Saturday, March 28 2026 | 11:52:25 PM
Breaking News

Matribhumi Samachar

தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் புவிசார் தகவல் குறித்த தேசிய பயிலரங்கை நடத்துகிறது

தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் புவிசார் தகவல் குறித்த தேசிய பயிலரங்கை நடத்துகிறது. நேற்று (27.01.2025) தொடங்கிய இந்தப் பயிலரங்கு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க நிலை பயிற்சியாளர்களுக்கான இந்தப் பயிலரங்கு புவிப்பரப்பு தொழில்நுட்பங்களின் அடிப்படைகளை அறிமுகம் செய்தல், தொலை உணர்வு, புவிசார் வரைபட தகவல் முறை, உலகளாவிய நிலப்பகுதி வழிகாட்டுதல் செயற்கைக் கோள் நடைமுறைகள், ட்ரோன் மூலம் ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.    இந்தப் …

Read More »

சென்னையில் 14-வது மாநில அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்துடன் இணைந்து சென்னையில் 14-வது மாநில அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி “TANAPEX 2025” ஐ ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை, செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தின் சமுதாயக் கூடத்தில் நடத்துகிறது. “அணிவகுக்கும் அஞ்சல் தலைகள், அணைக்கும் நினைவலைகள்” என்பது இந்தக் கண்காட்சியின் கருப்பொருளாகும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு என்.முருகானந்தம், 29-ம் தேதி,   தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரி திருமதி மாரியம்மா தாமஸ் முன்னிலையில், “டான்பெக்ஸ் 2025” அஞ்சல் தலை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சியின் …

Read More »

மதுரையில் வருமான வரி செலுத்துவோருக்கான மையம்

மதுரையில் வருமான வரி செலுத்துவோர் மையம் நிறுவப்படுவதை அறிவிப்பதில் வருமான வரித்துறை மகிழ்ச்சியடைகிறது. இது 2025 ஜனவரி 29 முதல் 31 வரை செயல்படும். இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோருக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுகள், வளங்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்கான துறையின் செயல்பாட்டில் ஒரு பகுதியாகும். வரி செலுத்துனர் மையத்தின் அம்சங்கள் வரி செலுத்துவோர் மையத்தில் இடம்பெறும் அரங்குகள் வரி செலுத்துவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது: வரி தொடர்பான அத்தியாவசியத் தகவல்களின் ஆதாரமாக இவை செயல்படும்.  வரி செலுத்துவோர் தங்கள் வரி பொறுப்புகளை திறம்பட வழிநடத்த துல்லியமான மற்றும் …

Read More »

பாலகாட் சுரங்கத்தில் 76-வது குடியரசு தின விழா தேசபக்தியுடன் கொண்டாடப்பட்டது

ஒற்றுமை மற்றும் தேசபக்தி உணர்வுகளோடு மாங்கனீஸ் தாது (இந்தியா) லிமிடெட் அதன் பாலகாட் சுரங்கத்தில் நாட்டின் 76 வது குடியரசு தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது. இந்நிறுவனத்தின் தலைவர் திரு அஜித் குமார் சக்சேனா தேசியக் கொடியை ஏற்றி வைத்ததுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. அவருடன் நிதித்துறை இயக்குநர் திரு ராகேஷ் துமானே; திரு எம்.எம்.அப்துல்லா, இயக்குநர் (உற்பத்தி மற்றும் திட்டமிடல்); திருமதி ரஷ்மி சிங், இயக்குநர் (வர்த்தகம்), திருமதி சுஷ்மா …

Read More »

இந்திய புள்ளியியல் நிறுவனத்தை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாற்ற நடவடிக்கை

தொலைநோக்கு பார்வை கொண்ட புள்ளியியல் நிபுணர் பேராசிரியர் பிரசாந்தா சந்திர மஹலானோபிஸ்-ஸால் 1931-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ஐஎஸ்ஐ), புள்ளிவிவர ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 1959-ம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்ட இந்நிறுவனமானது புள்ளியியல் முறைகளை மேம்படுத்துவதிலும், பல்வேறு பிரிவுகளில் அவற்றின் பயன்பாடுகளிலும் முன்னோடியாக உள்ளது. ஐ.எஸ்.ஐ கவுன்சில் இந்த நிறுவனத்தின் நிர்வாகக் …

Read More »

மவுனி அமாவாசையையொட்டி 190 சிறப்பு ரயில்கள் உட்பட, பிரயாக்ராஜ் நிலையத்திலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு 360 ரயில்களை இந்திய ரயில்வே இயக்குகிறது

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்ய இந்திய ரயில்வே பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு சதீஷ் குமார், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது வருகை தரும் யாத்ரீகர்களுக்கு இடமளிக்க ரயில்வே விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார். இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய …

Read More »

டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, 2025 ஜனவரி 29-30 தேதிகளில் புதுதில்லியில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் இரண்டு நாள் தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லஜேயும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார். …

Read More »

மஹா கும்பமேளா 2025: மவுனி அமாவாசை அன்று பக்தர்களின் பாதுகாப்பு, வசதிக்காக மேளா நிர்வாகம், காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள்

மஹா கும்பமேளா 2025-ல் மவுனி அமாவாசையின் புனித தருணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவார்கள். அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில், மேளா நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அவசர காலங்களில், பக்தர்களுக்கு உதவ மேளா நிர்வாகம், காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது குறித்து மஹாகும்பமேளா நகர் காவல்துறை கண்காணிப்பாளர்  திரு ராஜேஷ் …

Read More »

தேர்வு குறித்த விவாதம் 2025

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைப் போக்குவதற்கு கற்றலைத் திருவிழாவாக மாற்றுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துள்ள முன்முயற்சியான தேர்வு குறித்த விவாதம் அதன் 8-வது பதிப்பில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2018-ம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து, தேர்வு குறித்த விவாதம் நாடு தழுவிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. 2025-ம் ஆண்டில்  8-வது பதிப்பில் 3.56 கோடி பதிவுகளைப் பெற்றுள்ளது. இது 7-வது பதிப்பிலிருந்து 1.3 கோடி பதிவுகளின் அதிகரிப்பை காட்டுகிறது. தேர்வு …

Read More »

விஜய் சதுக்கத்தில் 76 வது குடியரசு தின கொண்டாட்டங்கள் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றன

ரைசினா மலைகள் மீது சூரியன் மறையும் கம்பீரமான பின்னணியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் 2025 ஜனவரி 29 அன்று 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு நடைபெற உள்ளது. குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர், பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஏனைய மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் …

Read More »