Saturday, December 06 2025 | 04:24:18 PM
Breaking News

Tag Archives: challenges

சவால்களுக்கு தீர்வு காண கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ‘யோசனை மற்றும் புத்தாக்கம் போட்டியை’ என்.சி.சி தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்

தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் இன்று (ஜனவரி 10) புதுதில்லியின் சஃப்தர்ஜங்கில் உள்ள என்.சி.சி கட்டிடத்தில் ‘யோசனை மற்றும் புதிய கண்டுபிடிப்பு போட்டியை’ தொடங்கி வைத்தார். என்.சி.சி குடியரசு தின முகாமில் (ஆர்.டி.சி) முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தனித்துவமான முயற்சியானது என்.சி.சி. மாணவர்களுக்கு விமர்சன ரீதியாக சிந்திக்கவும் நிஜ உலக சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கவும் உதவக்கூடிய கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை …

Read More »

ராய்காட் கோட்டையின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு, அகழ்வாராய்ச்சியின் முன்னேற்றங்களும் சவால்களும்

ராய்காட் கோட்டை 1909 முதல் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் அதிகார வரம்பின் கீழ் மத்திய அரசால் பாதுகாக்கப்படும்  நினைவுச்சின்னமாக உள்ளது. இந்திய தொல்லியல் துறை மற்றும் ராய்காட் மேம்பாட்டு ஆணையம் இடையே 2017-ம் ஆண்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ராய்காட் கோட்டையின் சுற்றுப்பகுதியில் மேம்பாடு மற்றும் வசதிகளை வழங்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறை 1980-ம் ஆண்டு முதல் ராய்காட் கோட்டையின் பல்வேறு பகுதிகளில் பல அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. ராய்காட் கோட்டைக்குள் மகா தர்வாசா, சிம்மாசனா, நாகர்கானா, ஜகதேஷ்வர் கோயில், பஜார்பேட்டை, ஹதி டேங்க் சுவர்கள், பால்கி தர்வாசா, மீனா தர்வாசா, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சமாதி பகுதி மற்றும் அஷ்டபிரதன்வாடா போன்ற பல்வேறு கட்டமைப்புகளின் பாதுகாப்பு இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை, கழிவறை பிரிவு, குடிநீர், இருக்கைகள், அறிவிப்பு பலகைகள் மற்றும் கலாச்சார அறிவிப்பு பலகைகள் போன்ற பல்வேறு வசதிகளும் இந்திய தொல்லியல் துறையால் செய்யப்பட்டுள்ளன. ராய்காட் கோட்டையைப் பாதுகாப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் இது கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »