தூய்மை இந்தியா இயக்கம் – ஊரக வளர்ச்சி தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினமான 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதன் மூலம், கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம் மத்திய அரசின் நிதியுதவியுடன் 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் விளைவாக, 2019-ம் ஆண்டு …
Read More »2024-ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையின் செயல்பாடுகள்
பணப் பரிமாற்ற ஒப்பந்தம் – சார்க் நாடுகளுக்கான புதிய கட்டமைப்பு: 2024-ம் ஆண்டில், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, உலகளாவிய பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கான செயல்பாடுகளை மேற்கொண்டது. சார்க் அமைப்பில் உள்ள நாடுகளுக்கிடையில் புதிய பணப்பரிமாற்ற வசதிக்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பில் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாயின் சில்லரை பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது அமெரிக்க டாலர் / யூரோ பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்புடன் இணைந்து செயல்படும். இத்தகைய நடவடிக்கைகள் இந்திய ரூபாயின் உலகளாவிய பரிமாற்றத்தை ஊக்குவிக்கும். இந்தியா- உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத் நாடுகளுக்கிடையிலான நிதி சார் ஒப்பந்தங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிசெய்யும் வகையிலும், பொருாளதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும், இந்தியா- உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே நிதி சார் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு, நிதி சார் சிக்கல்களுக்கான தீர்வுகள் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இந்தியா-குவைத் நாடுகளிடையே முதலீட்டு பணிக்குழு உருவாக்கம் இவ்விரு நாடுகளுக்கிடையேயான நிதி பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய முதலீட்டாளர் நல நிறுவனம், மாநிலங்களுக்கிடையே நிதி சார் ஒத்துழைப்பையும், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது. மேலும், அந்நிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்பட்டு, தடையற்ற பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகளை உறுதிசெய்கிறது. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான புதிய பண பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம் 2024-27 இந்தியா-உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத் நாடுகளிடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் நிலையான பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளில் முன்னேற்றம் 2024-ம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சியில் புதுமையான முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தன. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மூலம் இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்தியுள்ளது.
Read More »பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கான கூட்டம் நிதிச்சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜு தலைமையில் நடைபெற்றது
நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களால் தீர்வு காணப்பட்ட 20 பொதுமக்கள் குறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தங்களது குறைகள் குறித்து புகார் அளித்தவர்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் பிரதமர் அளித்த உத்தரவுகளை நிதிச்சேவைகள் …
Read More »ஒரே நாடு ஒரே சந்தா
பண்டைய அறிவு மற்றும் வளமான பாரம்பரியம் கொண்ட நாடான இந்தியா, எப்போதும் புதுமை மற்றும் கண்டுபிடிப்பின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. கணிதம் மற்றும் வானியலில் முன்னோடியாக இருப்பது முதல் அறிவியலின் பல்வேறு துறைகளில் அற்புதமான பங்களிப்புகள் வரை, நாட்டின் அறிவுசார் சாதனைகளின் மரபு வரலாறு என்பது ஒப்பிடமுடியாதது. ஆகஸ்ட் 15, 2022 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையின் கொத்தளங்களில் இருந்து, இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தையும், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் …
Read More »‘ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்: த்ரூ தி ஏஜஸ்’ என்ற புத்தகத்தை திரு அமித் ஷா புதுதில்லியில் நாளை வெளியிடுகிறார்
நாளை(ஜனவரி 2, 2025) புதுதில்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்குவார். மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கௌரவ விருந்தினராக கலந்து கொள்வார். இந்த நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள் ‘ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்: த்ரூ தி ஏஜஸ்’ (காலந்தோறும் -ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்) என்ற தலைப்பிலான …
Read More »2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்
புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை பாதுகாப்பு அமைச்சகத்தில் ‘சீர்திருத்த ஆண்டாக’ கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக …
Read More »குடியரசு தின அணிவகுப்பு, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை நாளை (ஜனவரி 02, 2025 ) தொடங்குகிறது
குடியரசு தின அணிவகுப்பு – 2025, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றை காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஜனவரி 02-ம் தேதி தொடங்குகிறது. கட்டணச்சீட்டு விவரம் பின்வருமாறு: வ. எண் நிகழ்ச்சி கட்டணச்சீட்டு மதிப்பு அட்டவணை 1. குடியரசு தின அணிவகுப்பு (26.01.2025) ரூ.100/- & ரூ.20/- 2025-ம் ஆண்டு ஜனவரி 02 முதல் 11 வரை –காலை 9.00 மணி முதல் அன்றைய இருக்கைகள் தீரும் வரை. 2. பாசறை திரும்பும் நிகழ்வு (முழு ஒத்திகை 28.01.2025) ரூ.20/- 3. பாசறை திரும்பும் நிகழ்வு (29.01.2025) ரூ.100/- கட்டணச் …
Read More »நீலகிரி, சூரத், வாக்ஷீர் ஆகிய 3 கப்பல்களை இயக்க இந்திய கடற்படை தயாராகி வருகிறது
2025 ஜனவரி 15 இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக அமைய உள்ளது. திட்டம் 17 ஏ-வின் கண்டறிய முடியாமல் ரகசியமாக பயணிக்கும் பக்கத் துணை போர்க்கப்பலான நீல்கிரி, திட்டம் 15 பி-யின் கண்டறிய முடியாமல் ரகசியமாக பயணிக்கும் தாக்கி அழிக்கும் பிரிவின் நான்காவது மற்றும் இறுதி கப்பலான சூரத் மற்றும் ஸ்கார்பீன் பிரிவு திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கப்பல்கள் …
Read More »ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்
ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா இந்திய விமானப்படையின் மேற்கு படைப்பிரிவின் தளபதியாக இன்று அதாவது 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 01-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா 1986-ம் ஆண்டு டிசம்பர் 06 – தேதி இந்திய விமானப்படையின் விமானியாக நியமிக்கப்பட்டார். அவர் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, பெங்களூரில் உள்ள விமானப்படை விமானிப் பயிற்சி பள்ளி, அமெரிக்காவின் விமானப்படை பணியாளர் கல்லூரி, இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் ஆகியவற்றின் முன்னாள் மாணவர் …
Read More »தொழில்துறையின் நிலைத்தன்மை, மேம்பாட்டில் புகையிலை வாரியம் கவனம் செலுத்துகிறது; 2023-24-ம் நிதியாண்டில் ஏற்றுமதி 12,005 கோடி ரூபாயை எட்டியது
புகையிலை சார்ந்த கைத்தொழிலின் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையிலான உத்திசார் நடவடிக்கைகளை புகையிலை வாரியம் மேற்கொண்டுள்ளது. உள்நாட்டுத் தேவைகளையும் ஏற்றுமதி தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் வகையில், பயிர் செய்வதை திட்டமிடுதல், உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் இதில் அடங்கும். இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தரமான புகையிலையை வழங்க ஏதுவாக அதனை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு இந்த வாரியம் உதவி செய்கிறது. புகையிலை சார்ந்த கைத்தொழிலின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக “புகையிலை …
Read More »
Matribhumi Samachar Tamil