Friday, December 05 2025 | 11:22:53 PM
Breaking News

19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு (ஜூன் 29, 2025) நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த பிரசுரங்கள் வெளியீடு

19-வது புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025)  புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. தேசிய முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தொடர்புடைய அமைச்சகங்கள்/துறைகள், ஐநா நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடன் கலந்தாலோசித்து, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை (NIF) உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் தினத்தன்று (அதாவது, ஜூன் 29 அன்று), புள்ளியியல் அமைச்சகம் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதில் இந்த 2025-ம் ஆண்டு புள்ளியியல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 29, 2025) புள்ளியியல் அமைச்சகம் அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிலையான வளர்ச்சி இலக்குகள் தேசிய குறியீட்டுக் கட்டமைப்பு முன்னேற்ற அறிக்கை -2025 என்ற இது 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தேசிய அளவிலான முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் ஒரு முக்கிய கருவியாக இருக்கும். நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றிய இந்த அறிக்கைகள் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடியவை. www.mospi.gov.in என்ற புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் இவை இடம்பெற்றுள்ளன.

Read More »

சுகாதார – தொழில்நுட்பப் புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது: இ.டி. மருத்துவர்கள் தின மாநாட்டில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

எக்கனாமிக் டைம்ஸ் (இ.டி.) டைம்ஸ் நவ் ஏற்பாடு செய்திருந்த மருத்துவர் தின மாநாட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முக்கிய உரையாற்றினார். திரு ஜிதேந்திர சிங் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரும் மருத்துவ பேராசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக  உள்ளது என நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.  பொருளாதாரத்தில் உலக அளவில் 10-வது இடத்திலிருந்து 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது எனவும் இந்த ஏற்றம் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணம், உள்நாட்டு உயிரி அறிவியல் கருவிகளை சுமந்து சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார். விரைவில் ஒரு புதிய மருத்துவத் துறையான விண்வெளி மருத்துவத்திற்கு வழிவகுக்கும் ஒரு மைல்கல் இது என்று அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில், மருத்துவக் கல்வியில் விண்வெளி மருத்துவர்கள் என்ற ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாகலாம் எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தியாவில் 70% க்கும் அதிகமானோர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றாலும், வயதான மக்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகின்றது என அவர் தெரிவித்தார். 1947-ம் ஆண்டில், சராசரி ஆயுட்காலம் 50-55 வயதாக இருந்தது எனவும் இப்போது அது 80-ஐ நெருங்குகிறது எனவும் அவர் கூறினார். இந்தியாவின் சமீபத்திய உலகளாவிய சாதனைகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நோய்த் தடுப்பு மற்றும் துல்லியமான சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கோவிட்-19-க்கான உலகின் முதல் மரபணு தடுப்பூசியையும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஹெச்பிவி தடுப்பூசியையும் இந்தியா உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஹீமோபிலியாவிற்கான முதல் மரபணு சிகிச்சை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது எனவும் இதன் முடிவுகள் மதிப்புமிக்க நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தனியார் துறையுடனான முதல் கட்ட ஒத்துழைப்பே இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார். பொது மற்றும் தனியார் துறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு காரணமாக இந்த சாதனைகள் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார். கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் ஆகியோருக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அறிவியல் மற்றும் மருத்துவத்தின் ஆன்மா இரண்டையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Read More »

வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்க மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மாதிரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், வேளாண் காடுகள் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை எளிமைப்படுத்துவதற்கும் வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ‘விவசாய நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான மாதிரி விதிகளை’ வெளியிட்டுள்ளது. கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மரங்களின் பரப்பை அதிகரித்தல், நீர் பாதுகாப்பு, பருவநிலை மீள்தன்மைக்கு பங்களித்தல், இயற்கைக் காடுகள் மீதான அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல நன்மைகளை வேளாண் காடுகள் வழங்குகின்றன. வேளாண் காடுகள் தொடர்பான நிலங்களைப் பதிவு செய்வதற்கும், மரங்களை வெட்டுதல், போக்குவரத்தை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை வழங்குவதன் மூலம் நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவதே மாதிரி விதிகளின் நோக்கமாகும். இந்த முயற்சி விவசாயிகள் மற்றும் பிற தரப்பினர் வேளாண் காடுகள் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவிக்கும் என்றும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மரம் சார்ந்த விவசாய முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் மாதிரி விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேளாண் காடுகளின் மூலம் உள்நாட்டு மர உற்பத்தியை ஊக்குவிக்கும் அணுகுமுறை தேவை-விநியோக இடைவெளியை குறைக்கும். உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு மர அடிப்படையிலான தொழில்களை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் இது உதவும். மரம் சார்ந்த தொழில்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள்- 2016-ன் கீழ் நிறுவப்பட்ட மாநில அளவிலான குழு இந்த மாதிரி விதிகளை செயல்படுத்துவதற்குப் பொறுப்பான அமைப்பாகும். மரம் வெட்டுதல் மற்றும் மர போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம், வணிக ரீதியாக மதிப்புமிக்க மர வகைகளின் உற்பத்தியை விவசாய நிலங்களில் மேம்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுவதே இதன் பங்காகும். மாதிரி விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் தோட்டங்களை தேசிய மர மேலாண்மை அமைப்பான என்டிஎம்எஸ்-ன் (NTMS) போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. நில உரிமைத் தகவல், பண்ணையின் இருப்பிடம், இனங்கள், தோட்ட காலம் போன்ற அடிப்படை தோட்டத் தரவைச் சமர்ப்பிப்பது இதில் அடங்கும். விண்ணப்பதாரர்கள் தோட்டத் தகவலை அவ்வப்போது புதுப்பித்து அதன் தன்மையை உறுதிசெய்ய தோட்டத்தின் புவிசார் அம்சங்கள் கொண்ட புகைப்படங்களைப் பதிவேற்றலாம். பதிவுசெய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து மரங்களை வெட்ட விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேசிய மர மேலாண்மை அமைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சரிபார்ப்பு நிறுவனங்கள் கள ஆய்வுகளை மேற்கொள்ளும். அவர்களின் சரிபார்ப்பு அறிக்கைகளின் அடிப்படையில், விவசாய நிலங்களில் மரம் வெட்ட அனுமதிகள் வழங்கப்படும். பிரதேச வன அதிகாரிகள் இந்த நிறுவனங்களின் செயல்திறனை அவ்வப்போது மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு மூலம் ஆய்வு செய்வார்கள். வேளாண் காடுகள் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், தேவையற்ற நடைமுறை தடைகளில் இருந்து விவசாயிகளைக் காக்கவும் இந்த மாதிரி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாதிரி விதிகளை ஆராய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதைப் பரிசீலிக்குமாறு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

நாட்டுமக்களே! வணக்கம். மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன், நல்வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் யோகக்கலையின் ஆற்றல், சர்வதேச யோகக்கலை தினத்தின் நினைவலைகளால் நிரம்பியிருப்பீர்கள்!! இந்த முறையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாடெங்கிலும், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் சர்வதேச யோகக்கலை தினத்தின் அங்கமாக ஆனார்கள். பத்தாண்டுகள் முன்பாக இந்த தினம் தொடங்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் முந்தையதை விட மேலும் …

Read More »

அவசரநிலைக் காலத்தின் போது அரசியல் சாசன முகவுரையில் சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டன – முகவுரை அரசியலமைப்பின் ஆன்மா, அதில் மாற்றம் செய்யாமல் மதிக்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினருமான திரு டி.எஸ். வீரய்யா தொகுத்த ‘அம்பேத்கரின் செய்திகள்’ என்ற நூலை புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று (28.06.2025) வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்தவொரு அரசியலமைப்பின் முகவுரையும் அதன் ஆன்மா எனவும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தனித்துவமானது என்றும் கூறினார். பாரதத்தைத் தவிர வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையும் …

Read More »

ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (28.06.2025) நடைபெற்ற ஆச்சார்யா வித்யானந்த் மஹாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாடு காண்கிறது என்றும், ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவின் புனிதத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். மதிப்பிற்குரிய ஆச்சார்யாவின் அழியாத உத்வேகத்தால் நிறைந்த இந்த நிகழ்வு, ஒரு அசாதாரணமான மற்றும் எழுச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இன்றைய தினம் மற்றொரு காரணத்திற்காக சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, 1987 ஜூன் 28 அன்று ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜுக்கு முறையாக ‘ஆச்சார்யா’ பட்டம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இது வெறும் பட்டம் மட்டுமல்ல, சமண மரபை சிந்தனை, ஒழுக்கம் மற்றும் இரக்கத்துடன் இணைக்கும் ஒரு புனித நீரோட்டத்தின் தொடக்கமாகும் என்றும் அவர் கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவை நாடு கொண்டாடும் வேளையில், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை நினைவுகூரும் வகையில் இந்த தேதி அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி முனிராஜுக்கு மரியாதை செலுத்துவதாகவும், அனைவருக்கும் ஆச்சார்யாவின் ஆசிகள் கிடைக்க விரும்புவதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார். வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழா ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, இது ஒரு சகாப்தத்தின் நினைவைக் கொண்டுள்ளது என்றும் ஒரு சிறந்த துறவியின் வாழ்க்கையை எதிரொலிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், சிறப்பு நினைவு நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் வெளியிடப்பட்டு உள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். ஆச்சார்யா பிரக்யா சாகரை சிறப்பாக அங்கீகரித்து மரியாதை செலுத்திய திரு நரேந்திர மோடி, அவரது வழிகாட்டுதலின் கீழ், லட்சக்கணக்கான சீடர்கள் மதிப்பிற்குரிய குரு காட்டிய பாதையில் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், தமக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கப்பட்டதாகவும், இந்திய பாரம்பரியம் துறவிகளிடமிருந்து பெறப்படுவதை ஒரு ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொடுக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தப் பட்டத்தை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு, அதை இந்தியத் தாயின் பாதங்களில் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் கூறினார். வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் தெய்வீக ஆன்மாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் ஆழ்ந்த உணர்ச்சித் தொடர்பைப் பற்றிப் பேசிய பிரதமர், அத்தகைய மரியாதைக்குரிய நபரைப் பற்றிப் பேசுவது இயற்கையாகவே ஆழமான உணர்ச்சிகளைத் தூண்டுகிறது என்று குறிப்பிட்டார். ஸ்ரீ வித்யானந்த் ஜி முனிராஜைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அவரது குரலை மீண்டும் ஒருமுறை கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்தார். இவ்வளவு சிறந்த ஆளுமையின் பயணத்தை வார்த்தைகளில் தொகுப்பது எளிதான காரியம் அல்ல என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆச்சார்ய வித்யானந்த் ஜி முனிராஜ் 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி கர்நாடகாவின் புனித பூமியில் பிறந்தார் எனவும் அவருக்கு ‘வித்யானந்த்’ என்ற ஆன்மீகப் பெயர் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆச்சார்யரின் வாழ்க்கை, அறிவு மற்றும் ஆன்மீகத்தின் தனித்துவமான சங்கமம் என்பதை அவர் எடுத்துரைத்தார். அவரது உரை ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்தது எனவும் ஆனால் அவரது வார்த்தைகள் மிகவும் எளிமையானவை என்றும் அவற்றை எவரும் புரிந்து கொள்ள முடியும் எனவும் பிரதமர் கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் ஜி 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் எனவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வெறுங்காலுடன் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்றும் தனது அயராத முயற்சிகள் மூலம் கோடிக் கணக்கான இளைஞர்களை ஒழுக்கம் மற்றும் கலாச்சார விழுமியங்களுடன் இணைத்துள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜை ‘சகாப்தத்தின் தொலைநோக்குப் பார்வையாளர்’ என்று அவர் வர்ணித்தார். ஆச்சார்யாவின் ஆன்மீக ஒளியை நேரில் அனுபவிக்கவும், காலப்போக்கில் அவரது வழிகாட்டுதலையும் ஆசீர்வாதங்களையும் பெறவும் வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறினார். இந்த நூற்றாண்டு விழாவில், மதிப்பிற்குரிய ஆச்சார்யாவிடமிருந்து அதே பாசத்தையும் நெருக்கத்தையும் இன்னும் உணர முடிகிறது என்று அவர் கூறினார். “இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகம் எனவும், அதன் கருத்துக்கள், தத்துவ சிந்தனை மற்றும் உலகக் கண்ணோட்டம் நித்தியமானவை என்பதால் நமது நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருக்கிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். இந்த நீடித்த பார்வை முனிவர்கள், துறவிகள் மற்றும் ஆச்சார்யர்களின் ஞானத்தில் வேரூன்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி முனிராஜ் இந்த காலத்தால் அழியாத மரபின் நவீன கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார் என்பதை அவர் எடுத்துரைத்தார். ஆச்சார்யா ஏராளமான பாடங்களில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார் என்றும் பல துறைகளில் சிறந்து விளங்கினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆச்சார்யாவின் ஆன்மீக தீவிரம், விரிவான அறிவு மற்றும் கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற மொழிகளில் அவரது புலமை ஆகியவற்றை பிரதமர் எடுத்துரைத்தார். இலக்கியம் மற்றும் மதத்திற்கு ஆச்சார்யாவின் பங்களிப்புகள், பாரம்பரிய இசை மீதான அவரது பக்தி, தேசிய சேவைக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துரைத்த பிரதமர், ஆச்சார்யா முன்மாதிரியான நபர் என்று கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் ஒரு சிறந்த இசைக்கலைஞர் மட்டுமல்ல, ஒரு தீவிர தேசபக்தர், சுதந்திரப் போராட்ட வீரர், மற்றும் முழுமையான பற்றின்மையை உள்ளடக்கிய ஒரு உறுதியான முனிவர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அவரை அறிவின் நீர்த்தேக்கம் என்று பிரதமர் வர்ணித்தார். சுரேந்திர உபாத்யாயிடமிருந்து ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜ் வரையிலான பயணம் ஒரு சாதாரண மனிதரிலிருந்து ஒரு உன்னதமான ஆன்மாவாக மாறுவதாகும் என்று திரு நரேந்திர மோடி கூறினார். எதிர்காலம் தற்போதைய வாழ்க்கையின் வரம்புகளால் கட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக ஒருவரின் திசை, நோக்கம் மற்றும் உறுதியால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான உத்வேகம் என்று பிரதமர் தெரிவித்தார். ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜ் தனது வாழ்க்கையை ஆன்மீக பயிற்சியுடன் நிறுத்தவில்லை எனவும், மாறாக சமூக மற்றும் கலாச்சார மறுகட்டமைப்புக்கான ஒரு ஊடகமாக தனது வாழ்க்கையை மாற்றினார் என்றும் குறிப்பிட்ட பிரதமர், பிராகிருத பவன் மற்றும் பல ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவியதன் மூலம், ஆச்சார்யா புதிய தலைமுறையினருக்கு அறிவின் சுடரை எடுத்துச் சென்றார் என்பதை சுட்டிக் காட்டினார். ஆச்சார்யா சமண வரலாற்றுக்கும் சரியான அங்கீகாரத்தை அளித்தார் என்று அவர் கூறினார். ‘ஜெயின் தரிசனம்’ மற்றும் ‘அனேகாந்த்வாத்’ போன்ற முக்கிய நூல்களை எழுதியதன் மூலம், அவர் தத்துவ சிந்தனையை ஆழப்படுத்தினார் எனவும் உள்ளடக்கம் மற்றும் புரிதலின் அகலத்தை ஊக்குவித்தார் என்றும் பிரதமர் தெரிவித்தார். கோயில் மறுசீரமைப்பு முதல் பின்தங்கிய குழந்தைகளின் கல்வி மற்றும் பரந்த சமூக நலன் வரை, ஆச்சார்யாவின் ஒவ்வொரு முயற்சியும் சுய உணர்தல் மற்றும் பொது நன்மை ஆகியவற்றின் தொகுப்பை பிரதிபலித்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். சுயநலமற்ற சேவைக்கான வழிமுறையாக மாறும்போதுதான் வாழ்க்கை உண்மையிலேயே ஆன்மீகமாகிறது என்று ஆச்சார்யா வித்யானந்த் மகாராஜ் ஒருமுறை கூறியதை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, இந்த சிந்தனை சமண தத்துவத்தின் சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும், இந்தியாவின் உணர்வோடு உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். “இந்தியா சேவையால் வரையறுக்கப்பட்ட மற்றும் மனிதநேயத்தால் வழிநடத்தப்படும் ஒரு நாடு” என்று பிரதமர் தெரிவித்தார். உலகம் பல நூற்றாண்டுகளாக வன்முறையை வன்முறையால் அடக்க முயற்சித்தாலும், இந்தியா உலகிற்கு அகிம்சையின் சக்தியை அறிமுகப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய நெறிமுறைகள் எப்போதும் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் உணர்வை முதன்மைப்படுத்தியுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். “இந்தியாவின் சேவை மனப்பான்மை நிபந்தனையற்றது, சுயநலத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் தன்னலமற்ற தன்மையால் ஈர்க்கப்பட்டது” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார், இந்தக் கொள்கை இன்று நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்துகிறது என்பதை அவர் விளக்கினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், ஆயுஷ்மான் பாரத், மற்றும் பின்தங்கியவர்களுக்கு இலவச உணவு தானிய விநியோகம் போன்ற முயற்சிகள் இந்த நெறிமுறையின் பிரதிபலிப்புகளாகும் என்று அவர் மேற்கோள் காட்டினார். இது சமூகத்தின் கடைசி நிலையில் உள்ளவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது எனவும் அனைத்து திட்டங்களிலும் செறிவூட்டலை