Monday, December 08 2025 | 05:52:28 AM
Breaking News

பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

Connect us on:

கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர்  திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில்நாடாளுமன்ற உறுப்பினர்கள்அரசு அதிகாரிகள்இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை இது பிரதிபலித்தது.

பிரதமர் தமது உரையில்சுதந்திரத்திற்கான பகிரப்பட்ட போராட்டங்கள்ஜனநாயகம்அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று பிணைப்புகளை எடுத்துரைத்தார். தமக்கு வழங்கப்பட்ட தேசிய விருதிற்காக கானா அதிபர் திரு ஜான் டிராமணி மகாமா மற்றும் கானா மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இது நீடித்த நட்பின் சின்னம் என்று அவர் கூறினார். கானாவின் சிறந்த தலைவர் டாக்டர் குவாமே நக்ருமாவின் பங்களிப்புகளை பிரதமர் எடுத்துரைத்தார். ஒற்றுமைஅமைதிநீதி ஆகியவற்றின் லட்சியங்களின்  வலுவான அடித்தளமாக இருதரப்பு ஒத்துழைப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.

நம்மை ஒன்றிணைக்கும் சக்திகள் உள்ளார்ந்தவை என்று ஒருமுறை டாக்டர் நக்ருமா கூறியதை பிரதமர் மேற்கோள் காட்டினார்.  ஜனநாயக அமைப்புகளின் நீண்டகால தாக்கம் குறித்து பேசிய பிரதமர்ஜனநாயக விழுமியங்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். ஜனநாயகத்தின் தாயாக இந்தியா அதன் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜனநாயக நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிட்ட பிரதமர்இந்தியாவில் ஜனநாயகத்தின் ஆழமானதுடிப்பான வேர்கள் உள்ளதை எடுத்துரைத்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையும் ஜனநாயக வலிமையும்கானாவின் ஜனநாயகப் பயணத்திலும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். பருவநிலை மாற்றம்பயங்கரவாதம்தொற்றுநோய்கள்இணையதள அச்சுறுத்தல்கள் போன்ற உலகளாவிய சவால்களையும் அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய நிர்வாகத்தில் உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  இந்தச் சூழலில்இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ காலத்தில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

கானாவின் துடிப்பான நாடாளுமன்ற அமைப்பைப் பாராட்டிய பிரதமர்இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பரிமாற்றங்கள் தொடர்பாக திருப்தி தெரிவித்தார். இந்தச் சூழலில்கானா-இந்தியா நாடாளுமன்ற நட்புறவு சங்கம் நிறுவப்பட்டதை அவர் வரவேற்றார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான இந்திய மக்களின் உறுதியை வெளிப்படுத்திய பிரதமர்கானாவின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு ஆதரவு அளிப்பதிலும் அந்நாட்டுடன் இந்தியா துணை நிற்கும் என்று குறிப்பிட்டார்.

About Matribhumi Samachar

Check Also

ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்

இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இன்று மாலையும் நாளையும் …