இந்தியக் கடலோரக் காவல்படை நாட்டிற்காக சுமார் 50 ஆண்டுகளாக மேற்கொண்ட அர்ப்பணிப்புள்ள சேவையைக் குறிக்கும் வகையில் 2025 பிப்ரவரி 01 அன்று தனது 49-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்திய கடலோர காவல்படையின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் பரமேஷ் சிவமணி, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, நாட்டின் சேவையில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 1977-ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ஏழு தளங்களுடன், இந்திய கடலோர காவல்படை ஒரு வலிமைமிக்க சக்தியாக …
Read More »
Matribhumi Samachar Tamil