அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய அளவிலான அன்வேஷா 2.0 விநாடி வினா போட்டி சென்னையில் 2025 ஜூலை 18 அன்று நடைபெற்றது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் 75-வது ஆண்டு விழாவாக சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மத்திய விரிவுரை அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவர் டாக்டர் ராஜீவ லக்ஷ்மன் கரன்டிகார் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். சென்னை நகரில் உள்ள கல்லூரிகள், …
Read More »குடியரசுத் தலைவர் 2024–25 – ம் ஆண்டின் தூய்மைப் பணி கணக்கெடுப்பிற்கான விருதுகளை வழங்கினார்
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், 2024-25-ம் ஆண்டிற்கான தூய்மை பணி கணக்கெடுப்பிற்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்த விழாவில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், அத்துறைக்கான இணையமைச்சர் திரு டோகன் சாஹு முன்னிலையில், நாட்டில் தூய்மைப் பணிகளைத் திறம்பட மேற்கொண்ட 23 நகரங்கள் பாராட்டுதல்களைப் பெற்றன. …
Read More »தூய்மை நமது கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
தூய்மை நமது கலாச்சார, ஆன்மீக உணர்வுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். 2024-ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சர்வேக்ஷன்) விருதுகளை புதுதில்லியில் இன்று (17.07.2025) அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நமது நகரங்களில் தூய்மைக்கான முயற்சிகளை ஊக்குவிப்பதில் இந்த விருதுகள் வெற்றிகரமான நடைமுறையாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய தூய்மை ஆய்வை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், …
Read More »இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள 2014 தொகுதியின் உதவிப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய மத்திய செயலக அதிகாரிகள் குழு, அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு
இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள 2014 தொகுதியைச் சேர்ந்த உதவிப் பிரிவு அதிகாரிகள் (ASO) அடங்கிய மத்திய செயலக அதிகாரிகள் குழு, இன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளுக்கான இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்து, பதவி உயர்வு தொடர்பான விஷயங்கள் மற்றும் பிற சேவைப் …
Read More »“வர்த்தக கண்காணிப்பு காலாண்டு” இதழின் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக் புதுதில்லியில் வெளியிட்டது
2025 – ம் நிதியாண்டின் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) மூன்றாவது காலாண்டிற்கான “வர்த்தக கண்காணிப்பு” குறித்த வெளியீட்டின் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் அரவிந்த் விர்மானி இன்று (ஜூலை 14 – ம் தேதி) புது தில்லியில் வெளியிட்டார். இந்த காலாண்டு அறிக்கை இந்தியாவின் வர்த்தக நிலை குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குவதுடன், அமெரிக்க இறக்குமதி வரிக் கட்டமைப்புகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீதும் கவனம் செலுத்துகிறது. இது சர்வதேச வர்த்தக …
Read More »குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நபர்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ள நான்கு சிறப்புமிக்க ஆளுமைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், ஒவ்வொருவரது பங்களிப்புகளையும் எடுத்துரைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சட்டத் துறையில் முன்மாதிரியாக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றும் திரு உஜ்வல் நிகாமைப் பிரதமர் பாராட்டியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முதன்மையான பங்கு வகித்து, சாதாரண குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்த தொடர்ந்து பாடுபட்ட ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர் திரு நிகாம் என்று பிரதமர் கூறியுள்ளார். மாநிலங்களவைக்கு அவர் நியமிக்கப்பட்டதை திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளதுடன் அவர் நாடாளுமன்றப் பணியில் சிறக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது: “சட்டத்துறையிலும் நமது அரசியலமைப்பிலும் திரு உஜ்வால் நிகாமின் அர்ப்பணிப்பு முன்மாதிரியானது. அவர் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர் மட்டுமல்ல. முக்கியமான வழக்குகளில் நீதியை நிலை நிறுத்துவதில் முன்னணியில் இருந்துள்ளார். தமது சட்டப் பணியில் அவர், அரசியலமைப்பு விழுமியங்களை வலுப்படுத்தவும், பொது மக்கள் எப்போதும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்யவும் எப்போதும் பாடுபட்டு வந்துள்ளார். குடியரசுத் தலைவர் அவரை மாநிலங்களவைக்கு நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது நாடாளுமன்றப் பணிக்கு எனது வாழ்த்துகள்.” திரு சி. சதானந்தன் மாஸ்டரைப் பற்றிப் குறிப்பிட்டுள்ள, பிரதமர் அவரது வாழ்க்கை அநீதிக்கு எதிரான சின்னமாக திகழ்கிறது எனது விவரித்துள்ளார். வன்முறையையும் மிரட்டல்களையும் எதிர்கொண்ட போதிலும், திரு சதானந்தன் மாஸ்டர் தேச வளர்ச்சிக்கு உறுதியுடன் இருந்துள்ளார் என்று பிரதமர் கூறியுள்ளார். ஒரு ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் அவரது பங்களிப்புகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது: “திரு சி. சதானந்தன் மாஸ்டரின் வாழ்க்கை, அநீதிக்கு அடிபணியாமல் இருப்பதற்கும், துணிச்சலுக்கும் எடுத்துக்காட்டாகும்.