Thursday, June 25 2026 | 05:20:32 PM
Breaking News

ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாகாலாந்து முதலமைச்சர் …

Read More »

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

தேசிய நாளிதழ் ஒன்றில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இந்தக் கருத்துக் கட்டுரை அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது; இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார, ஆன்மீக, வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இந்திய அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணத்தை விட மேலானது என்பதை மத்திய அமைச்சர் திரு …

Read More »

பூடான் மன்னரையும் ராணியையும் பிரதமர் வரவேற்றார்

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக், பூடான் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (05.12.2024) வரவேற்றார். மன்னருக்கும் ராணிக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், 2024 மார்ச் மாதத்தில் தமது அரசுமுறைப் பயணத்தின்போது பூடான் அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பலை நினைவுகூர்ந்தார். வளர்ச்சியில் ஒத்துழைப்பு, தூய்மையான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, விண்வெளி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான …

Read More »

அஷ்டலட்சுமி மகா திருவிழாவை டிசம்பர் 6 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார துடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 6 அன்று பிற்பகல் 3 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அஷ்டலட்சுமி மகா திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். முதன்முறையாக கொண்டாடப்படும் இந்த மூன்று நாள் கலாச்சார விழா டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெறும். இது வடகிழக்கு இந்தியாவின் பரந்த கலாச்சார அம்சங்களை முன்னிலைப்படுத்துவதுடன், பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை ஒன்றிணைக்கும். பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் சுற்றுலா …

Read More »

ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பட்டம் பெறும் நாளானது மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதைக்கு வழிவகுக்கிறது என்று கூறினார். உலக சூழலில் தங்கள் அறிவு மற்றும் திறன்களின் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் மாணவர்களிடம் கூறினார். அவர்கள் பெற்ற அறிவு …

Read More »

புவனேஸ்வரில் புதிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புதிய நீதிமன்ற வளாகத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உரிய நேரத்தில் நீதி வழங்கப்படாவிட்டால், அது நீதி கிடைக்காமல் இருப்பதற்கு சமம் என்று கூறினார். வழக்கை ஒத்திவைக்கும் கலாச்சாரத்தால் நலிவடைந்த பிரிவினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அடிக்கடி நீதிமன்றத்திற்கு வருவதற்கு அவர்களிடம் போதிய நிதியோ, ஆள் பலமோ கிடையாது என்று …

Read More »

மகா கும்ப மேளா 2025

உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூடலாகக் கொண்டாடப்படும் மகா கும்பமேளா, நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பண்டைய பாரம்பரியத்தின் சங்கமமாகும். இந்து புராணங்களில் வேரூன்றிய இந்தப் புனித திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நடைபெறுகிறது . இது ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக், பிரயாக்ராஜ் என இந்தியாவின் நான்கு மதிப்பிற்குரிய நகரங்களுக்கு இடையே சுற்றிவருகிறது: இவை  கங்கை, ஷிப்ரா, கோதாவரி மற்றும் கங்கை, யமுனை, புராண சரஸ்வதி சங்கமம் ஆகியபுனிதமான நதிகளின் கரையில் …

Read More »

தேசிய கூட்டுறவுக் கொள்கை

கூட்டுறவு அமைச்சகம், 2021 ஜூலை மாதத்தில்  தொடங்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவு கூட்டாட்சி உணர்வுடனும், மத்திய பட்டியலில் வரையறுக்கப்பட்டுள்ளபடி அதன் கட்டாய அரசியலமைப்பு அதிகார வரம்பிற்குள், மாநில கூட்டுறவுகளின் தன்னாட்சி மற்றும் அவற்றின் ஜனநாயக செயல்பாட்டில் எந்த அத்துமீறலும் இல்லாமல், செயல்பட்டு வருகிறது. நாட்டில் ஊரகக் கூட்டுறவுகளை வலுப்படுத்த அமைச்சகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 2024 பிப்ரவரி 8 அன்று வெளியிட்ட கடிதத்தின் மூலம் தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி …

Read More »

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் கீழ், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றின் ஆதரவுடன், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம், தெலங்கானா, திரிபுரா ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களின் 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அளவில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்ட 11 சேமிப்புக் கிடங்கில், 3 சேமிப்புக் கிடங்குகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றன.  உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் …

Read More »

பன்மாநில கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள்

பன்மாநிலங்களின் கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் நாட்டில் 1702 மாநில கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மொத்தமுள்ள 1702 மாநில கூட்டுறவு சங்கங்களில் 100 நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளன.    தவறான நிர்வாகம் மற்றும் நிதி மோசடிகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, நிர்வாகத்தை வலுப்படுத்துவது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை அதிகரிப்பது, தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்துவது போன்ற நடவடிக்கைகள் தற்போதுள்ள சட்டத்தை கூடுதலாக சேர்ப்பதன் மூலமும் தொண்ணூற்றி ஏழாவது அரசியலமைப்பு திருத்தத்தின் விதிகளை இணைப்பதன் மூலமும் மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் மற்றும் விதிமுறைகள் முறையே 03.08.2023 மற்றும் 04.08.2023 அன்று …

Read More »