Saturday, December 27 2025 | 02:11:06 PM
Breaking News

National

இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது என்று  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  திருப்பதியில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளி, பாதுகாப்பு, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றில் உலகளாவிய சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது என்று அவர் கூறினார். …

Read More »

பிரதமரின் உரையை தமிழில் மொழிபெயர்க்க பாஷினி செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் பயன்படுத்தும் புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் செயற்கை  நுண்ணறிவுப் பயன்பாட்டின் மூலம் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பன்மொழி அணுகுலை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உரையை தமிழில் மொழிப்பெயர்க்க பாஷினி செயற்கை நுண்ணறிவுத்   தளத்தைப் புதுச்சேரி பயன்படுத்தியுள்ளது. 2025 டிசம்பர் 26 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, வீரச் சிறார் தின நிகழ்சியில் ஆற்றிய உரை, புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி அரங்கில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர்  என் …

Read More »

புதுதில்லியில் நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

புதுதில்லியில் இன்று (26.12.2025) நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நாள் குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்களான சாஹிப்சாதாக்களின்  வீரத்தை நினைவுகூரும் நாள் என குறிப்பிட்டார். அச்சிறார்களின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் என்றார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தத் தினம் கடைபிடிக்கப்படுவதை எடுத்துரைத்த அவர், இந்த நாளில் வீரச் சிறார் விருதுகள் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு நாடு …

Read More »

இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் வெளியிட்டார்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 25, 2025) வெளியிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம்  தற்போது ஓல் சிக்கி எழுத்துருவில் எழுதப்பட்டு சந்தாலி மொழியில் கிடைப்பது, அம்மொழியைப் பேசும் அனைத்து மக்களுக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அளித்திடும் என்று கூறினார். இது அவர்கள் தங்களது …

Read More »

டிசம்பர் 26 அன்று நடைபெறும் ‘வீர பாலகர் தினம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2025 டிசம்பர் 26 அன்று, நண்பகல் 12:15 மணியளவில் நடைபெறும் ‘வீர பாலகர் தினம்’ தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். வீர பாலகர் தினத்தைக் குறிக்கும் வகையில், சாஹிப்சாதாக்களின் அசாதாரண துணிச்சல் மற்றும் உன்னத தியாகம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் நோக்குடனும், இந்திய வரலாற்றின் இளம் வீரர்களின் உறுதியான துணிச்சல், தியாகம் மற்றும் வீரத்தைப் போற்றி நினைவுகூரும் …

Read More »

பாதுகாப்பு கணக்குகள் சேவைப் பிரிவு பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு

பாதுகாப்பு கணக்குகள் சேவைப் பிரிவின் 2024-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள், குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர்  திருமதி திரௌபதி முர்முவை இன்று (24.12.2025) சந்தித்தனர்.   அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், நாட்டின் ஆயுதப் படைகளின் கணக்குகளையும் நிதி மேலாண்மையையும் நிர்வகிக்கும்   முக்கியப் பொறுப்பை இந்த அதிகாரிகள் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டார். நிதியை செலவிடுதல், கணக்கு தணிக்கை, ஆலோசனை போன்றவற்றில் இந்த அதிகாரிகளின் பணி முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். இந்தப் …

Read More »

வருமான ஆதரவையும் நீண்ட கால கிராமப்புற உற்பத்தித்திறனையும் விபி-ஜி ராம் ஜி சட்டம் எவ்வாறு மேற்கொள்கிறது என்பது குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, வருமான ஆதரவு, சொத்து உருவாக்கம், விவசாய நிலைத்தன்மை மற்றும் நீண்ட கால கிராமப்புற உற்பத்தித்திறன் ஆகியவற்றை ஒரு சமரசமாக அல்லாமல், ஒரு தொடர்ச்சியாக, வளர்ச்சியடைந்த பாரதம் –ஜி ராம் ஜி சட்டம்  எவ்வாறு மேற்கொள்கிறது  என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் எழுதிய ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். “இந்த மசோதாவிற்கு முன்பு மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனைகள், தொழில்நுட்பப் …

Read More »

மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதன் மூலம் எல்விஎம்3 ராக்கெட் உலகத் தரம் வாய்ந்த நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

அதிக எடை கொண்ட அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைகோள், எல்விஎம்3-எம்6 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவிற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைத்துவத்தின் கீழ், இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருவதாகவும், விண்வெளித் தொழில்நுட்பத்தில், வளர்ந்து வரும் வலிமை, நம்பகத்தன்மை, உலகின் முன்னணி நாடாக இந்தியாவை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தியுள்ள செயற்கைகோள்களிலேயே மிகவும் அதிக எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்திய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தத் திட்டம் இந்தியாவின் கனரக செயற்கைகோள் ஏவுதல் திறன்களில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும்,  உலகளவில் வர்த்தக ரீதியில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான சந்தையில் அதன் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். எல்விஎம்3-எம்6 ராக்கெட் எவ்வித குறைபாடுமின்றி செயல்பட்டு, ப்ளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை நிர்ணயிக்கப்பட்ட அதன் புவி சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறைச் செயலாளரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி. நாராயணன் அறிவித்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இது என்றும், எல்விஎம்3-எம்6 ராக்கெட்டின் மூன்றாவது முழுமையான …

Read More »

உளவுத்துறை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 23, 2025) புதுதில்லியில் நடைபெற்ற ‘மக்களை மையமாகக் கொண்ட தேசியப் பாதுகாப்பு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் சமூகப் பங்கேற்பு’ என்ற தலைப்பில் உளவுத்துறை நூற்றாண்டு அறக்கட்டளை சொற்பொழிவில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதிலும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை உறுதி செய்வதிலும் ஐபி எனப்படும் உளவுத்துறை ஒரு சிறந்த பங்கை வகித்து வருகிறது என்று கூறினார். இந்த சொற்பொழிவுக்கான கருப்பொருள் நமது நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். …

Read More »

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகள் அவசியம்: குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகளின் அவசியத்தை, குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாநில பொதுப்பணி ஆணையகங்கள்  தலைவர்களின் தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார். நாட்டைக் கட்டமைப்பதில் பொதுப்பணி ஆணையங்களின் பங்களிப்பு குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அதிகாரிகளின் தகுதிகள் நிலைநிறுத்தப்படுவது மட்டுமின்றி, அது குறித்து வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நிர்வாக அமைப்புகளின் தரம், நேர்மை, செயல்திறனை வடிவமைப்பதில் பொதுப் பணி ஆணையங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் கூறினார். நாட்டிற்காக சேவையாற்றுவதற்கு திறமையான, பாரபட்சமற்ற மற்றும் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றும் தனிநபர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ள அரசியல் சாசன  நிறுவனங்களாக பொதுப் பணி ஆணையகங்கள் திகழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குடிமைப் பணிகளின் மீதான மாறிவரும் தேவைகளை வலியுறுத்திய அவர், டிஜிட்டல் நிர்வாகம், சமூக உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள், பொருளாதார மாற்றம் போன்ற தேசிய நலன் சார்ந்து நடவடிக்கைகளுக்கு அரசு அளித்து வரும் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது,தேர்ந்தெடுக்கப்படும் குடிமைப் பணி அலுவலர்களின் தரத்தைப் பொறுத்தது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Read More »