அடைவதற்கும், யாரும் பின்தங்கியிருக்காமல் இருப்பதற்கும், முன்னேற்றம் உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த உறுதிப்பாடு ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பகிரப்பட்ட தேசிய உறுதிப்பாடாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். “தீர்த்தங்கரர்கள், துறவிகள் மற்றும் ஆச்சார்யர்களின் போதனைகள், வார்த்தைகள் ஒவ்வொரு சகாப்தத்திலும் காலத்தால் அழியாதவை மற்றும் பொருத்தமானவை. இன்று, ஐந்து மகாவ்ரதங்கள், அனுவ்ரதம், திரிரத்னங்கள் மற்றும் ஆறு அத்தியாவசியங்கள் போன்ற சமண மதக் கொள்கைகள் முன்பை விட மிகவும் முக்கியமானவை” என்று பிரதமர் கூறினார். காலத்தின் தேவைக்கேற்ப சாமானிய மக்களுக்கு நித்திய போதனைகள் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜ் தனது வாழ்க்கையையும் பணியையும் இந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்ததாக திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். “சமண வேதங்களை பேச்சுவழக்கில் வழங்குவதற்காக ஆச்சார்யா ‘வச்சநாமிர்த’ இயக்கத்தைத் தொடங்கினார். மேலும் ஆழமான ஆன்மீகக் கருத்துக்களை மக்களுக்கு எளிமையாகவும் அணுகக்கூடிய வகையிலும் தெரிவிக்க பக்தி இசையையும் பயன்படுத்தினார்” என்று  பிரதமர் கூறினார். ஆச்சார்யாவின் பஜனைகளில் ஒன்றை மேற்கோள் காட்டிய பிரதமர், இத்தகைய இசையமைப்புகள் ஞான முத்துக்களால் ஆன ஆன்மீக மாலைகள் என்று குறிப்பிட்டார். அழியாமையின் மீதான இந்த எளிதான நம்பிக்கையும், எல்லையற்றதை நோக்கிப் பார்க்கும் தைரியமும் இந்திய ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் உண்மையிலேயே சிறப்பானதாக ஆக்குகின்றன என்று அவர் மேலும் கூறினார். ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டானது தொடர்ச்சியான உத்வேகத்தை அளிக்கும் ஆண்டு என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, ஆச்சார்யாவின் ஆன்மீக போதனைகளை தனிப்பட்ட வாழ்க்கையில் உள்வாங்குவது மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் தேசத்தின் நலனுக்காக அவரது பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பையும் வலியுறுத்தினார். ஆச்சார்யா வித்யானந்த் தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் பக்திப் படைப்புகள் மூலம் பழங்கால பிராகிருத மொழியை மீண்டும் உயிர்ப்பிப்பதில் வகித்த முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். பிராகிருதம் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றாகும் என்றும், சமண ஆகமங்கள் இயற்றப்பட்ட பகவான் மகாவீரரின் போதனைகளின் அசல் ஊடகம் அது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கலாச்சார புறக்கணிப்பு காரணமாக, மொழி பொதுவான பயன்பாட்டிலிருந்து மறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா வித்யானந்த் போன்ற துறவிகளின் முயற்சிகள் இப்போது தேசிய முயற்சிகளாக மாறிவிட்டன என்றும் பிரதமர் கூறினார். அக்டோபர் 2024-ல், அரசு பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியதை அவர் நினைவு கூர்ந்தார். இந்தியாவின் பழங்கால கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க தொடங்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தை அவர் குறிப்பிட்டார். இதில் கணிசமான எண்ணிக்கையிலான சமண வேதங்கள் மற்றும் ஆச்சார்யர்கள் தொடர்பான நூல்கள் அடங்கும் என பிரதமர் கூறினார். உயர்கல்வியில் தாய்மொழியைப் பயன்படுத்துவதை அரசு ஊக்குவித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். செங்கோட்டையில் இருந்து தமது உரையை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், காலனித்துவ மனநிலையிலிருந்து நாட்டை விடுவித்து, வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் இணைத்து முன்னேறுவதற்கான உறுதியை மீண்டும் எடுத்துரைத்தார். இந்த உறுதிமொழி இந்தியாவின் கலாச்சார மற்றும் புனித யாத்திரைத் தலங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். 2024-ம் ஆண்டில், பகவான் மகாவீரரின் 2,550-வது நிர்வாண மஹோத்சவத்தைக் குறிக்கும் வகையில் அரசு பெரிய அளவிலான கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். இது ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜால் ஈர்க்கப்பட்டு, ஆச்சார்ய பிரக்யா சாகர் போன்ற துறவிகளால் ஆசீர்வதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். வருங்காலங்களில், நாடு அதன் கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்த இதுபோன்ற பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய நிகழ்ச்சியைப் போலவே, இதுபோன்ற அனைத்து முயற்சிகளும் மக்கள் பங்களிப்பு உணர்வால், அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்துடன் வழிநடத்தப்படும் என்று உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வில் தமது பங்கேற்பு இயற்கையாகவே நவ்கர் மந்திர தினத்தின் நினைவை எழுப்பியதாக திரு நரேந்திர மோடி கூறினார். இந்த ஒன்பது தீர்மானங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன எனவும் ஏராளமான