Wednesday, January 07 2026 | 11:06:40 PM
Breaking News

கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தோனேசிய கடற்படை குழுவுக்கு இந்தியா வரவேற்பு

Connect us on:

குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியா வந்துள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன், அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் முகமது அலியுடன் கூடிய உயர்நிலைக்குழுவும் வந்துள்ளது.

தனது இந்தப் பயணத்தின் போது, இந்தோனேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது அலி, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியை சந்தித்து இருநாடுகளுக்கிடையேயான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இருநாடுகளைச் சேர்ந்த கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி, செயல்முறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, கடற்கொள்ளை, கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட கடல்சார் சவால்களை எதிர்கொள்வது குறித்து இரு நாட்டு கடற்படைத் தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

பிராந்திய ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒருங்கிணைந்த  தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்துவது ஆயுதங்கள், மின்னணு அமைப்புகள், பொறியியல் தொழில் நுட்பங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

அந்நாட்டு கடற்படை தளபதி அட்மிரல் முகமது அலி பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்  நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பாதுகாப்பு, உத்திசார் செயல்பாடுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பரஸ்பரம் இருதலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கடல்சார் பாதுகாப்பில், அந்நாட்டு கடற்படை தளபதி அட்மிரல் முகமது அலியின் ஈடுபாடு, பிராந்திய ஒத்துழைப்பு,  அமைதி ஆகியவை குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

கிம்பர்லி செயல்முறையின் மதிப்புமிக்க தலைமைப் பொறுப்பை 2026 ஜனவரி 1 முதல் இந்தியா ஏற்கிறது

கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக …