பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025-ஐ புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜனவரி 20 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த மைல்கல் நிகழ்வு இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாக இந்த மாநாடு அமைந்திருந்தது. இது தார்த்தி ஆபா பழங்குடி கிராம வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட …
Read More »மகா கும்பமேளா 2025 ஐ உலகளாவிய சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சிகளை சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டது
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், மகா கும்பமேளா 2025-ஐஆன்மிகக் கூட்டங்களுக்கு மட்டுமின்றி, உலகளாவிய சுற்றுலாவிற்கும் ஒரு முக்கிய நிகழ்வாக மாற்ற உள்ளது. இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாடும் வகையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் உள்ள நான்கு இடங்களில் ஒன்றில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மதம் …
Read More »புத்தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், புத்தொழில் கொள்கை அமைப்புடன் டிபிஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வியாழக்கிழமை அன்று இந்தியாவின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற புத்தொழில் கொள்கை அமைப்புடன் (எஸ்பிஎஃப்) வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புத்தொழில் வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜனவரி 15-16 தேதிகளில் பாரத் மண்டபத்தில் நிறுவனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. இந்த நிகழ்வு டிபிஐஐடி, எஸ்பிஎஃப் இடையே …
Read More »உயிரி எரிபொருட்களை ஊக்குவிப்பதற்கான அரசின் முன்முயற்சிகள்
2014-ம் ஆண்டு முதல், பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரித்தல், நிர்வகிக்கப்பட்ட விலை வழிமுறை, எத்தனால் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைத்தது, எத்தனால் ஆலைகளுடன் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள், பயோடீசல் விற்பனைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, பயோடீசல் கொள்முதலுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தல், டீசலில் பயோடீசலை 5 சதவீதம் கலப்பதை கட்டாயமாக்குவது தொடர்பாக உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தம் போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அழுத்தப்பட்ட உயிரி …
Read More »உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை ஊக்குவிக்க ‘ஜல்வாஹக்’ திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது
தேசிய நீர்வழிகள் 1 (கங்கை நதி), தேசிய நீர்வழிகள் 2 (பிரம்மபுத்திரா நதி), தேசிய நீர்வழிகள் 16 (பராக் நதி) வழியாக நீண்ட தூர சரக்குகளின் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சரக்கு மேம்பாட்டுக்கான ‘ஜல்வஹக்’ என்ற முக்கிய கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று வெளியிட்டார். மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், எம்வி ஏஏஐ, எம்வி ஹோமி பாபா மற்றும் எம்வி திரிசூல் ஆகிய சரக்குக் கப்பல்களையும் அஜய் மற்றும் திகு ஆகிய இரண்டு தளவாடப் படகுகளையும் புதுதில்லி அரசு படகுத்துறையிலிருந்து இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொல்கத்தா – பாட்னா – வாரணாசி – பாட்னா – கொல்கத்தா இடையே ஒரு வழியாகவும், கொல்கத்தா மற்றும் குவஹாத்தியில் உள்ள பாண்டு இடையேயும் இந்தோ-வங்கதேச நெறிமுறை பாதை (ஐபிபிஆர்) வழியாகவும் குறிப்பிட்ட நாள் திட்டமிடப்பட்ட பாய்மரப் படகோட்ட சேவை இயக்கப்படும். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சோனோவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், நமது வளமான உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் மிகப்பெரிய திறனை உணர அரசு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, திறமையான போக்குவரத்து முறை என்ற அனுகூலத்தைக் கொண்டு, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, நீர்வழிகள் வழியாக சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். ஜல்வாஹக் திட்டம் ஆகியவற்றில் நீண்ட தூர சரக்குகளை ஊக்குவிப்பதுடன், நேர்மறையான பொருளாதார மதிப்பு முன்மொழிவுடன் நீர்வழிகள் வழியாக சரக்குகளின் இயக்கத்தை ஆராய வர்த்தக நலன்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், கொல்கத்தாவிலிருந்து தொடங்கும் வழக்கமான அட்டவணைப்படுத்தப்பட்ட சரக்கு சேவை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரக்குகளை கொண்டு சென்று வழங்குவதை உறுதி செய்யும். இது ஒரு திறமையான, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான போக்குவரத்து முறையில் சரக்குகளை வழக்கமான இயக்கத்திற்கு தேசிய நீர்வழிகள் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை நமது பயனர்களிடையே உருவாக்கும். இந்த ஊக்கத் திட்டத்துடன் நமது கப்பல் ஆபரேட்டர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் சரக்குகளை வழங்குவதன் மூலம் நமது வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தியா வளர்ச்சியடைந்த பாரதமாக மாறுவதை நோக்கி பயணிக்கும்போது போக்குவரத்து வழியாக மாற்றத்திற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வைக்கு இது அர்த்தம் சேர்க்கிறது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், வளமான நீர்வழிகள் 2014 முதல் புத்துயிர் பெற்று வருகின்றன. நீர்வழிகளை புனரமைப்பதில் தொடர்ச்சியான முதலீட்டுடன், இந்தத் திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்குள் ரூ .95.4 கோடி முதலீட்டில் எயல்படுத்தப்படும். 2014 வரை நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட நீல பொருளாதாரத்தின் மதிப்பை திறக்கவும் இது ஒரு தீவிர முயற்சியாகும். புத்துயிர் பெற்ற தேசிய நீர்வழிகள் அதன் செயல்திறனை கணிசமாக நகர்த்தியுள்ளன, ஏனெனில் 2013-14 ஆம் ஆண்டில் 18.07 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகளின் மொத்த அளவு 2023-24 ஆம் ஆண்டில் 132.89 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது, இது 700% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நீர்வழிகள் மூலம் 200 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கொண்டு செல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2047-ம் ஆண்டில், சரக்கு போக்குவரத்துக்கு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிகளின் வளர்ச்சியில் நம்பிக்கையுடன், 500 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், “நீர்வழிப் போக்குவரத்தை, குறிப்பாக வங்காளத்தைப் பொறுத்தவரை, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். பிரதமர் திரு. நரேந்திர மோடி யின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், நீர்வழிப் போக்குவரத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம், நீர்வழித் துறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவில், சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பத்தை ஏற்படுத்தும். சிக்கனமான, பயனுள்ள, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை சரக்கு மற்றும் பயணிகள் இயக்கத்தில் ஒரு புதிய காட்சியை உறுதியளிக்கிறது என்று தெரிவித்தார்.
Read More »மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்
தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்கு பார்வையுடன் இணைந்த உள்ளூர் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் மின்சார வாகன சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் கனரக தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது: மின்சார வாகனப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் நாட்டில் புதைபடிம எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டம், 2024 செப்டம்பர் 29-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 01.04.2024 முதல் 31.03.2026 வரையிலான …
Read More »