மக்கள் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற ஆர்வத்துடன் பாடுபடுகிறார்கள் என்பதிலும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆச்சார்ய வித்யானந்த் ஜி முனிராஜின் போதனைகள் இந்த உறுதிமொழிகளை வலுப்படுத்துகின்றன என்றும் கூறினார். ஒன்பது தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், தண்ணீரைப் பாதுகாப்பதே முதல் தீர்மானம் என்று கூறினார். ஒவ்வொரு துளியின் மதிப்பையும் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்றும், அது தாய் பூமிக்கு நாம் செய்யும் ஒரு பொறுப்பு மற்றும் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார். இரண்டாவது தீர்மானம்  தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, தாய்மார்கள் நம்மை வளர்ப்பது போல அதை வளர்ப்பது, ஒவ்வொரு மரத்தையும் தாயிடமிருந்து ஒரு உயிருள்ள ஆசீர்வாதமாக மாற்றுவது. மூன்றாவது தீர்மானம் தூய்மையை வலியுறுத்துகிறது என்றும் ஒவ்வொரு தெரு, சுற்றுப்புறம் மற்றும் நகரமும் கூட்டு பங்கேற்புடன் சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ‘உள்ளூர் மக்களுக்கான குரல்’ என்பது நான்காவது தீர்மானமாக இருப்பதால், நாட்டின் வியர்வை மற்றும் மண்ணால் வளமான சக இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்து ஊக்குவிக்குமாறு திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தினார். ஐந்தாவது தீர்மானம் இந்தியாவை ஆராய்ந்து புரிந்துகொள்வது, உலகைப் பார்ப்பது நல்லது என்றாலும், ஒருவர் இந்தியாவை ஆழமாக அறிந்து, அனுபவித்து, போற்ற வேண்டும் என அவர் கூறினார். இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொள்ளும் ஆறாவது தீர்மானத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். பூமித்தாயை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து விடுவித்து, கிராமங்கள் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல் ஏழாவது தீர்மானமாகும் என்று அவர் கூறினார். கவனத்துடன் சாப்பிடுவது, உணவுகளில் சிறுதானியங்களைச் சேர்ப்பது மற்றும் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவற்றை அவர் அறிவுறுத்தினார். எட்டாவது தீர்மானம் யோகா மற்றும் விளையாட்டுகளை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வது என அவர் கூறினார். ஏழைகளுக்கு உதவுவது ஒன்பதாவது தீர்மானம் என்று திரு நரேந்திர மோடி கூறினார். பின்தங்கியவர்களின் கைகளைப் பிடித்து வறுமையை வெல்ல அவர்களுக்கு உதவுவது உண்மையான சேவை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஒன்பது தீர்மானங்களைப் பின்பற்றுவதன் மூலம், மக்கள் ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் போதனைகளை வலுப்படுத்துவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அமிர்த காலத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை நாட்டின் உணர்வில் ஆழமாக வேரூன்றியுள்ளது மற்றும் அதன் துறவிகளின் ஞானத்தால் வளப்படுத்தப்பட்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். அமிர்த தீர்மானங்களை நனவாக்கி வளர்ந்த இந்தியாவை உருவாக்க 140 கோடி குடிமக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை அவர் எடுத்துரைத்தார். வளர்ந்த இந்தியா என்ற கனவு என்பது ஒவ்வொரு இந்தியரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை ஆச்சார்ய வித்யானந்த் முனிராஜிடமிருந்து உத்வேகம் பெறுகிறது என்றும், அவர் காட்டிய பாதையில் நடப்பது, அவரது போதனைகளை உள்வாங்குவது மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதை வாழ்க்கையின் முதன்மையான கடமையாக மாற்றுவது ஒரு கூட்டுப் பொறுப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின் புனிதத்தன்மை இந்த உறுதிமொழிகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து, ஆச்சார்ய வித்யானந்த் ஜி முனிராஜுக்கு மரியாதை செலுத்தி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார். மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் துறவிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர். பின்னணி ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழா, மத்திய அரசால் பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் ஒரு வருட கால தேசிய நிகழ்வின் முறையான தொடக்கத்தைக் குறிக்கிறது. மதிப்பிற்குரிய ஜெயின் ஆன்மீகத் தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் இந்த கொண்டாட்டத்தில் நாடு முழுவதும் கலாச்சார, இலக்கிய, கல்வி மற்றும் ஆன்மீக முயற்சிகள் நடைபெறும். இது அவரது வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதையும் அவரது செய்தியைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜ் சமண தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள பழங்கால சமண கோயில்களின் மறுசீரமைப்பு மற்றும் மறுமலர்ச்சியில் அவர் முக்கியப் பங்காற்றினார். மேலும் கல்விக்காகவும், பிராகிருதம், சமண தத்துவம் மற்றும் பாரம்பரிய மொழிகள் வளர்ச்சிக்கும் அவர் பணியாற்றினார்.

