Thursday, March 26 2026 | 02:49:58 PM
Breaking News

ராஜஸ்தானில் டிசம்பர் 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 17 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். 7 மத்திய அரசு திட்டங்கள், 2 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 9 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், 9 மத்திய அரசு திட்டங்கள் …

Read More »

இந்தியா – இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

1. பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர். 2. ஆழமான வேரூன்றிய கலாச்சார, நாகரிக உறவுகள், புவியியல் ரீதியான அருகாமை, மக்களுக்கு இடையிலான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகள் அமைந்துள்ளன என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். 3. 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போதும் அதன் பின்னரும் இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய …

Read More »

இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

மேதகு அதிபர் அனுர குமார திசநாயக அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வாழ்த்துகள்! இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த …

Read More »

“இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகால மகத்துவமிக்க பயணம்” என்ற விவாதத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஆற்றிய தொடக்க உரை

மாண்புமிகு உறுப்பினர்களே, 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாளன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இரண்டு நாள் கொண்டாட்டத்தை நாம் இன்று தொடங்குகிறோம். இது கொண்டாட்டத்திற்கான அழைப்பு மட்டுமல்ல, நமது பயணத்தை ஆழமாக பிரதிபலிப்பதும், நமது முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிக்கக் கூடியதுமாகும். இந்த அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த அவையில் நடைபெறும் நமது விவாதங்கள், இந்த நிகழ்வின் தீவிரத்தை பிரதிபலிக்கட்டும். 1.4 பில்லியன் மக்களுக்கு சேவை …

Read More »

ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு, குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

ஆர்மீனிய நாடாளுமன்றத் தலைவர் திரு ஆலன் சிமோனியன் தலைமையிலான ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு இன்று (டிசம்பர் 16, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது. குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியா – ஆர்மீனியா இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார தொடர்புகளையும் தற்கால உறவுகளையும் நினைவு கூர்ந்தார். உலகளாவிய  அரங்குகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் ஆர்மீனியா …

Read More »

ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் குடியரசுத் தலைவர் டிசம்பர் 17 முதல் 21 வரை பயணம் மேற்கொள்கிறார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2024 டிசம்பர் 17 முதல் 21 வரை ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் பயணம் மேற்கொள்கிறார் . இந்த பயணத்தின்போது, செகந்திராபாத்தில் உள்ள போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் தங்குகிறார். டிசம்பர் 17 அன்று ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். டிசம்பர் 18 அன்று, செகந்திராபாத்தின் போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார் . டிசம்பர் 20 அன்று, செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு குடியரசுத் தலைவரின் கொடிகளை குடியரசுத் தலைவர் வழங்குவார். அன்று மாலை குடியரசுத் தலைவர் நிலையத்தில் மாநிலத்தின் பிரமுகர்கள், முக்கிய நபர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு வரவேற்பு …

Read More »

எதிர்கால உலகை இந்தியாவின் அறிவுத்திறன் வழிநடத்தவுள்ளது : ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம்

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னோடி நிறுவனமான சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கழகத்தின்  (என்.ஐ.டி.டி.டி.ஆர்) வைர விழாவைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 15, 2024 அன்று இந்நிறுவனம் 61-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஏ.ஐ.சி.டி.இ தலைவர், இந்தியாவின் பண்டைய ஞானத்திற்கும் நவீன தொழில்நுட்ப …

Read More »

உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை ஊக்குவிக்க ‘ஜல்வாஹக்’ திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது

தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி), தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி), தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்ட தூர சரக்குகளின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சரக்கு மேம்பாட்டுக்கான ‘ஜல்வஹக்’ என்ற முக்கிய கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று வெளியிட்டார். மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், எம்வி ஏஏஐ, எம்வி ஹோமி பாபா மற்றும் எம்வி திரிசூல் ஆகிய சரக்குக் கப்பல்களையும் அஜய் மற்றும் திகு ஆகிய இரண்டு தளவாடப் படகுகளையும் புதுதில்லி அரசு படகுத்துறையிலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொல்கத்தா – பாட்னா – வாரணாசி – பாட்னா – கொல்கத்தா இடையே ஒரு வழியாகவும், கொல்கத்தா மற்றும் குவஹாத்தியில் உள்ள பாண்டு இடையேயும்  இந்தோ-வங்கதேச நெறிமுறை பாதை (ஐபிபிஆர்) வழியாகவும் குறிப்பிட்ட நாள் திட்டமிடப்பட்ட பாய்மரப் படகோட்ட சேவை இயக்கப்படும். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சோனோவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், நமது வளமான உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் மிகப்பெரிய திறனை உணர அரசு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, திறமையான போக்குவரத்து முறை என்ற அனுகூலத்தைக் கொண்டு, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, நீர்வழிகள் வழியாக சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். ஜல்வாஹக் திட்டம் ஆகியவற்றில் நீண்ட தூர சரக்குகளை ஊக்குவிப்பதுடன், நேர்மறையான பொருளாதார மதிப்பு முன்மொழிவுடன் நீர்வழிகள் வழியாக சரக்குகளின் இயக்கத்தை ஆராய வர்த்தக நலன்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், கொல்கத்தாவிலிருந்து தொடங்கும் வழக்கமான அட்டவணைப்படுத்தப்பட்ட சரக்கு சேவை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரக்குகளை கொண்டு சென்று வழங்குவதை உறுதி செய்யும். இது ஒரு திறமையான, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான போக்குவரத்து முறையில் சரக்குகளை வழக்கமான இயக்கத்திற்கு தேசிய நீர்வழிகள் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை நமது பயனர்களிடையே உருவாக்கும். இந்த ஊக்கத் திட்டத்துடன் நமது கப்பல் ஆபரேட்டர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் சரக்குகளை வழங்குவதன் மூலம் நமது  வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தியா வளர்ச்சியடைந்த  பாரதமாக மாறுவதை நோக்கி பயணிக்கும்போது போக்குவரத்து வழியாக மாற்றத்திற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வைக்கு இது அர்த்தம்  சேர்க்கிறது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், வளமான நீர்வழிகள் 2014 முதல் புத்துயிர் பெற்று வருகின்றன. நீர்வழிகளை புனரமைப்பதில் தொடர்ச்சியான முதலீட்டுடன், இந்தத் திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்குள் ரூ .95.4 கோடி முதலீட்டில் எயல்படுத்தப்படும்.  2014 வரை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட நீல பொருளாதாரத்தின் மதிப்பை திறக்கவும் இது ஒரு தீவிர முயற்சியாகும். புத்துயிர் பெற்ற தேசிய நீர்வழிகள் அதன் செயல்திறனை கணிசமாக நகர்த்தியுள்ளன, ஏனெனில் 2013-14 ஆம் ஆண்டில் 18.07 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகளின் மொத்த அளவு 2023-24 ஆம் ஆண்டில் 132.89 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, இது 700% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நீர்வழிகள் மூலம் 200 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கொண்டு செல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2047-ம் ஆண்டில், சரக்கு போக்குவரத்துக்கு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிகளின் வளர்ச்சியில் நம்பிக்கையுடன், 500 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், “நீர்வழிப் போக்குவரத்தை, குறிப்பாக வங்காளத்தைப் பொறுத்தவரை, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். பிரதமர் திரு. நரேந்திர மோடி யின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், நீர்வழிப் போக்குவரத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம், நீர்வழித் துறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவில், சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பத்தை ஏற்படுத்தும். சிக்கனமான, பயனுள்ள, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை சரக்கு மற்றும் பயணிகள் இயக்கத்தில் ஒரு புதிய காட்சியை உறுதியளிக்கிறது என்று தெரிவித்தார்.