வன்முறை, மிரட்டல் ஆகியவற்றால் தேச வளர்ச்சிக்கான அவரது உத்வேகத்தைத் தடுக்க முடியவில்லை. ஒரு ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். மாநிலங்களவை உறுப்பினராக அவரது பணிக்கு வாழ்த்துகள்.” திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவின் நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர், அவர் ஒரு ராஜதந்திரி, அறிவுஜீவி, உத்திசார் சிந்தனையாளர் என பல வகைகளில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திலும் திரு ஷ்ரிங்லாவின் பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார். மாநிலங்களவைக்கு அவர் நியமிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது: “திரு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஒரு ராஜதந்திரி, அறிவுஜீவி, உத்திசார் சிந்தனையாளராக சிறந்து விளங்குகிறார். பல ஆண்டுகளாக, அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார், மேலும் நமது ஜி20 தலைமைத்துவத்திற்கும் அவர் பங்களித்தார். குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு அவர் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அவரது தனித்துவமான கண்ணோட்டங்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை பெரிதும் வளப்படுத்தும். @harshvshrinla” டாக்டர் மீனாட்சி ஜெயின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர், இது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று கூறியுள்ளார். அறிஞர், ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியர் என்ற வகையில் அவரது சிறப்பான பணிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார். கல்வி, இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் ஆகியவற்றில் அவரது பங்களிப்புகளைப் பிரதமர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். மாநிலங்களவையில் அவரது பணிக்குப் பி்ரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது; “டாக்டர் மீனாட்சி ஜெயின், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஒரு அறிஞர், ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியராக தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கல்வி, இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பணிகள் இத்துறைகள் சார்ந்த கல்வியை கணிசமாக வளப்படுத்தியுள்ளன. அவரது நாடாளுமன்ற பணிகளுக்கு எனது வாழ்த்துகள். @IndicMeenakshi”
Read More »பயிற்சி மையங்கள் இளைஞர்களை அச்சுறுத்தும் மையங்களாக மாறிவிட்டன: குடியரசு துணைத்தலைவர்
குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று, “ காளான்களைப் போல பெருகி வரும் பயிற்சி மையங்கள், நமது எதிர்காலமான நமது இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கவலைக்குரிய இந்தத் தீமையை நாம் அகற்ற வேண்டும். நமது கல்வி இவ்வளவு கறைபடுவதையும் களங்கப்படுத்தப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது” என்று கூறினார். ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய …
Read More »இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் இளைஞர் சக்தி: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு
நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்ற ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழாவில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வழியாக வழங்கினார். சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்துகொண்டு மத்திய அரசின் …
Read More »டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளின் இரண்டாண்டு கொண்டாட்டங்கள்
பாரத கேசரி டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளின் இரண்டாண்டு அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்களை கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் தொழில்துறை பயணத்தை வடிவமைத்த தொலைநோக்கு கொண்ட தலைவரின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தில்லியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், …
Read More »ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் உஜ்ஜயினியில் ஆகாஷ்வாணி மையத்தை மத்திய அரசு நிறுவ உள்ளது
மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, மத்தியப் பிரதேசத்தில் நடந்து வரும் மற்றும் எதிர்கால வளர்ச்சி முயற்சிகள் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. ஊடக தொடர்பு, பொதுத் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான …
Read More »
Matribhumi Samachar Tamil