Tuesday, February 03 2026 | 05:42:26 PM
Breaking News

Tag Archives: Narendra Modi

திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் திரு ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர். சவுத்ரி தேவி லால் அவர்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார். இந்தத் துயரமான …

Read More »

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் மோடி உரையாடினார்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவுகூர்ந்த அவர்கள், இந்தியா, இங்கிலாந்து இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். காமன்வெல்த் நாடுகள், சமோவாவில் சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஆகியவை குறித்து அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பருவநிலை நடவடிக்கை, நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல அம்சங்கள் குறித்தும் விவாதித்தனர். இவற்றில் மன்னரின் நீடித்த ஆதரவு மற்றும் முன்முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை வாழ்த்துகளை பரஸ்பரம் இருவரும் பரிமாறிக் கொண்டனர். மன்னரின் சிறந்த ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Read More »

அந்தமான் நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும்: பிரதமர்

அந்தமான், நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். தங்களின் வேர்களோடு இணைந்திருக்கும் நாடுகள், வளர்ச்சியிலும் தேச நிர்மாணத்திலும் முன்னேறிச் செல்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஷிவ் அரூரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது: “அந்தமான், …

Read More »

நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஷூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார்

நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஸ்கூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன்  தொலைபேசி வாயிலாக  தொடர்பு கொண்டு பேசினார். இந்தியா, நெதர்லாந்து இடையேயான நம்பிக்கை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கை ஆகியவற்றை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினார்கள். தண்ணீர், வேளாண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். வர்த்தகம், பாதுகாப்பு, புதுமை, பசுமை ஹைட்ரஜன் மற்றும் குறைக்கடத்திகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டாண்மையை அதிகரிக்கவும், உத்திசார்ந்த பரிமாணத்தை வழங்கவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.  கல்வி, கலாச்சாரத் துறைகளில் மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகள், பரிமாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த பணியாற்ற உறுதிபூண்டனர்.  இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

Read More »

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘ஓராண்டு முடிவில் முன்னேற்றம்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட “ஓராண்டு முடிவில் முன்னேற்றம்” நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் …

Read More »

பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து கவலை தெரிவித்துள்ளார் பிரதமர்

பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவிற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்சுடன்  இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்றும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் தலைமையின் கீழ், பிரான்ஸ் இந்த துயரத்தை உறுதியுடன் சமாளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ்  தளத்தில்  அவர் பதிவிட்டிருப்பதாவது: “மயோட்டேவில் சிடோ புயலால் ஏற்பட்ட …

Read More »

வெற்றி தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

விஜய் திவஸ் என்றழைக்கப்படும் வெற்றி தினத்தை  முன்னிட்டு, துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது: “வெற்றி தினமான இன்று, 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம், தியாகங்களை நாம் போற்றுவோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவை நமது தேசத்தைப் பாதுகாத்து, நமக்குப் …

Read More »

ராஜஸ்தானில் டிசம்பர் 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 17 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். 7 மத்திய அரசு திட்டங்கள், 2 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 9 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், 9 மத்திய அரசு திட்டங்கள் …

Read More »

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதம் ஆக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையை நனவாக்க டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு

அரசின் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களின் கூட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல்,  பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2047-க்குள் இந்தியாவை “வளர்ச்சியடைந்த பாரதமாக ” மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையை  நனவாக்க அனைத்து அரசுத் துறைகளையும், மத்திய மற்றும் மாநில முயற்சிகளையும் “முழு அரசு” மற்றும் “முழு அறிவியல்” அணுகுமுறையுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.  புதுதில்லியில் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களின் மாதாந்திர கூட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார். இன்று புதுதில்லியில் நடைபெற்ற அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர கூட்டத்தின்போது, அறிவியல் முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் அந்தந்த மாநில அறிவியல் குழுக்கள் தீவிரமாக பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். அறிவியலில் கூட்டுறவு கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நீடித்த மற்றும் முற்போக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தற்போதைய திட்டங்களை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான எதிர்கால உத்திகளைப் பற்றி விவாதிப்பதற்கும் இந்த கூட்டம் ஒரு முக்கிய தளமாக செயல்பட்டது. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், மண்டல வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் தேசிய இலக்குகளுக்கு பங்களிப்பு செய்தல் ஆகியவற்றில் மாநில அறிவியல் கவுன்சில்களின் முக்கிய பங்கை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், அடிமட்ட கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள உள்ளூர் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கும் மாநிலங்கள் கிரியா ஊக்கிகளாக செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் அறிவியல் முகமைகளிலிருந்து வெளிவரும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சந்தை மூலதனமயமாக்கலின் முக்கியத்துவம் விவாதங்களின் மையமாக இருந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சுகாதாரம், வேளாண்மை மற்றும் பருவநிலை பின்னடைவு போன்ற துறைகளில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரசு ஆதரவு நிறுவனங்களிடமிருந்து அதிநவீன தீர்வுகளை அளவிட வேண்டியதன் அவசியத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். அறிவியல் சூழலில் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சியின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், ஒருங்கிணைந்த அறிவியல் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசின் முன்முயற்சிகளுடன் மாநிலங்கள் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை, பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் மற்றும் நாடு முழுவதும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் நன்மைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். “மாநில அறிவியல் கவுன்சில்கள் தொலைநோக்கை அடைவதில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நமது அறிவியல் வளங்களின் முழு திறனையும் பயன்படுத்த முடியும்” என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.  அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர கூட்டம், ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் வணிகமயமாக்கல் மூலம் வலுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மத்திய மற்றும் மாநில முயற்சிகளை ஒருங்கிணைத்தல், பொது-தனியார் கூட்டாண்மையை ஊக்குவித்தல் மற்றும் புதுமைகளை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முக்கியத்துவம், 2047 க்குள் வளர்ந்த இந்தியாவுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை அடைவதில் அறிவியலின் உருமாறும் பங்கை வலியுறுத்துகிறது. இந்த முழு அறிவியல் அணுகுமுறை தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. மூத்த செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட் தலைமை தாங்கினார்.

Read More »

சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினமான இன்று அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு. பட்டேலின் ஆளுமையும், பணியும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு குடிமக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:  “நாட்டின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளில் அவருக்கு மாபெரும் அஞ்சலி. வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதியை அடைவதற்கு அவரது ஆளுமையும் பணியும் நாட்டு மக்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்’’.

Read More »