பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958, பிரிவு 4 எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடத்தையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க வழிவகை செய்கிறது. தொல்லியல், வரலாற்று அல்லது கட்டடக்கலை முக்கியத்துவத்தைப் பொறுத்து, எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடம் மற்றும் எச்சங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அரசு அறிவிக்க இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இந்திய அரசிதழில் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகளை வரவேற்கும் இரண்டு மாத அறிவிப்பு …
Read More »‘இந்தியாவைக் கொண்டாடுதல்’ தலைப்பிலான அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டி
கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) 7 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ‘இந்தியாவைக் கொண்டாடுதல்’ என்ற தலைப்பில் அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கான பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் இன்டாக் நிறுவனத்தின் பாரம்பரிய கல்வி மற்றும் தொடர்பு பிரிவு இதனை நடத்தி வருகிறது. 100 இன்டாக் பிரிவுகள் அந்தந்த நகரங்கள் / பிராந்தியத்தில் இந்த போட்டியை நடத்துகின்றன, இது மார்ச் 2025-ல் முடிவடையும். இப்போட்டி புதுதில்லியில் 71, இன்டாக், லோடி எஸ்டேட்டில் 2024 …
Read More »நீர்மூழ்கி தொலைத்தொடர்பு கேபிள்களின் தாங்குதிறனை வலுப்படுத்த சர்வதேச ஆலோசனை அமைப்பு
நீர்மூழ்கி தொலைத்தொடர்பு கேபிள்கள் உலகளாவிய தகவல்தொடர்புகளின் முதுகெலும்பாகும். இது சுமார் 99% இணைய போக்குவரத்தைக் கொண்டுள்ளது. வர்த்தகம், நிதி, அரசு நடவடிக்கைகள், டிஜிட்டல் சுகாதாரம், கல்வி போன்ற முக்கியமான சேவைகளை வலுப்படுத்த இது உதவுகிறது. இந்த கேபிள்கள் சேதமடையக் கூடியவை. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 150 முதல் 200 வரை பிழைகள் நிகழ்கின்றன. மீன்பிடித்தல், நங்கூரமிடுதல், இயற்கை அபாயங்கள், உபகரணங்கள் செயலிழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் கேபிள்களுக்கு சேதம் ஏற்படுகிறது. வளர்ந்து …
Read More »மாஸ்கோவில் நடைபெற்ற விடிபி ரஷ்ய அழைப்பின் முதலீட்டு மன்றத்தில் பிரதமர் மோடியின் ” முதலில் இந்தியா” கொள்கை மற்றும் “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சிக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
15-வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் “இந்தியா முதலில்” கொள்கை மற்றும் “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சி ஆகியவற்றை அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அதிபர் புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட “இந்தியாவில் தயாரிப்போம்” …
Read More »குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொழில் வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்தவை, தொழில் நகரங்களில் வர்த்தகங்களை மேம்படுத்த சலுகையில் நிலம் ஒதுக்க விருப்பம்: திரு பியூஷ் கோயல்
நாடு முழுவதும் 20 நகரங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலங்களை ஒதுக்க அரசு தயாராக உள்ளது. எம்.எஸ்.எம்.இ.க்கள் பெரிய வணிகங்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்தவையாகும். புதுதில்லியில் இன்று நடைபெற்ற அசோசெம்: பாரத் @100 உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தங்கள் சூழல் அமைப்பில் பெரிய தொழில்களை ஆதரிப்பதில் முக்கியமானவையாக …
Read More »இந்தியாவின் அணுமின் நிலையப் பாதுகாப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது: டாக்டர் ஜிதேந்திர சிங்
கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சர்வதேச மேற்பார்வையுடன் இந்தியாவின் அணுமின் நிலையங்கள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவையாக உள்ளன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று உறுதியளித்தார். கேள்வி நேரத்தின் போது அணுசக்தி பாதுகாப்பு …
Read More »நாடாளுமன்ற கேள்வி: சந்திரயான்
திரு இரண்ணா கடாடி இன்று கேட்ட “சந்திரயான்” தொடர்பான கேள்வி எண் 120 க்கு பதிலளித்த அறிக்கை மாநிலங்களவையில் வைக்கப்பட்டது. இஸ்ரோ மூன்று சந்திரயான் பயணங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது மற்றும் சந்திரயான் -3 மிஷன் சந்திரனில் வெற்றிகரமாக பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை விளைவித்தது. 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்தியா தரையிறங்கும் இலக்கை அடைவதற்கான திறனை உருவாக்க தொடர்ச்சியான சந்திரயான் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக, சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய …
Read More »நாடாளுமன்ற கேள்வி: ககன்யான் திட்டத்தின் நிலை
ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் விவரம் வருமாறு: மனித ரேட்டட் ஏவு வாகனம்: ஏவு வாகனத்தின் மனித மதிப்பீட்டை நோக்கிய திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் இயந்திரம் உள்ளிட்ட உந்துவிசை அமைப்புகளின் நிலைகளின் தரை சோதனை நிறைவடைந்துள்ளது. பயணிகள் மாட்யூல் எஸ்கேப் சிஸ்டம்: ஐந்து வகையான பயணிகள் எஸ்கேப் சிஸ்டம் சாலிட் மோட்டார்களின் வடிவமைப்பு மற்றும் உணர்தல் முடிந்தது. அனைத்து ஐந்து வகையான திட மோட்டார்களின் நிலையான சோதனை முடிந்தது. பயணிகள் …
Read More »2024 ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
2024 ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது: “நமது ஹாக்கி சாம்பியன்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்! ஜூனியர் ஆசிய கோப்பை 2024 பட்டத்தை நமது ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணி வென்றது, இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். வீரர்களின் நிகரற்ற திறமை, அசைக்க முடியாத மன உறுதி மற்றும் நம்பமுடியாத குழுப்பணி ஆகியவை …
Read More »ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாகாலாந்து முதலமைச்சர் …
Read More »
Matribhumi Samachar Tamil