Read More »

இந்திய மின் துறைக்கான வலுவான டிஜிட்டல் அமைப்பை உருவாக்க ‘இந்திய எரிசக்தித் தொகுப்பு’ என்ற கட்டமைப்பை மின்துறை அமைச்சகம் உருவாக்குகிறது

இந்திய எரிசக்தித் துறைக்கு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாக இந்தியா எரிசக்தி தொகுப்பு (IES) என்ற கட்டமைப்பை உருவாக்க ஒரு பணிக்குழுவை அமைப்பதாக மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் செல்கிறது. நிகர பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழிகளை நோக்கி இந்தியா முன்னேறும்போது, ​​மின் துறை பெரிய வாய்ப்புகளையும் சிக்கலான சவால்களையும் எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், எரிசக்தி சந்தைகளில் நுகர்வோர் பங்கேற்பு ஆகியவற்றில் விரைவான வளர்ச்சி இந்தத் துறையை மாற்றி வருகிறது. ஆனால் துண்டு துண்டான அமைப்புகள் இருப்பதும், தடையற்ற டிஜிட்டல் ஒருங்கிணைப்பு இல்லாததும் முக்கிய தடைகளாகவே உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்வதற்காக, மின்சார அமைச்சகம், மின் மதிப்புச் சங்கிலி முழுவதையும் நிர்வகிக்க, ஒரு தரப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான தளமாக, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) எனப்படும் இந்தியா எனர்ஜி ஸ்டேக் (IES -ஐஇஎஸ்) என்ற இந்திய எரிசக்தித் தொகுப்பு மூலம் இத்துறையின் டிஜிட்டல் அடித்தளத்தை வலுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஐஇஎஸ் மூலமான நன்மைகள்: *நுகர்வோர், சொத்துக்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்குத் தனித்துவமான அடையாளங்கள் * உடனடி, ஒப்புதல் அடிப்படையிலான தரவு பகிர்வு * தடையற்ற ஒருங்கிணைப்புக்கான திறந்த நடைமுறை * நுகர்வோர் அதிகாரமளித்தல், சந்தை அணுகல் மற்றும் புதுமைக்கான அம்சங்கள் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால், நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், மின்துறையில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும் மின் துறையில் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அவசரத் தேவை உள்ளது என்றார். இந்தியா எனர்ஜி ஸ்டேக் (IES – ஐஇஎஸ்) எனப்படும் இந்திய எரிசக்தித் தொகுப்பு போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைப்பதிலும், விநியோகச் செயல்திறனை மேம்படுத்துவதிலும், வெளிப்படையான, நம்பகமான மின் சேவைகளை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். ஐஇஎஸ் தொடர்பான முயற்சிகளை வழிநடத்த, மின்துறை அமைச்சகம் தொழில்நுட்பம், மின் துறை மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக பணிக்குழுவை அமைத்துள்ளது.

Read More »

இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தப்படாத குழந்தைகள் விகிதம் 0.06 சதவீதமாக குறைந்தது – குழந்தைகள் ஆரோக்கியத்தில் உலகளாவிய முன்மாதிரியாக இந்தியா திகழ்கிறது

நோய்த் தடுப்பிலும் ஆரோக்கிய பராமரிப்பிலும் தடுப்பூசி மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. நோய்த்தடுப்புக்கு இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அதன் அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டம் (UIP) மூலம் தெளிவாகிறது. இது ஆண்டுதோறும் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் 2.6 கோடி குழந்தைகளுக்கும் (1 வயது வரை உள்ள குழந்தைகள்) இலவச தடுப்பூசி சேவைகளை வழங்குகிறது. நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள் 1.3 கோடிக்கும் மேற்பட்ட நோய்த்தடுப்பு முகாம்களை நடத்துகிறார்கள். நாடு முழுவதும் தொடர்ச்சியான, முயற்சிகள், தடுப்பூசி இயக்கங்கள், இந்த செயல்பாட்டை தீவிரப்படுத்தியதன் விளைவாக, மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது. 2023-ல் 0.11 சதவீதத்திலிருந்து 2024-ல் 0.06 சதவீதமாக இது குறைந்துள்ளது. இந்த அணுகுமுறை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது.  நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த நடப்பு ஆண்டில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சாதனைகள் இந்தியாவை குழந்தை ஆரோக்கியத்தில் உலகளாவிய முன்மாதிரியாக நிலைநிறுத்தியுள்ளன. இதனை ஐநா குழந்தை இறப்பு மதிப்பீட்டிற்கான நிறுவனங்களுக்கு இடையேயான குழு (UN IGME), அதன் 2024-ம் ஆண்டு அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது. மார்ச் 6, 2024 அன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க செஞ்சிலுவை சங்க தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவிற்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகளை அதிகம் செலுத்தியதற்கான சாம்பியன் விருது வழங்கப்பட்டது. வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவை காரணமாக குழந்தைகள் இறப்பது கணிசமாக குறைந்துள்ளது. உயிர் காக்கும் தடுப்பூசிகளே இதற்குக் காரணம். தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்க எடுக்கப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள்: * தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அதிகம் உள்ள 11 மாநிலங்களில் உள்ள 143 மாவட்டங்களில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. * இந்திரதனுஷ் திட்டம் : மாநில அரசுகளுடன் இணைந்து இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 5.46 கோடி குழந்தைகளுக்கும், முன்னர் தடுப்பூசி போடப்படாத அல்லது முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்ட 1.32 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. * பல்ஸ் போலியோ இயக்கங்கள்: இந்தியா 2014 முதல் போலியோ இல்லாத நிலையைப் பராமரித்து வருகிறது. * கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து: சமூக மட்டத்தில் நோய்த்தடுப்பு மற்றும் வெளிநடவடிக்கைகளுக்காக தொடர்ந்து ஒழுங்கமைக்கப்படுகிறது. * பல அடுக்கு பணிக்குழுக்கள்: மாநில, மாவட்டம், மற்றும் பகுதி அளவிலான பணிக்குழுக்கள் ஒருங்கிணைந்த தடுப்பூசிப் பணிகளை இந்தக் குழுக்கள் உறுதி செய்கின்றன. * வழக்கமான தகவல், கல்வி, மக்கள் தொடர்பு இயக்கங்கள்: விழிப்புணர்வை அதிகரிக்கவும் தடுப்பூசிகள் மீதான தயக்கத்தை ஒழிக்கவும் இந்தப் பிரச்சார இயக்கங்கள் உதவுகின்றன.

Read More »

பயோமாஸ் (உயிரிப் பொருள் திரள்) திட்ட வழிகாட்டுதல்களில் முக்கிய திருத்தங்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய பயோமாஸ் திட்டத்தின் கட்டம்-I-ன் கீழ் பயோமாஸ் எனப்படும் உயிரி எரிபொருள் திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இது 2021–22 முதல் 2025–26 வரையிலான நிதியாண்டிற்குப் பொருந்தும். இந்தத் திருத்தங்கள் தூய்மையான எரிசக்தி தீர்வுகளை ஊக்குவித்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், இந்தியா முழுவதும் பயோமாஸ் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிய கட்டமைப்பின் கீழ், காகித கோப்புகள் மூலமான பணிகளைக் குறைத்தல், ஒப்புதல் நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற பல செயல்முறைகளை அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளது. இது இந்த தொழில்துறையில் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள தங்கள் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இந்த மாற்றங்கள், 2070-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் பரந்த இலக்கை அடையவும், பயிர்க் கழிவு மேலாண்மை தொடர்பான முன்னேற்றத்தை அடையவும் பங்களிக்கும். இந்த திருத்தத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, எஸ்சிஏடிஏ போன்ற உயர் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பதிலாக ஐஓடி அடிப்படையிலான கண்காணிப்பு தீர்வுகள் அல்லது காலாண்டு தரவு சமர்ப்பிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு செய்வதாகும். இந்த செலவு குறைந்த நடவடிக்கை, குறிப்பாக சிறு வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. மேலும், மத்திய நிதி உதவி (CFA) அம்சங்களின் கீழ் மானிய விநியோக வழிமுறை செயல்திறன் அடிப்படையிலானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றப்பட்டுள்ளது. முழு அளவில் திறன் வாய்ந்த முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழு நிதி உதவியைப் பெறும். அதே நேரத்தில் குறைந்த செயல்திறனுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விகிதாசார அடிப்படையில் நிதி கிடைக்கும். இந்தத் திருத்தங்கள் பயோமாஸ் திட்டத்தை சீராக செயல்படுத்துவதற்கும், செயல்பாட்டுக்கு வந்த ஆலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவியை சரியான நேரத்தில் வழங்குவதற்கும் மட்டுமல்லாமல், இந்த துறை முழுவதையும் ஊக்குவிக்கும்.

Read More »

மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலமும் – சி-டாக் நிறுவனமும் இணைந்து டிஜிட்டல் திறன் இடைவெளியைக் குறைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன

மேம்பட்ட டிஜிட்டல் திறன்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், கல்வி, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப அதற்கான தொழில்நுட்பத் திறன் அடிப்படையிலான  இடைவெளியைக் குறைப்பதற்கும் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக மெட்ராஸ் ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலம் – சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் சி-டாக் இணைந்து டிஜிட்டல் திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. சி-டாக் நிறுவனத்தின் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் …

Read More »