Thursday, March 05 2026 | 09:24:07 AM
Breaking News

கடந்த 6 நிதியாண்டுகளில் இந்தியாவில் ரூ. 12,000 லட்சம் கோடி மதிப்பில் 65,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் உட்பட நாட்டில் டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்வதற்கான விகிதங்களை அதிகரிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI), நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் அரசு நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீரின், 3 முதல் 6-ஆம் நிலை நகரங்கள் வரை டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் உள்கட்டமைப்பைப் …

Read More »

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று (27.07.2025) நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவ தரிசனம் மூலம் அனுபவித்த ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலைப் பற்றி உணர்ந்து, சர்வவல்லமையுள்ள சிவபெருமானை வணங்கியதாக பிரதமர் கூறினார். திரு இளையராஜாவின் இசையுடனும், ஓதுவார்களின் புனித மந்திரங்களுடனும், ஆன்மீக சூழல் ஆன்மாவை ஆழமாக நெகிழச் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார். புனித …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-வது அத்தியாயத்தில், 27.07.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம்.  கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன.  தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது.  சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் …

Read More »

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் “நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார்” இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

புது டெல்லி, ஜூலை 27: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் “நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார்” (நிசார்) இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இங்கு தெரிவித்தார். ஊடகங்களுக்கு விளக்கமளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) செயற்கைக்கோள் பணிகள் முடிவடைந்து இருப்பதால் அது ஜூலை 30, …

Read More »

கரிம பருத்தி சான்றிதழ் வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டுகள் – அபேடா மறுப்பு

தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டம் (NPOP – என்பிஓபி திட்டம்), மத்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் வணிகத் துறையால் இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்காக 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அமைப்பாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) செயல்படுகிறது. சிறு, குறு விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சான்றிதழ் முறை அவசியம் …

Read More »

ஜம்மு & காஷ்மீர் ரயில் பாதைகள் மற்றும் ரயில் பெட்டிகள் விரைவாக மேம்படுத்தப்படுவதைக் காண்கின்றன

பிரதமர் திரு நரேந்திர மோடி, செனாப் மற்றும் அஞ்சி பாலங்களுடன் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தை ஜூன் 06, 2025 அன்று தொடங்கி வைத்தார். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் ஜம்முவுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதில் இது ஒரு வரலாற்று மைல்கல். கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பாதையில் ஒரு முக்கியமான போக்குவரத்து அம்சமாக மாறியுள்ளது. தண்டவாள பராமரிப்பு: புதிய ரயில் சேவைகளுக்கு கூடுதல் வலு …

Read More »

பிரதமரின் மாலத்தீவு அரசுமுறைப் பயணதின் பலன்கள்

எண் ஒப்பந்தம்/புரிந்துணர்வு ஒப்பந்தம் 1 மாலத்தீவுக்கு 4,850 கோடி ரூபாய் கடன் வரி நீட்டிப்பு (LoC) 2 அரசால் நிதியளிக்கப்பட்ட கடன் வரிகளில் மாலத்தீவின் வருடாந்திர கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளைக் குறைத்தல் 3 இந்திய-மாலத்தீவுகள் தடையில்லா வர்த்தக ஒப்பந்த (IMFTA) பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டது 4 இந்திய-மாலத்தீவுகள் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு அஞ்சல்தலை கூட்டாக வெளியீடு     எண் தொடங்கி வைத்தல்/ ஒப்படைப்பு 1 இந்தியாவின் வாங்குபவர்களின் …

Read More »

நிலக்கரி அமைச்சகம் ஒற்றைச் சாளர முறை குறித்த பயிலரங்கை நடத்தியது

நிலக்கரித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிலக்கரி அமைச்சகம் ஜூலை 25, 2025 அன்று ஒற்றை சாளர அனுமதி அமைப்பின் ஆய்வு தொகுதி குறித்த நேரடி பயிற்சி பயிலரங்கை நடத்தியது. பங்குதாரர்களுக்கு அதன் செயல்பாடுகள் பற்றிய ஆழமான புரிதலை வழங்குவதையும், ஆய்வு தொடர்பான சமர்ப்பிப்பு மற்றும் ஒப்புதல்களை கையாள்வதில் அதன் அணுமுறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தப் பயிற்சி பயிலரங்கு புதுதில்லியின் SCOPE வளாகத்தில் உள்ள …

Read More »

ஜார்க்கண்டின் சோஹ்ராய் கலை இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற கலை உத்சவ நிகழ்ச்சியில் ஜார்க்கண்டின் பாரம்பரியமான சோஹ்ராய் கலை முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த பத்து நாள் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.  இந்தியாவின் வளமான நாட்டுப்புற, பழங்குடி கலை மரபுகளைக் கொண்டாடுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான கண்காட்சியைப் பார்வையிட்ட குடியரசுத்தலைவர், கலைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த கலைப்படைப்புகள் இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கின்றன என்றார். இயற்கையுடனான நமது தொடர்பு ஆழமானது என அவர் கூறினார். இந்த விலைமதிப்பற்ற மரபுகளை நிலைநிறுத்தும் கலைஞர்களைப் பாராட்டுவதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA-ஐஜிஎன்சிஏ) உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த ஜோஷி, பிராந்திய இயக்குநர் டாக்டர் குமார் சஞ்சய் ஜா, ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர் திருமதி சுமேதா சென்குப்தா உள்ளிட்டோர் நிறுவனத்தின் சார்பாக கலந்து கொண்டனர். ராஞ்சியில் உள்ள ஐஜிஎன்சிஏ பிராந்திய மையத்தின் திட்ட உதவியாளர்களான திருமதி போலோ குமாரி ஓரான், திரு பிரபாத் லிண்டா, டாக்டர் …

Read More »

கார்கில் வெற்றி தினத்தின் 26வது ஆண்டு நிறைவை இந்திய ராணுவம் கொண்டாடியது

நாடு முழுவதும் கார்கில் வெற்றி தினத்தின் 26வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், 1999 கார்கில் போரின் போது வீரர்களின் வீரத்தையும் உயர்ந்த தியாகத்தையும் போற்றும் வகையில், இந்திய ராணுவம் அதை மரியாதையுடனும், பெருமையுடனும், நாடு தழுவிய பங்கேற்புடனும் கொண்டாடியது. இந்த மைய நிகழ்வு டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது, இதில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை …

Read More »