Friday, January 23 2026 | 12:13:52 AM
Breaking News

National

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (10.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையம் மற்றும் ஒடிசா மாநிலம் ராய்ரங்க்பூரில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலம் அவர் தொடங்கி வைத்தார்.  மேலும், தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு போட்டியையும் அவர் இன்று …

Read More »

பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

“ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள்” என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி,  2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார். இந்தக் கண்காட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மீட்டுக் கொண்டுவரப்பட்ட பிப்ரவா நினைவுச்சின்னங்களை, புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் …

Read More »

பெருநிறுவன விவாகரங்கள் அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீடுகள்

நாட்டில் உள்ள பெருநிறுவனங்களின் செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஆண்டில் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டது. 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அத்துறைக்கான மத்திய அமைச்சகம் மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக சிறு நிறுவனங்களில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்திற்கான உச்சவரம்பு மற்றும் விற்பனை உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எளிதாக வர்த்தகம் புரிவதை ஊக்குவிக்கும் வகையில், கொள்கைகள், ஒழுங்குமுறை நெறிமுறைகள், தொழில்நுட்பம் …

Read More »

பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ. 79,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுமத்தின் கூட்டத்தில், பாதுகாப்புப் படைகளின் பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29, 2025 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவுகளுக்கான லாய்ட்டர் வெடிமருந்து அமைப்பு, குறைந்த உயர இலகுரக ரேடார்கள், பினாகா  ராக்கெட் லாஞ்சர் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து தாக்கும் அமைப்பு போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 129-வது அத்தியாயத்தில், 28.12.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் வரவேற்கிறோம்.  சில நாட்களில் 2026ஆம் ஆண்டு தன்னைப் பதிவு செய்ய இருக்கிறது, நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, என் மனதில் ஓராண்டுக்கால நினைவுகள் நிழலாடுகின்றன – தேசத்தை ஒன்றாக இணைத்துவைத்த பல காட்சிகள், பல விவாதங்கள், பல சாதனைகள்.  2025ஆம் ஆண்டின் பல கணங்கள் பாரத நாட்டு மக்களான நமக்குப் பெருமிதத்தைச் சேர்த்தன.  தேசத்தின் பாதுகாப்புத் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை, …

Read More »

மோடி அரசின் மிகப்பெரிய அறிவியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக சாந்தி மசோதா வரலாற்றில் இடம்பிடிக்கும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரிய அறிவியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக, அணுசக்தி சீர்திருத்தம் தொடர்பான சாந்தி மசோதா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  புதுதில்லியில் இன்று (28.12.2025) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார். இந்தியாவின் அணுசக்தித் துறையில் சாந்தி மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்றும், பாதுகாப்பு, இறையாண்மை, பொது நலன் ஆகியவற்றில் சமரசமற்ற தரங்களைப் பேணும் அதே வேளையில், அமைதியான, தூய்மையான, நிலையான எரிசக்திக்கான திறனும் வலுப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். 60 ஆண்டுகளாக இதுபோன்ற சீர்திருத்தங்கள் மேற்கோள்ளப்படவில்லை என்றும், தடைகளை அகற்றி, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறனால் மட்டுமே இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார். அமைதியான அணுசக்தி பயன்பாட்டிற்கான இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், டாக்டர் ஹோமி பாபாவின் காலத்திலிருந்தே, இந்தியாவின் அணுசக்தி திட்டம் வளர்ச்சி, சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். சாந்தி மசோதா, அமைதியான நோக்கத்திலிருந்து மாறுபடவில்லை என்றும், தூய மின் உற்பத்தி, மருத்துவ பயன்பாடுகள், மேம்பட்ட ஆராய்ச்சி போன்ற  நோக்கங்களுக்காக அணுசக்தி விரிவாக்கத்தை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு அணுசக்தியும் இன்றியமையாதது என்று அவர் கூறினார். இந்தியா புதைபடிவ எரிபொருள்கள், நிலக்கரி ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்கும்போது அணுசக்தி ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அணுசக்தி திறன் 2014-ம் ஆண்டில் சுமார் 4.4 ஜிகா வாட்டாக இருந்தது எனவும் இப்போது இது கிட்டத்தட்ட இருமடங்காக 8.7 ஜிகாவாட் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.  வரும் ஆண்டுகளில் இதை கணிசமாக அதிகரிக்க தெளிவான திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் சுமார் 100 GW அணுசக்தி திறனை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படுகிறது …

Read More »

இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியா பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது என்று  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  திருப்பதியில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளி, பாதுகாப்பு, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றில் உலகளாவிய சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது என்று அவர் கூறினார். …

Read More »

பிரதமரின் உரையை தமிழில் மொழிபெயர்க்க பாஷினி செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் பயன்படுத்தும் புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் செயற்கை  நுண்ணறிவுப் பயன்பாட்டின் மூலம் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பன்மொழி அணுகுலை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் உரையை தமிழில் மொழிப்பெயர்க்க பாஷினி செயற்கை நுண்ணறிவுத்   தளத்தைப் புதுச்சேரி பயன்படுத்தியுள்ளது. 2025 டிசம்பர் 26 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, வீரச் சிறார் தின நிகழ்சியில் ஆற்றிய உரை, புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி அரங்கில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர்  என் …

Read More »

புதுதில்லியில் நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

புதுதில்லியில் இன்று (26.12.2025) நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நாள் குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்களான சாஹிப்சாதாக்களின்  வீரத்தை நினைவுகூரும் நாள் என குறிப்பிட்டார். அச்சிறார்களின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் என்றார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தத் தினம் கடைபிடிக்கப்படுவதை எடுத்துரைத்த அவர், இந்த நாளில் வீரச் சிறார் விருதுகள் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு நாடு …

Read More »

இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் வெளியிட்டார்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 25, 2025) வெளியிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம்  தற்போது ஓல் சிக்கி எழுத்துருவில் எழுதப்பட்டு சந்தாலி மொழியில் கிடைப்பது, அம்மொழியைப் பேசும் அனைத்து மக்களுக்கும் பெருமையையும், மகிழ்ச்சியையும் அளித்திடும் என்று கூறினார். இது அவர்கள் தங்களது …

Read More »