Saturday, July 25 2026 | 12:10:55 AM
Breaking News

மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் வாகன் போர்ட்டல் தகவலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (01/04/2019 முதல் 31/03/2024 வரை) விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 10,75,31,040. இவற்றில் மின்சார வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்டவை  3.38% அதாவது 36,39,617. இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 84,76,042. இவற்றில் மின்சார வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்டவை  2.70% அதாவது 2,28,850.  புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 2,52,488. …

Read More »

உணவு பதனப்படுத்தும் தொழில்களில் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு மானியம்

உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் தனது திட்டங்கள் மூலம் உணவு பதனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய, பிரதமரின் உணவு பதனப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000/- வரை ஆரம்ப மூலதனத்திற்கு அமைச்சகம்  மானியம் வழங்குகிறது. தனிநபர் சுய உதவிக் குழு உறுப்பினர் திட்ட மதிப்பீட்டில் 35% கடன் இணைக்கப்பட்ட மானியத்தை அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை உணவு பதனப்படுத்தும் நிறுவனத்தின் ஒரு அலகாகப் பெறலாம். …

Read More »

மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி மீனவர்களுக்கான உரிமைகள்

நாட்டில் உள்ள மீனவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மீன்வளத் துறையுடன் கலந்தாலோசித்து தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 2,80,63,538 மீனவர்கள் உள்ளதாகவும் தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் எண்ணிக்கை 12,83,751-ஆக உள்ளதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. அனைத்து கடலோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்குள் மீன்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன. கடலோர …

Read More »

அந்தமான் நிகோபார் தீவுகளில் சூரை மீன் வளம் அதிகரிப்பு

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின், மீன்வளத் துறை 29.10.2024 அன்று பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சூரை மீன் அதிகமாக கிடைக்கும் பகுதி ஒன்றை அறிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்காக 14.11.2024 அன்று ஸ்வராஜ்ய தீவில் முதலீட்டாளர்கள் சந்திப்பை மத்திய அரசு அந்தமான் நிக்கோபார் தீவுகள் நிர்வாகத்துடன் இணைந்து நடத்தியது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் …

Read More »

ரூ.20,050 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தை 2020-21-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை 5 ஆண்டு காலத்திற்கு மொத்தம் ரூ.20,050 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. மத்திய மீன்வளத்துறை பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், இதர செயலாக்க முகமைகளின் ரூ.20864.29 கோடி மதிப்பீட்டிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் …

Read More »

பெண் தலைவர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதுதில்லியில் பல்கலைக்கழக மானிய குழு ஏற்பாடு செய்த பெண் தலைவர்களுக்கான ஒருநாள் பயிலரங்கை தொடங்கி வைத்தார். இந்தப் பயிலரங்கில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்க எட்டும் வகையில், பயிலரங்குகள் நடத்தப்பட உள்ளன. மத்திய வடகிழக்கு பிராந்திய கல்வி மற்றும் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், அந்த அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் குமார், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் …

Read More »

பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த பயிலரங்கு

பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையை தடுப்பது  குறித்த பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது. 2024 டிசம்பர் 12-ம் தேதி அன்று புது தில்லியில்  உள்ள  நவ் சேனா பவன் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை இந்திய கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிலரங்கை ஆயுதப்படை மருத்துவ சேவைப்பிரிவு இயக்குநர் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பணியிடங்களில் பாலினச் சமத்துவத்தை பின்பற்ற வேண்டிய …

Read More »

விதிமுறைகளை மீறிய 17 நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிகள், 2021ஐ மீறியதாகக் கண்டறியப்பட்ட 17 நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவற்றில் 13 நிறுவனங்கள் மீதான புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளன. மூன்று நிறுவனங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, நேரடி விற்பனை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், தொடர்புடைய சட்ட கட்டமைப்புடன் இணங்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் சிசிபிஏ தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக, இந்த நேரடி விற்பனை நிறுவனங்களின் வலைத்தளங்களை ஆணையம் கவனமாக ஆய்வு செய்தது. …

Read More »

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் நூற்றாண்டு விழா சின்னத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு வெளியிட்டார்

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் நூற்றாண்டு விழா சின்னத்தை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு வெளியிட்டார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் தனது 100-வது சேவையை கொண்டாடுவது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்த நிகழ்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு வும்லுன்மங் வுல்னாம், இந்திய …

Read More »

2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கியப் படியாக இருக்கும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும், விரைவான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அடைய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் தலைமைச் செயலாளர்கள் மாநாடு உந்தப்படுகிறது. …

Read More »