Friday, December 05 2025 | 06:10:03 PM
Breaking News

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி: புதுவைப் பல்கலைக்கழகத்தில் தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி

Connect us on:

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மக்களிடையே தேசபக்தி உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுவைப் பல்கலைக்கழகம்  2025 ஆகஸ்ட் 13 அன்று தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி நிகழ்வை நடத்தியது. மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள்  என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 

கையில் தேசியக் கொடி ஏந்தி, ஒற்றுமை, நேர்மை மற்றும் மக்களின் ஒட்டுமொத்த வலிமையை குறிக்கும்  வகையில் இந்த மனிதச் சங்கிலி அமைந்தது.

இந்நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு தேசியச் சின்னங்களின் முக்கியத்துவத்தையும், மக்கள் பற்றிய சிந்தனையை வளர்ப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பையும் வலியுறுத்தினார். சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகிய இலட்சியங்களை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு இளைஞர்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் அரசியல் சாசன கொள்கைகளை மதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக்கபூர்வ பங்களிப்பு செய்வதற்கு பங்கேற்பாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5ஜி நெட்வொர்க்குகள் தொடங்கப்பட்டுள்ளன.  தற்போது, நாட்டின் 99.9 சதவீத மாவட்டங்களில் 5ஜி …