Read More »

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதம் ஆக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையை நனவாக்க டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு

அரசின் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களின் கூட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல்,  பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2047-க்குள் இந்தியாவை “வளர்ச்சியடைந்த பாரதமாக ” மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையை  நனவாக்க அனைத்து அரசுத் துறைகளையும், மத்திய மற்றும் மாநில முயற்சிகளையும் “முழு அரசு” மற்றும் “முழு அறிவியல்” அணுகுமுறையுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.  புதுதில்லியில் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களின் மாதாந்திர கூட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார். இன்று புதுதில்லியில் நடைபெற்ற அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர கூட்டத்தின்போது, அறிவியல் முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் அந்தந்த மாநில அறிவியல் குழுக்கள் தீவிரமாக பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். அறிவியலில் கூட்டுறவு கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நீடித்த மற்றும் முற்போக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தற்போதைய திட்டங்களை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான எதிர்கால உத்திகளைப் பற்றி விவாதிப்பதற்கும் இந்த கூட்டம் ஒரு முக்கிய தளமாக செயல்பட்டது. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், மண்டல வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் தேசிய இலக்குகளுக்கு பங்களிப்பு செய்தல் ஆகியவற்றில் மாநில அறிவியல் கவுன்சில்களின் முக்கிய பங்கை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், அடிமட்ட கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள உள்ளூர் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கும் மாநிலங்கள் கிரியா ஊக்கிகளாக செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் அறிவியல் முகமைகளிலிருந்து வெளிவரும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சந்தை மூலதனமயமாக்கலின் முக்கியத்துவம் விவாதங்களின் மையமாக இருந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சுகாதாரம், வேளாண்மை மற்றும் பருவநிலை பின்னடைவு போன்ற துறைகளில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரசு ஆதரவு நிறுவனங்களிடமிருந்து அதிநவீன தீர்வுகளை அளவிட வேண்டியதன் அவசியத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். அறிவியல் சூழலில் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சியின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், ஒருங்கிணைந்த அறிவியல் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசின் முன்முயற்சிகளுடன் மாநிலங்கள் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை, பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் மற்றும் நாடு முழுவதும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் நன்மைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். “மாநில அறிவியல் கவுன்சில்கள் தொலைநோக்கை அடைவதில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நமது அறிவியல் வளங்களின் முழு திறனையும் பயன்படுத்த முடியும்” என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.  அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர கூட்டம், ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் வணிகமயமாக்கல் மூலம் வலுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மத்திய மற்றும் மாநில முயற்சிகளை ஒருங்கிணைத்தல், பொது-தனியார் கூட்டாண்மையை ஊக்குவித்தல் மற்றும் புதுமைகளை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முக்கியத்துவம், 2047 க்குள் வளர்ந்த இந்தியாவுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை அடைவதில் அறிவியலின் உருமாறும் பங்கை வலியுறுத்துகிறது. இந்த முழு அறிவியல் அணுகுமுறை தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. மூத்த செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட் தலைமை தாங்கினார்.

Read More »

குவாலியரில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார்

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள விக்டோரியா மார்க்கெட் கட்டிடத்தில் அதிநவீன இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் (ஜிஎஸ்ஐ) புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று ரிப்பன் வெட்டி கல்வெட்டைத் திறந்து வைத்தார். பாரம்பரியத்தின் பிரம்மாண்டத்தை நவீன கண்டுபிடிப்புகளின் அற்புதங்களுடன் தடையின்றி கலக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கொண்டாட்டத்தை இந்த நிகழ்வு குறித்தது.  இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் திரு நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொண்டனர். குவாலியர் புவி அறிவியல் அருங்காட்சியகம் பூமியின் கதையின் அதிசயங்களுக்கான நுழைவாயிலாக செயல்படுகிறது – அறிவியலும் கலையும் ஆர்வத்தைத் தூண்டும் அறிவின் சரணாலயம். இது இரண்டு காட்சியகங்களைக் கொண்டுள்ளது. இது நமது கிரகத்தின் மர்மங்கள் மற்றும் காலப்போக்கில் வாழ்க்கையின் பயணத்தின் வரலாற்றைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.

Read More »