Sunday, December 07 2025 | 02:54:44 PM
Breaking News

Tag Archives: participates

உடல் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘மிதிவண்டியில் ஞாயிற்றுக் கிழமைகள்’ இயக்கம் – மும்பையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

ஃபிட் இந்தியா எனப்படும் உடல்திறன் இந்தியா இயக்கத்தின் முதன்மை நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சண்டே ஆன் சைக்கிள்’ (ஞாயிறுகளில் மிதிவண்டியில் பயணம்) என்ற இயக்கம் இன்று காலை (16.02.2025) மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்றது. சைக்கிள் ஓட்டுதல் மூலம்  ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாசுபாட்டிற்கான தீர்வையும் இது ஊக்குவிக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து ஆரோக்கிய நிபுணர்கள், பல்வேறு சைக்கிள் கிளப்புகள், தனிப்பட்ட உடற்பயிற்சி ஆர்வலர்கள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுநர்கள் இதில் பங்கேற்றனர். மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தலைமை வகித்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். உடல் பருமன் பிரச்சினையை, குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களிடையே உள்ள உடல் பருமன் பிரச்சினையை எதிர்த்துப் போராட பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் விடுத்த அழைப்பிற்கு ஏற்ப ‘ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கம்’ மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மாண்டவியா, நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நமது பிரதமரின் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற பார்வையை அடைய முடியும் என்றார். ‘சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமைகள்’ என்ற இந்த முன்முயற்சி, பூஜ்ஜிய கார்பன் தடம் கொண்ட போக்குவரத்து முறையை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், முடிந்தவரை சைக்கிள்களைப் பயன்படுத்துமாறு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தொடங்கப்பட்ட சண்டே ஆன் சைக்கிள் முன்முயற்சி ஏற்கனவே இந்தியா முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 16) இந்த நிகழ்வு 100 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது,

Read More »

பிட் மெஸ்ராவின் வைர விழா கொண்டாட்டத்தில் குடியரசு தலைவர் பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 15, 2025) ஜார்க்கண்ட் மாநிலம்  ராஞ்சியில் நடைபெற்ற பிட் மெஸ்ராவின் வைர விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதில் உரையாற்றிய  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நமது காலம் தொழில்நுட்ப யுகம் என்று கூறினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய முன்னேற்றங்கள் நாம் வாழும் முறையை மாற்றியுள்ளன. நேற்று வரை நினைத்துப் பார்க்க முடியாதது இன்று நிஜமாகிவிட்டது. வரும் …

Read More »

15வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

இன்று (ஜனவரி 25, 2025) புது தில்லியில் நடைபெற்ற 15-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதில் முன்னுதாரணமாக செயல்பட்ட மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். “இந்திய வாக்குகள் 2024: ஜனநாயகத்தின் சகாப்தம்’’ புத்தகத்தின் முதல் பிரதியையும் தலைமைத் தேர்தல் ஆணையர் …

Read More »

விஜயவாடாவில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20-வது நிறுவன தின விழா – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20-வது நிறுவன தின விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, திரு அமித் ஷா, சுமார் ரூ. 220 கோடி மதிப்புள்ள பல திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குநர் திரு பியூஷ் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, மீட்புக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வருகிறது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்) மூலம் பேரிடர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். களத்தில் திறம்பட பேரிடர் மேலாண்மையை உறுதி செய்ய, கிராம பஞ்சாயத்துகள், காவல் நிலையங்கள், தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கத்தினர் தொடங்கி மத்திய அரசு வரை பலரது தடையற்ற ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பேரிடர் மேலாண்மையின் அணுகுமுறை, வழிமுறைகள், நோக்கங்களில் புரட்சிகரமான மாற்றத்தை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு திரு அமித் ஷா நன்றி தெரிவித்தார்.  இழப்புகளைக் குறைப்பதுடன் பேரிடர்களின் போது பூஜ்ஜிய உயிரிழப்பு என்ற அடைவதற்கான தெளிவான இலக்குடன் அரசு செயல்படுவதாக அவர் கூறினார். தேசிய பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான இணக்கமான ஒத்துழைப்பை திரு அமித் ஷா பாராட்டினார். தேசிய பேரிடர் மீட்புப் படை இந்தியாவிற்குள் மட்டுமின்றி, உலக அளவிலும் குறிப்பிடத்தக்க நம்பகமான அமைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரும்போது, மக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியாக உணர்கிறார்கள் என்று அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு பெரிய புயல்களின் போது பூஜ்ஜிய உயிரிழப்புகள் என்ற இலக்கை தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். நேபாளம், இந்தோனேசியா, துருக்கி, மியான்மர், வியட்நாம் போன்ற பிற நாடுகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் முயற்சிகள் அந்தந்த நாடுகளின் தலைவர்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளன என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். இப்போது பேரிடர் மேலாண்மையில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆட்சியில், 14-வது நிதி ஆணையத்தில் பேரிடர் மேலாண்மைக்கான நிதி ரூ .61,000 கோடியாக உயர்த்தப்பட்டதில் இருந்து பேரிடர் மேலாண்மைக்கான மத்திய அரசின் உறுதிப்பாடு தெளிவாகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தனர். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புத் துறையில் இந்தியா உலகளவில் முன்னிலை வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா சிடிஆர்ஐ எனப்படும் பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவியது என்றும், இப்போது, சிடிஆர்ஐ-யின் கீழ் 48 நாடுகள் உறுப்பினர்களாக பணியாற்றி வருகின்றன என்றும் அவர் கூறினார். பேரிடர் மேலாண்மையில் அணுகுமுறை, செயல்முறை, குறிக்கோள் ஆகிய மூன்று அம்சங்களிலும் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பேரிடர் மேலாண்மைத் துறையில் மத்திய அரசு பல்வேறு செயலிகள், இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.

Read More »

பெண்கள், குழந்தைகளுக்கான மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சிந்தனை முகாம்: மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பங்கேற்பு

மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானின் உதய்பூரில் 2025 ஜனவரி 10 முதல் 12 தேதி வரை சிந்தனை முகாம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. பெண்கள், குழந்தைகள் நலன், மேம்பாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் …

Read More »

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின்(நிம்ஹான்ஸ்) பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்

பெங்களூருவில் உள்ள  தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் இன்று (ஜனவரி 3, 2025) நடைபெற்ற  பொன்விழா கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார் . நிகழ்ச்சியில் பேசிய அவர் , புதுமையான ஆராய்ச்சிகள், தனித்தன்மை வாய்ந்த நோயாளிகளை கவனிப்பதை உள்ளடக்கிய கடுமையான கல்வித் திட்டங்கள் ஆகியவை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தை முதன்மை நிறுவனமாக மாற்றியுள்ளன என்றார். சமூக அடிப்படையிலான மனநல சுகாதாரத்தில் …

Read More »

வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

புதுதில்லியில் உள்ள வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் இன்று (டிசம்பர் 23, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மருத்துவத் தொழில் என்பது வாழ்வாதாரம் மட்டுமின்றி, மக்களின் துன்பங்களைக் குறைப்பது, நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிப்பது, சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிப்பது ஆகிய புனிதமான கடமைகளையும் கொண்டுள்ள தொழிலாகும் என்று கூறினார். மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களாக, மக்களின் ஆரோக்கியத்தையும் …

Read More »