சீனாவின் கிங்டாவோ நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையில் உள்ள விரிவான வரையறைகளை எடுத்துரைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர், பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு இயக்குநர் …
Read More »யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழுக் கூட்டம் – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்
யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (26.06.2025) டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன், யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், நாட்டில் யானைகளின் …
Read More »‘ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ₹9 கோடி மதிப்பிலான 1,115 மெட்ரிக் டன் பொருட்களை ஏற்றிச் சென்ற 39 கொள்கலன்களை டிஆர்ஐ பறிமுதல் செய்துள்ளது
நாட்டின் புலனாய்வு துறைகள் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) “ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்” என்ற பெயரில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மூன்றாம் நாடுகள் வழியாக, அதாவது துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் வழியாக அனுப்பப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் இதுவரை ₹9 கோடி மதிப்பிலான 1,115 மெட்ரிக் …
Read More »மத்திய பொதுப்பணித்துறையின் தொழிலாளர் திறன் பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் – மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் வழங்கினார்
மத்திய பொதுப்பணித் துறை புது தில்லி சேவா நகரில் கஸ்தூர்பா நகரில் குடியிருப்பு விடுதியில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் திறன் சான்றிதழ் வழங்கும் விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் கலந்து கொண்டார். மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறன் …
Read More »அவசரநிலை பிரகடனம் என்பது ஜனநாயகத்தை அழிக்கும் பூகம்பத்திற்கு சற்றும் குறைவானதல்ல- குடியரசு துணைத்தலைவர்
50 ஆண்டுகளுக்கு முன் இந்த நாள் மிகவும் பழமையான, மிகப்பெரிய, துடிப்புமிக்க ஜனநாயகம் பிரச்சனைக்கு ஆட்பட்டது. அது ஜனநாயகத்தை அழிக்கும் பூகம்பத்திற்கு சற்றும் குறைவானதல்ல. அதுதான் அவசர நிலை பிரகடனம். அந்த இரவு இருளானது. அமைச்சரவை ஓரம் கட்டப்பட்டது. உயர்நீதி மன்றத்தின் எதிர்மறை உத்தரவை எதிர்கொண்ட அன்றைய பிரதமர் சொந்த ஆதாயத்திற்காக ஒட்டுமொத்த தேசத்தையும் புறக்கணித்தார். அரசியலமைப்பை நசுக்கிய குடியரசுத் தலைவர் அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து சுமார் …
Read More »அரசியலமைப்பு படுகொலை தினத்தன்று ஜனநாயக பாதுகாவலர்களுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 50-வது ஆண்டினைக் குறிக்கும் நாளான இன்று, நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இருந்த காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதியுடன் நின்ற எண்ணற்ற இந்தியர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அரசியல் சட்ட மாண்புகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்ட, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்ட, எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள், …
Read More »போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச போதைபொருள் ஒழிப்புத் தினத்தை நாளை (ஜூன் 26-ம் தேதி) மத்திய அரசு கடைப்பிடிக்கிறது
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நாளை (ஜூன் 26-ம் தேதி) புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சர்வதேச நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி.எல். வர்மா தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இதில் துறை சார்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் …
Read More »அரசு இணைய சந்தையில் கொள்முதல் குறித்த பயிலரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று சென்னையில் நடத்தியது
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அரசு இணைய சந்தையில் (GeM) எவ்வாறு கொள்முதல் செய்வது என்பது குறித்த பயிலரங்கை தகவல் மாளிகையில் உள்ள அதன் அலுவலகத்தில் இன்று (25.06.2025) நடத்தியது. இந்தப் பயிலரங்கில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம், டிடி தமிழ், ஆகாஷ்வாணி, வெளியீட்டுப் பிரிவு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு மத்திய அரசின் கொள்முதல் தளமான https://gem.gov.in/ ஜெம்(GeM)-ல் …
Read More »அவசரநிலை பிரகடனத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது குறித்த தீர்மானத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைத் தகர்க்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கத் தீர்மானிக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு நவநிர்மாண் இயக்கம், சம்பூர்ண கிராந்தி இயக்கம் ஆகியவற்றுக்கும் தடை விதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, பின்னர் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பல …
Read More »ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த நிறுவன ஒருங்கிணைப்பு, நிதி பொறுப்புடைமை மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆளுகையை மக்களவை தலைவர் வலியுறுத்தியுள்ளார்
மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அன்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைத்த நாடாளுமன்றம் மற்றும் மாநில, யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளின் மதிப்பீட்டுக் குழுக்களின் தலைவர்களின் இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது. இந்நிறைவு அமர்வில் உரையாற்றிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த நிறுவன ஒருங்கிணைப்பை வளர்ப்பது, நிதி பொறுப்புடைமையை மேம்படுத்துவது மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆளுகையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். …
Read More »
Matribhumi Samachar Tamil