திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4, 2025 அன்று சென்னையில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் திருமதி ஜி.அகிலா அறிவித்தார். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம்) முன்முயற்சியின் காரணமாக இந்த முக்கிய நிகழ்வு நடத்தப்பட உள்ளது. திருச்சியின் பிராந்திய பொறியியல் கல்லூரி/ தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளமான மாண்பைக் கொண்டாடுவதற்காக, உலகெங்கிலும் உள்ள திருச்சி தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கும். முந்தைய உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது. 930 க்கும் மேற்பட்ட தலைமை …
Read More »இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் “பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம், ஆய்வகச் சேவைகளின் நலன், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம்,” ” பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு ” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்னையில் இன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய விஞ்ஞானி-F/மூத்த இயக்குனர், தலைவர் (சென்னை கிளை அலுவலகம்); ஸ்ரீமதி.ஜி.பவானி, தலைமை விருந்தினர், பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோரை வரவேற்றார். இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு பிஐஎஸ் ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறினார். மேலும் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள் , வரைவுகளை உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர், …
Read More »சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025 ஜனவரி 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது
(சென்னை ஐஐடி), நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா திருவிழாவின் 26-வது ஆண்டு நிகழ்வை 2025-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த உள்ளது. முற்றிலும் மாணவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வில் சென்னை ஐஐடி-ன் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்ட இந்த விழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. தொடர்ச்சியாக 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 70,000 பேர் வரை இந்நிகழ்ச்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் வாயிலாக இந்த அறிவியல்- தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது. இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (30 டிசம்பர் 2024) சாஸ்த்ரா 2025 நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “சாஸ்த்ரா போன்ற மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், மாணவர்களிடையே நிர்வாகத் திறன், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, பொது நோக்கத்திற்காக பெரிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் போன்ற உயர் பண்புகளை வளர்க்கச் செய்கிறது. சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் தங்களது திறன்களை வெளிக்கொண்டு வர உதவுகிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி, தலைசிறந்த முக்கிய பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் கூறினார். சாஸ்த்ரா 2025-ன் விழாவின் பங்கேற்பாளர்களில் ஒருவரான தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக் கழக இயக்குநர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறும்போது, “சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா 2025 நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது. தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல் போன்றவற்றில் அன்றாட சவால்களுக்குத் தீர்வுகாண இளைஞர்களை ஊக்குவிப்பதிலும், கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதிலும் இந்த இரு கல்வி நிறுவனங்களின் இலக்கும் ஒரே மாதிரியாக உள்ளது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், நீடித்த கடல்சார் தொழில்நுட்பங்கள் போன்ற அதிநவீன துறைகளில் கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கல்வி, தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான அறிவு பரிமாற்றத்திற்கான தனித்துவமிக்க தளத்தை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.
