்வொரு அதிகாரிக்கும், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 172-ன் கீழ் அபராதம் விதிப்பதற்கு வகை செய்கிறது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சரும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

திவால் தொடர்பான நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் திவால் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள்

திவால் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில், அச்சட்டத்தில் தேவையான  திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சர்வதேச செலாணிக் கொள்கையில் ஆறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்திய திவால் சட்ட வாரியம் நொடித்துப்போதல் மற்றும் திவால் வாரியம், சர்வதேச நாணய வங்கி  தொடங்கப்பட்டதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தவிர, பெருநிறுவனங்களின் மறுசீரமைப்பு, திவால் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது, நிறுவனங்களை …

Read More »

தவறான விளம்பரம் செய்த 45 பயிற்சி மையங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு-10-ன் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. இது நுகர்வோரின் உரிமைகளை மீறுதல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், பொதுமக்கள், நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துகிறது. 2024 நவம்பர், 13 அன்று, “பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள், 2024”-ஐ வெளியிட்டுள்ளது, இது பயிற்சி மையங்கள் பொருட்கள் அல்லது சேவையின் …

Read More »

கூட்டுறவு மற்றும் கிராமிய பொருளாதாரம்

கூட்டுறவு அமைச்சகம், 2021 ஜூலை 6 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவற்றின் திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிரூட்டவும், வலுப்படுத்தவும் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தீவிர பங்கேற்புடன் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கணினிமயமாக்கல் மூலம்  தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை வலுப்படுத்துவதற்காக, மொத்த நிதி ஒதுக்கீட்டில் ரூ.2,516 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும் ஒரு பொதுவான  அமைப்பின் கீழ் நபார்டு வங்கியுடன் இணைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 67,930 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40,727 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்  இஆர்பி மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல்: நீண்டகாலக் கூட்டுறவுக் கடன் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,851 வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. இதுவரை, 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

Read More »

கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.

2021 ஜூலை 6-ம் தேதி முதல், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் & கூட்டுறவு சங்கங்கள் மற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக வரி தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஊக்குவிப்பதே கூட்டுறவு அமைச்சகத்தின் கடமையாகும். கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கோரி 25.11.2024 தேதியிட்ட குறிப்பாணை தமிழக கூட்டுறவு அமைச்சரிடமிருந்து பெறப்பட்டது. ஜிஎஸ்டி வரி தொடர்பான முன்மொழிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு செய்கிறது. அண்மையில் கருப்பஞ்சாற்றுக் கசண்டு மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இது கூட்டுறவு …

Read More »