Friday, December 26 2025 | 12:53:29 AM
Breaking News

இந்திய குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிட்ட பயிற்சி நிறுவனம் ஒன்றிற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது

Connect us on:

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வு, 2022 மற்றும் 2023 ஆகியவற்றின் முடிவுகள் தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, விஷன் ஐஏஎஸ் (அஜய்விஷன் எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட்) என்ற நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அந்த நிறுவனம், “சிஎஸ்இ 2023-ல் முதல் 10 இடங்களில் 7 பேர் மற்றும் முதல் 100 இடங்களில் 79 பேர் தேர்வு”, “சிஎஸ்இ 2022-ல் முதல் 50 இடங்களில் 39 பேர் தேர்வு” போன்று விளம்பரப்படுத்தியதுடன், அதில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் தரவரிசைகளையும் குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பான ஆய்வுக்குப் பிறகு, திரு சுபம் குமார் (ஏஐஆர் 1, யுபிஎஸ்சி சிஎஸ்இ 2020) தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பாடத்திட்டமான ஜிஎஸ் ஃபவுண்டேஷன் பிரிவு (வகுப்பறை மாணவர்) குறித்த தகவலை அந்த நிறுவனம் வெளிப்படுத்தியிருந்தாலும், அதே இணையதளப் பக்கத்தில் அவருடன் இதர வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள், புகைப்படங்கள், தேர்ந்தெடுத்த பாடத்திட்டங்கள் குறித்த தகவல்களை மறைத்து இருந்தது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் கண்டறியப்பட்டது.

இந்த விளம்பரம் எஞ்சியுள்ள அனைத்து மாணவர்களும் ஜிஎஸ்  ஃபவுண்டேஷன் பிரிவு வகுப்பறைப் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்தனர் என்ற ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கியது. ஆனால் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேலும், அதே விளம்பரத்தில், அந்த நிறுவனம் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் கொண்ட தனது “ஃபவுண்டேஷன் பாடத்திட்டத்தை” விளம்பரப்படுத்தியது. இத்தகைய செயல், தவறான, மிகைப்படுத்தப்பட்ட மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களின்  அடிப்படையில் மாணவர்களை அந்த நிறுவனத்தின் திட்டங்களில் சேரத் தூண்டியது.

About Matribhumi Samachar

Check Also

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சார்பில் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், இன்று (21.12.2025) உலக தியான தினத்தைக் கொண்டாடியது. இதனையொட்டி, புகழ்பெற்ற அறிஞர்கள், யோகா பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற சிறப்பு தியான அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக அளவில் அதிகரித்து வரும் மன அழுத்தத்தை நீக்குவதில் பழங்கால யோக ஞானம், நவீன மருத்துவ அறிவியல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் காஷிநாத் சமகாந்தி, இன்றைய போட்டி நிறைந்த உலகில் தியானத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீத மன அழுத்தம் தொழில் சார்ந்ததாக உள்ளது என்று அவர் கூறினார்.  புது தில்லியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்த சுவாமி முக்திமாயனந்தா பேசுகையில் நிலையான அமைதிக்காக தியானப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  கர்வம், பொறாமை, அளவுக்கு அதிகமான ஆசைகள் போன்றவற்றை வெற்றி கொள்ள, முறையான பயிற்சிகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார் . பல்வேறு தியான நுட்பங்களின் நடைமுறை செயல் விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. “ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான இந்தியா” என்ற தொலைநோக்கு பார்வையை மேம்படுத்துவதற்காக அன்றாட வாழ்வில் தியானத்தை இணைப்பதற்கான உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவடைந்தது. யோகா, தியான ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒவ்வொரு தனிநபரும் உயர்ந்த உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், …