Read More »எஃகு அமைச்சகம் 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்
தொழில்துறையின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கி முன்னேறவும் எஃகு தொழில்துறைக்கு உதவுவதற்காக ரூ.15,000 கோடி மதிப்பில் ‘பசுமை எஃகு இயக்கத்தை’ எஃகு அமைச்சகம் உருவாக்கி வருகிறது. பசுமை எஃகுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான ஊக்கத்தொகை மற்றும் அரசு நிறுவனங்கள் கட்டாயமாக பசுமை எஃகு வாங்க வேண்டும் ஆகியவை இந்த இயக்கத்தில் அடங்கும். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி …
Read More »பணிபுரிவதற்கு சிறந்த இடமாக செயில் நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாகவும் சான்றளிக்கப்பட்டுள்ளது
இந்திய எஃகு நிறுவனம் லிமிடெட்டுக்கு 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்திற்கு பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த இடத்திற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழ் இந்தியாவில் உள்ள பணிபுரிவதற்கு சிறந்த இடம் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய எஃகு நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்துள்ள இரண்டாவது சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலகட்டத்திற்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக …
Read More »அயனிகளின் இருப்பில் லைசோசைம் இரட்டை அடுக்குகளை உருவாக்குவது உட்செருகப்பட்ட உள்ளுறுப்புகளில் உயிரிப் புரத கிரகிப்பைப் பிரதிபலிக்கும்
உயிரினங்களில் உண்மையான புரத உறிஞ்சுதலைப் பின்பற்றுவதற்காக அறை வெப்பநிலை கரைசலில் இருந்து ஹைட்ரோஃபிலிக் மற்றும் ஹைட்ரோபோபிக் சிலிக்கான் மேற்பரப்பில் லைசோசைம் புரத மூலக்கூறுகளின் இரட்டை அடுக்குகளை ஓர் ஆராய்ச்சி குழு நிலைப்படுத்தியது. இது உட்செருகப்பட்ட உள்ளுறுப்புகள் மற்றும் உயிரிப் பொருட்களில் அயனி-சமன்பாடு புரத உறிஞ்சுதல்களின் உண்மையான உயிரியல் செயல்முறைகளைப் பிரதிபலிக்க உதவும். லைசோசைம் என்பது ஒரு வகை புரதமாகும், இது நான்கு டைசல் பைடு பிணைப்புகளைக் கொண்டுள்ளது. மனிதக் கண்ணீர், வியர்வை, பால் மற்றும் …
Read More »நிஃப்டெம்-கே: 2024- உணவு கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு
தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிஃப்டெம்-குண்ட்லி) 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இது இந்த ஆண்டில் உணவு பதப்படுத்தும் துறையை முன்னேற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முதல் உலகளாவிய ஒத்துழைப்புகளை ஊக்குவிப்பது வரை, இந்த ஆண்டு நிறுவனத்திற்கு மறக்கமுடியாத ஆண்டாகும். உலக உணவு இந்தியா 2024-ல் ,தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம்-குண்ட்லி பங்கேற்றது இந்த ஆண்டின் சிறப்பம்சமாகும். உணவு …
Read More »திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4, 2025 அன்று சென்னையில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் திருமதி ஜி.அகிலா அறிவித்தார். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம்) முன்முயற்சியின் காரணமாக இந்த முக்கிய நிகழ்வு நடத்தப்பட உள்ளது. திருச்சியின் பிராந்திய பொறியியல் கல்லூரி/ தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளமான மாண்பைக் கொண்டாடுவதற்காக, உலகெங்கிலும் உள்ள திருச்சி தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கும். முந்தைய உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது. 930 க்கும் மேற்பட்ட தலைமை …
Read More »புவி அறிவியல் அமைச்சகம்: 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்
2021-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,797 கோடி ரூபாய் செலவில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் “பிரித்வி விக்யான்” திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 1.வளிமண்டலம், பருவநிலை மாறுதல் ஆராய்ச்சி-மாதிரி கூர் கவனிப்பு அமைப்புகள்& சேவைகள் 2.பெருங்கடல் சேவைகள், மாதிரி செயலிகள், மூலவளங்கள் மற்றும் தொழில்நுட்பம் 3.துருவ அறிவியல் மற்றும் கிரையோஸ்பியர் ஆராய்ச்சி 4.நில அதிர்வு மற்றும் புவி அறிவியல் 5. ஆராய்ச்சி, …
Read More »எல்லைப்புற பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவை; பாதுகாப்பு அமைச்சர்
வரும் காலங்களில் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது காலத்தின் தேவையாகும். மேலும் எதிர்கால சவால்களை சமாளிக்க ஏதுவாக ராணுவ வீரர்களை தயார்படுத்துவதில் ராணுவ பயிற்சி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று மத்தியப் பிரதேச மாநிலம் மோவில் உள்ள ராணுவப் போர் பயிற்சிக் கல்லூரியில் (ஏ.டபிள்யூ.சி) அதிகாரிகளிடையே உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். போர் முறைகளில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்து எடுத்துரைத்த …
Read More »
Matribhumi Samachar Tamil