Tuesday, December 30 2025 | 02:14:37 PM
Breaking News

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமிலான உயர்மட்ட குழு பஞ்சாயத்து அளவில் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ₹507.37 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் இயங்கும் உயர்மட்டக் குழு, 20 மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பேரிடர் அபாயக் குறைப்பு  முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்திற்கு ரூ.507.37 கோடி நிதிக்கு இன்று (டிசம்பர் 16) ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு பேரிடரையும் தாங்கும் வகையில் …

Read More »

சர்தார் வல்லபாய் படேலின் 75-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்தினார்

சர்தார் வல்லபாய் படேலின் 75-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் இன்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். இது குறித்து சமூக ஊடக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், நாட்டின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை பெருமளவு வலுப்படுத்தியதுடன் அகில இந்திய சேவைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சமஸ்தானங்களை ஒருங்கிணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பெரும் …

Read More »

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கான பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

நான் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறேன். இந்த 3 நாடுகளுடனும் இந்தியா பழமையான நாகரீக உறவுகளையும், விரிவான சமகால இருதரப்பு உறவுகளையும் பகிர்ந்து கொள்கிறது. முதலாவதாக ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஐபின் அல் ஹூசைன் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்கிறேன்.  இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது. இந்தப் …

Read More »

நாட்டின் எரிசக்தித் துறை வளர்ச்சியடைந்துள்ளது – மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

துணிச்சல் மிக்க தொலைநோக்குப் பார்வை, நேர்மையான நோக்கம், அயராத செயல்பாடு, நாட்டின் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது இந்திய எரிசக்தித் துறையின் கடந்த 11 ஆண்டுகால பயணத்தின் ஆதாரமாக திகழ்கிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று சர்தார் படேல்-ஐ நினைவில் …

Read More »

இந்தியாவில் தொழில் புரிவதை எளிமையாக்க அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்

2014-ம் ஆண்டு முதல், இந்தியாவில் தொழில் புரிவதை எளிமையாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்கள் நம்பிக்கை சட்டம், 2023 மூலம் 42 மத்தியச் சட்டங்களில் உள்ள 183 விதிகள் குற்றமற்றதாக்கப்பட்டுள்ளன . அத்துடன், 47,000 இணக்க விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனங்களைப் பதிவு செய்வதை விரைவுபடுத்த மத்தியப் பதிவு மையம்  நிறுவப்பட்டது. மேலும், ஸ்பைஸ்+ போன்ற ஒரே ஒருங்கிணைந்த படிவங்கள் மூலம் பான், ஜிஎஸ்டி மற்றும் வங்கிக் கணக்கு …

Read More »

‘ஸ்பார்ஷ்’ டிஜிட்டல் தளத்தில் 31.69 லட்சம் பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர்கள் இணைப்பு

பாதுகாப்புத் துறை ஓய்வூதிய நிர்வாகத்திற்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளமான ‘ஸ்பார்ஷ்’ , நவம்பர் 2025 நிலவரப்படி 31.69 லட்சம் ஓய்வூதியதாரர்களை இணைத்துள்ளது. இது 45,000-க்கும் மேற்பட்ட முகவர் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்ட பழைய அமைப்பை மாற்றி, ஒரு ஒருங்கிணைந்த, வெளிப்படையான டிஜிட்டல் அமைப்பை உருவாக்கியுள்ளது. சாதனைகள்: பழைய அமைப்பிலிருந்து மாற்றப்பட்ட 6.43 லட்சம் முரண்பாடு வழக்குகளில், 94.3% (6.07 லட்சம்) தீர்க்கப்பட்டுள்ளன. குறைகள் தீர்வு: ஆன்லைன் மூலம் குறைகளைக் களைய முடியும் …

Read More »

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு எரிசக்திப் பாதுகாப்பு விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 14, 2025) புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2025-ஐ வழங்கினார். எரிசக்தி பாதுகாப்பு குறித்த தேசிய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், எரிசக்தி சேமிப்பு என்பது இன்றைய மிக முக்கியமான தேவை என்று தெரிவித்தார். எரிசக்தி சேமிப்பு என்பது எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அதை புத்திசாலித்தனமாகவும், பொறுப்புடனும், திறமையாகவும் பயன்படுத்துவதாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். தேவையற்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, குறைந்த எரிசக்தி திறன் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவது, சூரிய ஒளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது போன்றவை, மின்சக்தியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், கார்பன் வெளியேற்றத்தையும் குறைப்பதாக அவர் கூறினார். சமநிலையான சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பதற்கும் எரிசக்தி சேமிப்பு முக்கியமானது என அவர் தெரிவித்தார். நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் இயற்கையின் மீதான நமது பொறுப்பின் அடையாளமாகவும், எதிர்கால சந்ததியினர் நலனில் நமது அக்கறையின் அடையாளமாகவும் இருக்கும் என்று அவர் கூறினார். இளைஞர்களும் குழந்தைகளும் எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, அந்த நோக்குடன் முயற்சிகளை மேற்கொண்டால், இந்தத் துறையில் இலக்குகளை அடைய முடியும் என்றும், நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பிரதமரின் மேற்கூரை சூரிய சக்தி வீடுகள் திட்டம், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் போன்ற முன்முயற்சிகள் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அரசு ஊக்குவித்து வருகிறது என அவர் கூறினார். இந்த மாற்றம் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தின் வெற்றிக்கு ஒவ்வொரு துறை, ஒவ்வொரு நபரின் பங்களிப்பும் அவசியம் என்று அவர் கூறினார். அனைத்து துறைகளும் எரிசக்தி திறனை அதிகரிக்க செயல்பாடுகளில் மாற்றம் மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். கூட்டுப் பொறுப்பு, ஒத்துழைப்பு, பொது மக்கள் பங்கேற்பு ஆகியவற்றோடு, இந்தியா எரிசக்தி பாதுகாப்பில் தொடர்ந்து முன்னணிப் பங்காற்றும் என்றும், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இலக்குகளை அடையும் என்றும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

Read More »

குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடல்

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (14.12.2025) புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத்தலைவர் இல்லத்தில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வனப் பணி (ஐஎஃப்ஓஎஸ்) பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த அதிகாரிகள் ஹரியானா பொது நிர்வாக நிறுவனத்தில் (எச்ஐபிஏ) சிறப்பு அடித்தள பாடத் திட்டத்தைப் பயின்று வருகின்றனர். “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதிலும், அகில இந்திய சேவைகளை நிறுவுவதிலும் அவரது முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். ஓட்டோ வான் பிஸ்மார்க் ஜெர்மனியை ஒன்றிணைத்தார் என கூறிய அவர், அங்கு மக்கள் ஒரு பொதுவான மொழியைப் பேசினர் எனவும் ஒரே கலாச்சாரம் இருந்தது எனவும் குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். ஆனால் பல மொழிகளுடன், கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒருங்கிணைக்கும் மிகவும் சிக்கலான பணியை சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த அசாதாரண சாதனை உலகின் வேறு எந்த முயற்சிகளையும் விட சிறப்பானது என்று அவர் கூறினார். திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆற்றும் பங்கை அவர் பாராட்டினார். பொது சேவையில் பொறுப்புணர்வு மிக்க நடவடிக்கைகளை வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர், செயல்திறனையும் சேவை வழங்கலையும் மேம்படுத்த தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பொது வாழ்வில் பொறுமையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். திறமையான, மனிதாபிமான நிர்வாகத்திற்கு பொறுமையும், கவனத்துடன் பிரச்சனைகளைக் கேட்பதும் அத்தியாவசியம் என்று அவர் எடுத்துரைத்தார். பொதுமக்களின் குறைகளைக் கேட்பது பெரும்பாலும் பிரச்சனையின் பெரும்பகுதியைத் தீர்க்கிறது என்று அவர் கூறினார். இந்த கலந்துரையாடல் இளம் அதிகாரிகளுக்கு தலைமைத்துவம், நிர்வாகம், நெறிமுறை சார்ந்த பொது சேவை ஆகியவை தொடர்பான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது. ‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें : https://matribhumisamachar.com/2025/12/10/86283/ आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं: https://www.amazon.in/dp/B0FTMKHGV6 यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर …

Read More »

ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று (14.12.2025) யூத பண்டிகையான ஹனுக்காவின் முதல் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரமான இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ள பிரதமர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான உலகளாவிய போராட்டத்தை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “யூத பண்டிகையான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடிய மக்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா நிற்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.”

Read More »

கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர சிலையை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார்

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அதானியில் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர  சிலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று (14.12.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது என அவர் கூறினார். இது வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல என்றும் இந்தியாவின் சுயமரியாதை, துணிச்சல் ஆகிய உணர்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு விழா என்றும் கூறினார். “ஜெய் பவானி, ஜெய் சிவாஜி” என்ற முழக்கம் இன்றும் கூட ஒவ்வொரு இந்தியரிடமும் அச்சமின்மை, தேசிய கடமை உணர்வைத் தூண்டி வருவதாக அவர் குறிப்பிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் அவர் நினைவு கூர்ந்தார். சிவாஜி மகாராஜின் வீரத்திற்கு பெலகாவி பகுதியும் அதானி நிலமும் ஒரு சாட்சியாக இருந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். பெலகாவி மண்ணில், வீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அழியாத சரித்திரம் நிலைப்பெற்றுள்ளது என்று அவர் கூறினார். சிவாஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டு நவீன இந்தியா முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிலை வருங்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

Read More »