தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) குறித்த பயிலரங்கை டிராய் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்த மூன்று நாள் பயிலரங்கில் தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலில் இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், பணிக்குழு உறுப்பினர்கள், தொழில்துறை வல்லுநர்கள், பல அரசுத் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஆசியா பசிபிக் தொலைத் தொடர்பு சமுதாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கை …
Read More »இந்திய தர கவுன்சிலின் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவராக டாக்டர் சந்தீப் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்
புகழ்பெற்ற மருத்துவ நிபுணரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவருமான டாக்டர் சந்தீப் ஷா, இந்திய தர கவுன்சிலின் அங்கமான சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.ஏ.பி.எல்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சோதனை மற்றும் அளவுத்திருத்த சேவைகளின் தரத்தை மேம்படுத்த இந்த அமைப்பு செயல்படுகிறது. நுகர்வோர், வணிகங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் நம்பிக்கையை இது உறுதி செய்கிறது. அகமதாபாதின் பி.ஜே மருத்துவக் கல்லூரியில் எம்.டி …
Read More »நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை மதிக்க வேண்டும்: மாநிலங்களவைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளிக்கு இடையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் நிலை குறித்து மாநிலங்களவை தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்துள்ளார். “மாண்புமிகு உறுப்பினர்களே என விளித்து உலகநாடுகள் நமது ஜனநாயக நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தும் இடையூறுகள் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் சீர்குலைப்பதாகவும் அவர் கூறினார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமையை புறந்தள்ளக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டுமென்றும், …
Read More »சிபிஐசி தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில், வரி செலுத்துவோர் சேவைகளை மேம்படுத்த புதிய முன்முயற்சிகளை தொடங்கி வைத்தார்
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், அனைத்து வாரிய உறுப்பினர்களின் முன்னிலையில், வரி செலுத்துவோரின் அனுபவத்தையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தும் முன்முயற்சிகளை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய திரு அகர்வால், “இன்று தொடங்கப்பட்ட முன்முயற்சிகள் வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். வரி செலுத்துவோருக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், அவர்களின் பரிந்துரைகளை …
Read More »“இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகால மகத்துவமிக்க பயணம்” என்ற விவாதத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஆற்றிய தொடக்க உரை
மாண்புமிகு உறுப்பினர்களே, 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாளன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இரண்டு நாள் கொண்டாட்டத்தை நாம் இன்று தொடங்குகிறோம். இது கொண்டாட்டத்திற்கான அழைப்பு மட்டுமல்ல, நமது பயணத்தை ஆழமாக பிரதிபலிப்பதும், நமது முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிக்கக் கூடியதுமாகும். இந்த அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த அவையில் நடைபெறும் நமது விவாதங்கள், இந்த நிகழ்வின் தீவிரத்தை பிரதிபலிக்கட்டும். 1.4 பில்லியன் மக்களுக்கு சேவை …
Read More »எதிர்கால உலகை இந்தியாவின் அறிவுத்திறன் வழிநடத்தவுள்ளது : ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம்
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னோடி நிறுவனமான சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கழகத்தின் (என்.ஐ.டி.டி.டி.ஆர்) வைர விழாவைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 15, 2024 அன்று இந்நிறுவனம் 61-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஏ.ஐ.சி.டி.இ தலைவர், இந்தியாவின் பண்டைய ஞானத்திற்கும் நவீன தொழில்நுட்ப …
Read More »18வது உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற குகேஷின் சாதனை குறித்து மாநிலங்களவைத் தலைவர் ஆற்றிய வாழ்த்துரை
மாநிலங்களவையில், அதன் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ள இளம் வீரர் குகேஷூக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். அவரது உரை பின்வருமாறு: “மாண்புமிகு உறுப்பினர்களே, இந்திய விளையாட்டு வரலாற்றில் அற்புதமான உலகளாவிய சாதனைப் படைக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு அற்புதமான சதுரங்கப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து இளைய உலக சதுரங்க சாம்பியனாக நமது 18 வயது சதுரங்க விற்பன்னர் டி. குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த நட்சத்திர வெற்றி சதுரங்கப் பலகையையும் தாண்டி எதிரொலிக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு …
Read More »
Matribhumi Samachar Tamil