Friday, December 05 2025 | 08:38:28 PM
Breaking News

Education

இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் இன்று (ஜூன் 30, 2025) நடைபெற்ற இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடிரயசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். ‘ஈஷாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நமது கலாச்சாரமானது அனைத்து உயிரினங்களிலும் கடவுளின் இருப்பைக் காண்கிறது  என்று கூறினார். கடவுள் – ஞானி – விலங்குகள் இடையேயான பிணைப்பின் நம்பிக்கை மற்றும் சிந்தனையை அடிப்படையாகக் …

Read More »

மென்பொருள் சார்ந்த வாகனங்களுக்கான திறனை மேம்படுத்த ஐஐடி மெட்ராஸ்-ன் நவீன தானியங்கி உபகரண ஆராய்ச்சிக்கான சீர்மிகு மையம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) நிறுவிய நவீன தானியங்கி உபகரண ஆராய்ச்சிக்கான சீர்மிகு மையமும் அக்செஞ்சர் நிறுவனமும் சிறப்புத் திறன்மிகு திட்டங்களை வழங்க இணைந்து செயல்படுகின்றன. அக்செஞ்சரின் மென்பொருள் சார்ந்த வாகன அகாடமியான லேர்ன்வான்டேஜ் மூலம் இந்த திறன்மிகு திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த முயற்சி, மென்பொருள்-சார்ந்த வாகனங்களை உருவாக்குவதற்கான திறமையை வளர்க்க விரும்பும் ஆட்டோமோடிவ் ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்கள்  மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. திறமையான நிபுணர்களுக்கான வளர்ந்துவரும் தேவையை பூர்த்தி செய்வதையும், மேம்பட்ட ஓட்டுநர் உதவி …

Read More »

சென்னை ஐஐடி சான்சிபார், ரசாயன செயல்முறைப் பொறியியலில் புதிய இளநிலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளது

  சென்னை ஐஐடி 2025-26ம் கல்வியாண்டில் ரசாயன செயல்முறைப் பொறியியலில்  புதிய இளங்கலை அறிவியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சான்சிபார் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நான்காண்டு முழுநேர இளநிலைப் பட்டப்படிப்பில் இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ரசாயனப் பொறியியல் அடிப்படையில் செயல்முறை ஆய்வகப் பணிகள், தொழில்துறை சார்ந்த திட்டங்கள், பல்வேறு துறைகளுக்கு இடையே கற்றலை ஊக்குவிக்கும் விருப்பப் பாடங்கள் என விரிவான பாடத்திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. உயர்ந்த கல்வித் தரத்துடன், உலகளாவிய முக்கியத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் சென்னை ஐஐடி, ஐஐடிஎம் சான்சிபார், நிறுவனங்களைச் …

Read More »

இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூன் 23, 2025) புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நம் நாட்டின் வரலாற்றில், கணக்காளர்கள் சமூகத்தில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளனர் என்று கூறினார். கணக்கியல் மற்றும் பொறுப்புகள் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளதே இதற்கு காரணமாகும். இந்த துறையின் உயர் பொறுப்புணர்வு காரணமாக, அது சிறப்பான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. நவீன காலத்தில், …

Read More »

கர்நாடகாவில் உள்ள ஆதிச்சுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் பெங்களூரு வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை  அமைச்சருமான திரு  அமித் ஷா இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஆதிச்சுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின்  பெங்களூரு வளாகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய  மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நமது கலாச்சாரத்தின் முக்கிய கொள்கை, தன்னைப் பற்றி மட்டுமல்லாமல், அனைவரின் நலன் மற்றும் மகிழ்ச்சியைப் பற்றியும் சிந்திப்பது என்று கூறினார். ஸ்ரீ ஆதிச்சுஞ்சனகிரி மடம் கிராமங்களில் சுகாதார மையங்களை நடத்துவதன் மூலமும், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை …

Read More »

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்களிடையே குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் உரை

சனாதனப் பெருமை வலுவான உறுதியுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று (17.06.2025) மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், இந்தியாவின் கல்வி வரலாற்றில் தக்ஷஷிலா, நாளந்தா, மிதிலா, வல்லபி என பல சிறந்த கற்றல் மையங்கள் இருந்ததாகக் கூறினார். இந்த நிறுவனங்கள், நமது பாரதத்தின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றதாக அவர் கூறினார். நாளந்தாவில் 1300 …

Read More »

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், உலகளாவிய சிறந்த கல்வி இந்தியாவில் குறைந்த செலவில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது: மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்வியை சர்வதேசமயமாக்குவதன் இலக்குகளை அடைவதில் கல்வி அமைச்சகம் ஒரு பெரிய நடவடிக்கையாக மும்பையில் ‘சர்வதேச கல்வி நகரத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவை ஒரு உலகளாவிய கல்வி மையமாக, குறைந்த செலவில் உயர்தரக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். இந்த முயற்சியின் மூலம், இந்தியாவை உலகளாவிய அறிவு மையமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். சிறந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள், இங்கு தங்களது வளாகங்களை நிறுவ இந்தியா ஊக்குவித்து வருகிறது என அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகளவில் விரிவுபடுத்த இது அதிகாரம் அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சி, கருத்துக்கள், திறமை, நம்பிக்கை ஆகியவற்றின் வளர்ந்து வரும் இருவழி இயக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். இந்தியா உலகளாவிய கல்வி சுற்றுச்சூழல் அமைப்பில் பங்கேற்பது மட்டுமல்லாமல் இந்தியா அதை வடிவமைக்கிறது என அவர் கூறினார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மும்பை/நவி மும்பையில் தங்கள் இருப்பை நிலைநிறுத்துவது இதுவே முதல் முறை, மேலும் சில பல்கலைக்கழகங்கள் UGC (S) இன் கீழ் நவி மும்பையில் வரவிருக்கும் கல்வி நகரத்தில் வளாகங்களை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளின் 5 பல்கலைக்கழகங்கள் மும்பையில் வளாகங்களை நிறுவுவதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவில் இந்தப் பல்கலைக்கழக வளாகங்களை நிறுவுவது மாணவர்களுக்கு நன்மை பயக்கும். உயர்கல்வித் துறையின் செயலாளர் மற்றும் யுஜிசி-யின் தலைவர் டாக்டர் வினீத் ஜோஷி, தமது உரையில், கல்வியின் சர்வதேசமயமாக்கலை உறுதி செய்வதிலும், இந்தியாவின் பரந்த, ஆற்றல்மிக்க திறமையை வெளிப்படுத்துவதிலும் கல்வி அமைச்சகம் மற்றும் யுஜிசி-யின் பங்கை எடுத்துரைத்தார். மத்திய கல்வி அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகம், மகாராஷ்டிரா அரசு, பல்கலைக்கழக மானிய குழு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும், தூதரகங்களின் பிரமுகர்களும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களை அனுமதிக்கும் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

Read More »

புதுச்சேரி பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவின் A+ தர அங்கீகாரம் பெற்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை

கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்பிற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புதுச்சேரி பல்கலைக்கழகம் அதன் ஐந்தாவது மதிப்பீட்டு சுழற்சியில் (2019–2024) தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவால் (NAAC) A+ தர அங்கீகாரம் பெற்றுள்ளது. இது பல்கலைக்கழகம் அதன் 40 ஆண்டுகால வரலாற்றில் பெற்ற மிக உயர்ந்த மதிப்பீடடாக இது உள்ளது.  முந்தைய இரண்டு சுழற்சிகளில் வழங்கப்பட்ட A தரங்களை விஞ்சி, இந்தியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட மத்திய பல்கலைக்கழகங்களில் …

Read More »

பயிற்சி மையங்களிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் கல்வித் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவர்களுக்கு ரூ 1.56 கோடி நிவாரணத்தை மத்திய அரசு வழங்குகிறது

மத்திய  நுகர்வோர் விவகாரத் துறை , கல்வித் துறையில் 600க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்காக  ரூ 1.56 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ், இன்ஜினியரிங் படிப்பு மற்றும் பிற திட்டங்களுக்கான பயிற்சி மையங்களில் பதிவுசெய்யப்பட்ட இந்த மாணவர்களுக்கு, பயிற்சி நிறுவனங்களால் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றிய போதிலும், முன்னர் பணத்தைத் திரும்பப் பெறுவது மறுக்கப்பட்டது. தேசிய நுகர்வோர் உதவி எண்  வழியாக மாணவர்கள் தாக்கல் செய்த குறைகளின் மூலம் இந்த நிவாரணம் சாத்தியமானது, இது …

Read More »

கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள்

கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள் என்ற கையடக்க சாதன வடிவமைப்பு சவால் என்பது குழந்தைகளின் கற்றல் அனுபவங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறந்த போட்டியாகும். இது இந்தியாவில் படைப்பாற்றல் சவால் போட்டியின் முதலாவது பகுதியாகும். மேலும் இது வேவ்ஸ் (உலக ஒலி, காட்சி & பொழுதுபோக்கு உச்சி மாநாடு) கீழ் நடத்தப்படுகிறது. ஒளிபரப்பு & தகவல்  ஏவிஜிசி-எக்ஸ்ஆர், மின்னணு ஊடகம், கண்டுபிடிப்பு, திரைப்படங்கள் ஆகிய நான்கு பகுதிகளில் இப்போட்டியில் …

Read More »