Saturday, December 13 2025 | 01:00:21 AM
Breaking News

Tag Archives: National Consumer Day

தேசிய நுகர்வோர் தின கொண்டாட்டம் புதுதில்லியில் திரு பிரலாத் ஜோஷி தலைமையில் நாளை நடைபெறுகிறது

ஒவ்வொரு ஆண்டும், தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்று பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இந்த நாள் இந்தியாவில் நுகர்வோர் இயக்கத்தின் மாறிவரும் முக்கியத்துவத்தை குறிக்கிறது. இந்த நாளில்தான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நுகர்வோரின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், மோசடி,  சுரண்டல் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதிருந்து, வளர்ந்து வரும் சந்தைச் சூழலில் நுகர்வோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகள், போக்குகள் மற்றும் சவால்களை …

Read More »

டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினத்தன்று நுகர்வோரை பாதுகாக்க செயலிகள் மற்றும் தகவல் பலகையை நுகர்வோர் விவகாரத்துறை அறிமுகப்படுத்துகிறது

டிஜிட்டல் சகாப்தத்தில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மின் வணிகம் மற்றும் ஆன்லைன் சேவைகளில் உள்ள நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும் அரசின்  தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 2023 ஆம் ஆண்டில் இருண்ட வடிவங்களைத் தடுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அறிவித்தது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன் கீழ், ஏமாற்றும் வடிவமைப்பு வடிவங்கள்/கருமையான வடிவங்கள் போன்ற தவறான விளம்பரம்/நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என்று கூறப்பட்டதற்காக சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இ-காமர்ஸ் தளங்களில் இருண்ட வடிவங்களை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆதாரங்களுடன் நுகர்வோர் விவகாரத் துறை இப்போது செயல்பட்டு வருகிறது.  பிரின்ஸ் அமான் மற்றும் நமீத் மிஸ்ரா ஆகிய மாணவர்கள் மேற்கொண்ட தீவிர ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, மூன்று பயன்பாடுகள் குறியிடப்பட்டுள்ளன, அதாவது நுகர்வோர் விழிப்புணர்வு செயலிகள், நுகர்வோர் விழிப்பு தகவல் பலகை ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன.  ‘Jago Grahak Jago App,’ என்பது, நுகர்வோரின் ஆன்லைன் செயல்பாடுகளின் போது அனைத்து URLகள் பற்றிய அத்தியாவசிய மின்வணிகத் தகவலை வழங்குகிறது, ஏதேனும் URL பாதுகாப்பற்றதாக இருக்கலாம் மற்றும் எச்சரிக்கை தேவை என்றால் அவர்களை எச்சரிக்கும். இதற்கிடையில், ‘ஜாக்ரிதி ஆப்’, சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இருண்ட வடிவங்கள் இருப்பதாக சந்தேகிக்கும் URLகளைப் புகாரளிக்க பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அறிக்கைகள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் , சாத்தியமான தீர்வு மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காக புகார்களாக பதிவு செய்யப்படுகின்றன. கூடுதலாக, சிசிபிஏ ஆனது ‘ஜாக்ரிதி தகவல் பலகை ‘ மூலம் பலப்படுத்தப்படுகிறது.

Read More »

தேசிய நுகர்வோர் தினத்தன்று முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க உள்ளன

அஜியோ, ஜியோ மார்ட், நெட்மெட், பிக்பாஸ்கெட், டாடா க்ளிக், டாடா ஒனர எம்ஜி, ஸொமேட்டா, ஓலா (Ajio, JioMart, Netmed, BigBasket, Tata Cliq, Tata 1mg, Zomato) Ola போன்ற முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் 2024 டிசம்பர் 24 அன்று கொண்டாடப்படவுள்ள தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொள்கின்றன. பாதுகாப்பு உறுதிமொழி என்பது பாதுகாப்பற்ற, போலியான, இணக்கமற்ற தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கும்,  பாதுகாப்பிற்கு பொறுப்பான சட்டரீதியான …

Read More »